News March 22, 2024
2024 ஐபிஎல்லுக்கு பிறகு தோனி ஓய்வு?

2024 ஐபிஎல்லுக்கு பிறகு தோனி ஓய்வு பெற இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சர்வதேச கிரிக்கெட்டில் 2020ல் ஓய்வு பெற்ற போதும், ஐபிஎல்லில் தோனி விளையாடி வருகிறார். சிஎஸ்கே அணிக்கு தலைமை தாங்கி 5 முறை கோப்பையும் வென்று தந்துள்ளார். 2024 ஐபிஎல்லுக்கு பிறகு அவர் ஓய்வு பெற இருப்பதாகவும், இதனால் தான் சிஎஸ்கே அணியின் கேப்டனாக ருதுராஜ் நியமிக்கப்பட்டார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.
Similar News
News April 19, 2025
கைதான கொஞ்ச நேரத்திலேயே நடிகருக்கு ஜாமின்

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே, நடிகர் <<16150071>>ஷைன் டாம் சாக்கோ<<>>விற்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. மெடிக்கல் டெஸ்ட் உள்ளிட்ட அடுத்தகட்ட நடைமுறைகள் விரைவில் தொடங்கும் என கொச்சி போலீசார் தெரிவித்துள்ளனர். போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் அவர் கைதாவது இது 2-வது முறையாகும். கடந்த 2015-ம் ஆண்டும் இதேபோன்ற ஒரு வழக்கில் அவர் 2 மாதம் சிறையில் இருந்தார்.
News April 19, 2025
இளைஞரை நிர்வாணப்படுத்தி வண்டியில் கட்டி சித்ரவதை

உ.பி.யில் இளைஞரை நிர்வாணப்படுத்தி மாட்டு வண்டியில் கட்டி இழுத்து சென்று கிராம மக்கள் சித்ரவதை செய்துள்ளனர். விஷேஷ்வர்கஞ்சில் 22 வயது இளைஞர் மீது பாலியல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவரை பிடித்து சென்ற மக்கள், ஆடையை களைந்து நிர்வாணப்படுத்தி வண்டியில் கட்டி இழுத்து சென்றனர். அப்போது அவரை சிலர் கடுமையாகத் தாக்கினர். அவரின் சகோதரி அளித்த புகாரின்பேரில் போலீஸ் விசாரிக்கிறது.
News April 19, 2025
200 சிக்சர்கள்.. கே.எல். ராகுல் சாதனை

IPLஇல் டெல்லி கேபிடல்ஸ் வீரர் கே.எல். ராகுல் 200 சிக்சர்களை விளாசி சாதனை படைத்துள்ளார். குஜராத் டைடன்ஸ்க்கு எதிராக இன்று நடந்த போட்டியில் அவர் சிக்சர் விளாசினார். இதன்மூலம் 200 சிக்சர் அடித்த வீரர்கள் பட்டியலில், அவர் இடம்பிடித்தார். அதாவது, 200 சிக்சர்கள் விளாசிய 6ஆவது இந்தியர், 11ஆவது சர்வதேச வீரர் என்ற பெருமையை பெற்றார். எனினும், 14 பந்துகளில் 28 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.