News March 18, 2024
கடலூர்: பேருந்து சக்கரத்தில் பாய்ந்து ஒருவர் பலி

கடலூர், திருப்பாதிரிப்புலியூர் பேருந்து நிலையத்தில் இன்று(மார்ச்.18) அதிகாலை 50 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் சென்னை புறப்பட தயாரான அரசு பேருந்தின் பின் சக்கரத்தில் திடீரென பாய்ந்து விழுந்ததில் அவரது தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசார் தற்கொலை செய்து கொண்ட மனநலம் பாதிக்கப்பட்டவர் குறித்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News December 4, 2025
கடலூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

கடலூர் மாவட்டத்தில் சிறுபான்மையின கைவினைக் கலைஞர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது என ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். இத்திட்டத்தில் ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. இதற்கு https://tamco.tn.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட சிறுபான்மையின அலுவலகத்தை நேரில் அனுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 4, 2025
கடலூர்: இடி விழுந்து கோயில் சேதம்

கடலூர் மாவட்டத்தில் டிட்வா புயல் காரணமாக கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ரெட்டிச்சாவடி அடுத்த ரங்கரெட்டிபாளையம் பகுதியில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. அப்போது அதே பகுதியில் உள்ள மாரியம்மன் கோயிலின் மீது மின்னல் தாக்கியதில் கோவிலின் சுவர் இடிந்து கீழே விழுந்தது. மேலும் மின் சாதன பொருட்களும் சேதமடைந்தன. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
News December 4, 2025
கடலூர்: அரசு பஸ் மோதி வாலிபர் துடிதுடித்து பலி

விருத்தாசலம் அடுத்த சித்தலூரை சேர்ந்தவர் குமார் மகன் நமச்சிவாயம் (22). இசைக் கலைஞரான இவர் நேற்று இரவு அதே பகுதியில் உள்ள விருத்தாசலம்- ஜெயங்கொண்டம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அரசு பேருந்து ஒன்று நமச்சிவாயம் மீது மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


