News March 29, 2024

மார்ச் மாதத்துடன் இவற்றிற்கு காலக்கெடு முடிவு!

image

வரி செலுத்துதல், முதலீட்டு திட்டங்கள் ஆகியவற்றுக்கு விண்ணப்பிப்பது, மற்றும் அப்டேட் செய்வதற்கான காலக்கெடு மார்ச் 31இல் முடிவடைகிறது. அவை ➫IT ரிட்டர்ன்களை தாக்கல் செய்ய வேண்டும் ➫மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்பவர்கள் Re-KYC பூர்த்தி செய்ய வேண்டும். ➫வீட்டுக் கடன்களில் பல வங்கிகள் வழங்கும் சிறப்பு தள்ளுபடிகள் மார்ச் 31 வரை கிடைக்கும். ஏப்ரல் முதல் புதிய விதி அமலுக்கு வரும் எனத் தெரிகிறது.

Similar News

News November 28, 2025

டிட்வா புயலின் வேகம் அதிகரிப்பு

image

டிட்வா புயலின் வேகம் அதிகரிக்க தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக 3 கிமீ வேகத்தில் நகர்ந்து வந்த புயலின் வேகம், தற்போது 7 கிமீ ஆக அதிகரித்துள்ளது. புயலானது, சென்னையில் இருந்து 490 கிமீ தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 380 கிமீ தொலைவிலும், காரைக்காலில் இருந்து 270 கிமீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இதனால், வேதாரண்யம் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

News November 28, 2025

அன்புமணி செய்தது கட்சி திருட்டு: ஜிகே மணி

image

தந்தை – மகன் சண்டையால் பாமக இரண்டாக பிரிந்து கிடக்கிறது. இந்நிலையில், ராமதாஸ் தலைமையிலான கட்சியே உண்மையான பாமக என தெரிவித்த ஜிகே மணி, EC-ல் போலியான ஆவணங்களை கொடுத்து அன்புமணி கட்சித் திருட்டு நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், அன்புமணி பாமக தலைவர் இல்லை என ராமதாஸ் அளித்த மனுவை தேர்தல் ஆணையம் நிராகரித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

News November 28, 2025

நாளை பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை… வந்தது அறிவிப்பு!

image

நாளை தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்ததாக சற்றுமுன் செய்தி வெளியானது. அந்த தகவல் சரியல்ல என்று தமிழக அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மழை நிலவரத்தை பொறுத்து அந்தந்த மாவட்ட கலெக்டர்களே விடுமுறையை அறிவிப்பார்கள் என்றும், மாநிலம் முழுவதற்குமான ஒரே அறிவிப்பு ஏதும் வெளியிடப்படவில்லை அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!