News March 18, 2024
கடலூர்: பேருந்து சக்கரத்தில் பாய்ந்து ஒருவர் பலி

கடலூர், திருப்பாதிரிப்புலியூர் பேருந்து நிலையத்தில் இன்று(மார்ச்.18) அதிகாலை 50 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் சென்னை புறப்பட தயாரான அரசு பேருந்தின் பின் சக்கரத்தில் திடீரென பாய்ந்து விழுந்ததில் அவரது தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசார் தற்கொலை செய்து கொண்ட மனநலம் பாதிக்கப்பட்டவர் குறித்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News January 25, 2026
கடலூர்: சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதே போன்று, A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar)
B – (Apr/May/Jun)
C – (Jul/Aug/Sep)
D – (Oct/Nov/Dec)
இனிமே உங்க சிலிண்டரை சரிபார்த்து வாங்குங்க. காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!
News January 25, 2026
கடலூர்: திருட்டு வழக்கில் தொடர்புடையவர் கைது

அண்ணாமலை நகர் காவல் ஆய்வாளர் அம்பேத்கர் தலைமையிலான காவல்துறையினர் நேற்று (ஜன.24) வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அம்மன் கோவில் பகுதியை சேர்ந்த தேவபாலன் என்பவரை விசாரணை செய்ததில், அவர் பல பகுதிகளில் மின்மாற்றிகளை திருடிய வழக்கில் தொடர்புடையவர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
News January 25, 2026
கடலூர் மாவட்டத்தில் 143.6 மில்லி மீட்டர் மழை பதிவு

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (ஜனவரி 25) காலை 8.30 மணி நிலவரப்படி, கடலூர் 18.9 மில்லி மீட்டர், கடலூர் ஆட்சியர் அலுவலகம் 17.4 மில்லி மீட்டர், வடக்குத்து 16 மில்லி மீட்டர், எஸ்ஆர்சி குடிதாங்கி, வானமாதேவி தலா 11 மில்லி மீட்டர், பண்ருட்டி 10 மில்லி மீட்டர் என மாவட்டம் முழுவதும் 143.6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.


