News October 19, 2025
பாக்.,ன் கோழைத்தனமான தாக்குதல்: BCCI

ஆப்கனில் பாக்., நடத்திய வான்வழி தாக்குதலில் கபீர், சிப்கதுல்லா & ஹாரூன் ஆகிய 3 உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்நிலையில், இவர்களது இறப்புக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள BCCI, உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறியுள்ளது. பாக்.,ன் இந்த தாக்குதல் கோழைத்தனமானது என்றும் கண்டனம் தெரிவித்துள்ளது. விளையாட்டு வீரர்களின் இழப்பு கவலைக்குரிய ஒன்று எனவும் குறிப்பிட்டுள்ளது.
Similar News
News October 19, 2025
பெற்றோரை கவனிக்காத ஊழியர்களுக்கு சம்பளம் கட்!

அன்பையும், பாசத்தையும் ஊட்டி தோளில் தூக்கி வளர்த்த பெற்றோர்களை கடைசி காலத்தில் கைவிட்டு செல்வது வாடிக்கையாகி வருகிறது. இதற்கு முடிவுகட்ட தெலங்கானா அரசு முடிவு செய்துள்ளது. வயதான பெற்றோர்களை கவனிக்காத அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 10-15% பிடித்தம் செய்யப்பட்டு, பெற்றோருக்கு வழங்கப்படும் என அம்மாநில CM ரேவந்த் ரெட்டி அறிவித்துள்ளார். அவரது இந்த செயலை எப்படி பார்க்கிறீர்கள்? கமெண்ட் பண்ணுங்க.
News October 19, 2025
ஆப்கனிடம் இருந்து BCCI கற்று கொள்ள வேண்டும்: சிவசேனா

பாகிஸ்தானுடன் நடைபெற இருந்த கிரிக்கெட் தொடரில் இருந்து வெளியேறுவதாக <<18038009>>ஆப்கன்<<>> அறிவித்தது. இதை சுட்டிக்காட்டி, ஆப்கனிடம் இருந்து BCCI-யும், மத்திய அரசும் கற்று கொள்ள வேண்டும் என வேண்டும் என சிவசேனா (UBT) தெரிவித்துள்ளது. கிரிக்கெட்டை விட நாட்டு நலனுக்கு ஆப்கன் முக்கியத்துவம் கொடுத்ததையும் பாராட்டியுள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு ஆசிய கோப்பையில் PAK உடன் இந்தியா விளையாடியது.
News October 19, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: காலமறிதல் ▶குறள் எண்: 493 ▶குறள்: ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து
போற்றார்கண் போற்றிச் செயின். ▶பொருள்: பலம் இல்லாதவர் என்றாலும்கூட ஏற்ற இடத்தை அறிந்து, தம்மையும் காத்து, பகைவரோடு மோதுபவர், பலம் உள்ளவராய்ப் பகையை அழிப்பர்.