News March 22, 2024
2024 ஐபிஎல்லுக்கு பிறகு தோனி ஓய்வு?

2024 ஐபிஎல்லுக்கு பிறகு தோனி ஓய்வு பெற இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சர்வதேச கிரிக்கெட்டில் 2020ல் ஓய்வு பெற்ற போதும், ஐபிஎல்லில் தோனி விளையாடி வருகிறார். சிஎஸ்கே அணிக்கு தலைமை தாங்கி 5 முறை கோப்பையும் வென்று தந்துள்ளார். 2024 ஐபிஎல்லுக்கு பிறகு அவர் ஓய்வு பெற இருப்பதாகவும், இதனால் தான் சிஎஸ்கே அணியின் கேப்டனாக ருதுராஜ் நியமிக்கப்பட்டார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.
Similar News
News November 11, 2025
சற்றுமுன்: தங்க மகன் காலமானார்

ஆசிய கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற ‘தங்க மகன்’ விஷ்ணு ரகுநாதன்(27) விபத்தில் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. போபாலில் பைக்கில் சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விஷ்ணுவும், அவருடன் சென்ற மற்றொரு நபரும் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் விசாரித்து வருகிறது. 2024-ல் ஹாங்காங் ஆசியக் கோப்பை தொடரில் படகு போட்டியில்(kayaking) தங்கம் வென்று விஷ்ணு அசத்தியது குறிப்பிடத்தக்கது.
News November 11, 2025
‘நாங்கள் இந்தியர்கள்’ கைதான முஜாமிலின் சகோதரர்

ஃபரீதாபாத்தில் வெடிபொருள்கள் வைத்திருந்ததாக கைதான டாக்டர் முஜாமிலின் சகோதரர் ஆசாத் ஷகில், ‘நாங்கள் மனதார இந்தியர்கள், இந்தியாவுக்காக கல்வீச்சுக்கு ஆளானோம்’ என்று கூறியுள்ளார். எல்லோரும் அவரை ஒரு பயங்கரவாதி என்று குற்றம் சாட்டுகிறார்கள், ஆனால் எங்களுக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இச்சம்பவத்தால், தனது சகோதரியின் திருமணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
News November 11, 2025
ஹை அலர்ட்டில் பாகிஸ்தான்

டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, இந்தியா பதிலடி கொடுக்கலாம் என பாக்., உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதனையடுத்து, பாக்., ராணுவம் தனது அனைத்து விமானப்படை தளங்கள், விமான நிலையங்களுக்கும் ரெட் அலர்ட் கொடுத்துள்ளது. மேலும், ராணுவம், கடற்படை, விமானப்படை மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவும், தற்போதைய சூழலை உன்னிப்பாக கண்காணிக்கவும் அறிவுறுத்தியுள்ளது.


