News October 1, 2025

அதிகரிக்கும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்

image

2023-ல் மட்டும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக நாடு முழுவதும் 1,77,335 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது 2022-ஐ காட்டிலும் 9.2% அதிகம் என NCRB அறிக்கை தெரிவிக்கிறது. இதன்படி, ஒரு லட்சம் குழந்தைகளில் 39.9 பேர் குற்றங்களுக்கு உள்ளாவதாக அறிக்கை கூறுகிறது. 2021-ல் 1,49,404 குற்ற வழக்குகள் பதிவாகியிருந்த நிலையில், 2022-ல் 1,62,449 ஆக உயர்ந்திருந்தது.

Similar News

News October 1, 2025

மல்லிகார்ஜுன கார்கே ஹாஸ்பிடலில் அனுமதி

image

உடல்நலக்குறைவு காரணமாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பெங்களூருவில் உள்ள தனியார் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர் காய்ச்சல் காரணமாக கார்கே ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. டாக்டர்கள் அவரை தீவிரமாக கண்காணித்து பரிசோதித்து வருகின்றனர். அவரது உடல்நிலை குறித்து விரிவான அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 1, 2025

BREAKING: தங்கம் விலை புதிய Record… இதுவே முதல்முறை

image

தங்கம் விலை ₹87 ஆயிரத்தை கடந்து, வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை 1 கிராமுக்கு ₹30 உயர்ந்து ₹10,890-க்கும், 1 சவரனுக்கு ₹240உயர்ந்து ₹87,120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த10 நாள்களில் மட்டும் தங்கம் விலை ₹4,800 அதிகரித்துள்ளது. இனி வரும் நாள்களில் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நகைக்கடை உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

News October 1, 2025

மூலிகை: நொச்சி இலையின் மருத்துவ பயன்கள்!

image

சித்த மருத்துவர்களின் அறிவுரையின்படி, நொச்சி இலைச் சாறு கல்லீரல், மண்ணீரல், நுரையீரல் வீக்கங்களை குணமாக்கும் தன்மை கொண்டவை *நொச்சி இலைச் சாறை இரவில் கட்டிகள் மீது பற்றுப் போட்டுவர அவை கரையும் *நொச்சிச் சாற்றை நரம்புப் பிடிப்பு, தலைநோய், இடுப்புவலிக்குத் தேய்த்துவர குணமாகும் *நொச்சி இலைச்சாறு. மிளகுத்தூள், நெய்யும் சேர்த்து கலந்து 2 வேளை சாப்பிட மூட்டுவலி, இடுப்பு வலி, வீக்கம் குணமாகும். SHARE.

error: Content is protected !!