News May 7, 2025

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடிவு

image

நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேசிய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு காங்கிரஸ் எப்போதும் எதிராகவே நின்றிருக்கிறது என்று குற்றம்சாட்டினார். எனினும், ஜாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பின் முக்கியத்துவம் கருதி அதனை நடத்த அமைச்சரவை முடிவெடுத்திருப்பதாக அவர் கூறினார்.

Similar News

News December 12, 2025

தமிழ் நடிகை தற்கொலை.. குவியும் இரங்கல்

image

பாக்கியலட்சுமி, சிறகடிக்க ஆசை உள்ளிட்ட சீரியல்கள் மூலம் பிரபலமான நடிகை ராஜேஸ்வரி தற்கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவர் சதீஷுடன் ஏற்பட்ட சண்டையால் சைதாப்பேட்டையில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, மன அழுத்தத்தில் இருந்த ராஜேஸ்வரி, அளவுக்கு அதிகமாக BP மாத்திரை சாப்பிட்டு இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். அவரது மறைவுக்கு சக நடிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். RIP

News December 12, 2025

மக்கள்தொகை கணக்கெடுப்பு: ₹11,718 கோடி ஒதுக்கீடு

image

2027-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த ₹11,718.24 கோடி ஒதுக்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த கணக்கெடுப்பு 2 கட்டங்களாக நடைபெறும். 2026 ஏப்ரல் – செப்டம்பரில் வீட்டுக் கணக்கெடுப்பும், 2027 பிப்ரவரியில் மக்கள்தொகை கணக்கெடுப்பும் நடத்தப்படும். நாட்டிலேயே முதல்முறையாக டிஜிட்டல் முறையில் கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. மேலும், இது 16-வது மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆகும்.

News December 12, 2025

ஆபீஸுக்கு சீக்கிரமா போகாதீங்க.. வேலை போய்டும்!

image

ஆபீஸ் தொடங்குவதற்கு முன்னே சென்றால், நல்ல பெயர் எடுக்கலாம் என நினைப்பவர்கள் கொஞ்சம் இத பாருங்க! ஆபீஸ் தொடங்குவதற்கு 40 நிமிஷத்திற்கு முன்பே செல்வதை வழக்கமாக கொண்டிருந்த ஸ்பெயின் பெண்ணுக்கு (22) வேலை போயுள்ளது. சீக்கிரமாக வரவேண்டாம் என சொல்லியும் அப்பெண் அதை மதிக்காததால், அவரை வேலையில் இருந்து தூக்கியுள்ளதாக அந்நிறுவனம் விளக்கமளித்துள்ளது. ஆபிஸ்’ல என்ன சொல்றாங்களோ அத மட்டும் கேளுங்க மக்காஸ்!

error: Content is protected !!