News March 18, 2024
கடலூர்: பேருந்து சக்கரத்தில் பாய்ந்து ஒருவர் பலி

கடலூர், திருப்பாதிரிப்புலியூர் பேருந்து நிலையத்தில் இன்று(மார்ச்.18) அதிகாலை 50 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் சென்னை புறப்பட தயாரான அரசு பேருந்தின் பின் சக்கரத்தில் திடீரென பாய்ந்து விழுந்ததில் அவரது தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசார் தற்கொலை செய்து கொண்ட மனநலம் பாதிக்கப்பட்டவர் குறித்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News December 6, 2025
கடலூர்: லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் கைது

விருத்தாசலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா திருத்தம் செய்வதற்கு, வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் முதுநிலை வருவாய் ஆய்வாளர் ராஜ்குமார் திருமுட்டம் கிராமத்தைச் சேர்ந்த நேரு என்பவரிடம் ரூ.15,000 லஞ்சமாக கேட்டுள்ளார். இந்நிலையில் லஞ்சம் தர விரும்பாத அவர், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து லஞ்சம் பெற்ற போது கையும் களவுமாக ராஜ்குமாரை போலீசார் கைது செய்தனர்.
News December 6, 2025
கடலூர்: ரயில் மோதி கல்லூரி மாணவன் பலி

காடாம்புலியூரை அடுத்த காட்டாண்டிக்குப்பத்தை சேர்ந்த பழனிசாமி மகன் சக்தி நாதன் (22). தனியார் கல்லூரியில் படித்து வந்து இவர் நேற்று பண்ருட்டி அருகே விழாமங்கலத்தில் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவ்வழியாக வந்த ரயில் மோதியதில், சக்திநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து கடலூர் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 6, 2025
கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விபரம்

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில் நேற்று (டிச.5) இரவு 10 மணி முதல் இன்று(டிச.6) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி உள்ளிட்ட இடங்களில் ரோந்து செல்லும் காவல் அலுவலர்கள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


