News March 18, 2024

கடலூர்: பேருந்து சக்கரத்தில் பாய்ந்து ஒருவர் பலி

image

கடலூர், திருப்பாதிரிப்புலியூர் பேருந்து நிலையத்தில் இன்று(மார்ச்.18) அதிகாலை 50 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் சென்னை புறப்பட தயாரான அரசு பேருந்தின் பின் சக்கரத்தில் திடீரென பாய்ந்து விழுந்ததில் அவரது தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசார் தற்கொலை செய்து கொண்ட மனநலம் பாதிக்கப்பட்டவர் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News February 7, 2026

கடலூர்: நடந்து சென்றவர் பைக் மோதி பலி

image

கீரப்பாளையம் கரைமேட்டை சேர்ந்தவர் நாகலிங்கம் (49). இவர் கடந்த பிப்.5 அன்று செட்டிக்குளத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது என்னநகரத்தை சேர்ந்த சுரேந்தர் (27) என்பவர் ஓட்டி வந்த பைக் அவர் மோதியதில், நாகலிங்கம் பலத்த காயமடைந்தார். இதையடுத்து சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

News February 7, 2026

கடலூர்: தொழிலாளி துடிதுடித்து பலி

image

கடலூர் மாவட்டம், ஊத்தாங்கால் கிராமத்தில் செயல்பட்டு வரும் டாக்கா என்ற தனியார் அனல் மின் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளியாக மணிவாசகம் (37) என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று இரவு அனல் மின் நிலையத்தின் பாய்லர் பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த போது, எதிர்ப்பாராத விதமாக சுடுசாம்பல் அவர் மீது கொட்டியதால், வெப்பம் தாங்க முடியாமல் மணிவாசகம் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

News February 7, 2026

கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விபரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று (பிப்.06) இரவு 10 மணி முதல் இன்று (பிப்.07) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம்,விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது

error: Content is protected !!