News September 30, 2025

சர்ச்சை ட்வீட்.. ஆதவ் அர்ஜுனா மீது வழக்கு பாய்ந்தது

image

சர்ச்சைக்குரிய ட்வீட் பதிவிட்ட ஆதவ் அர்ஜுனா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கை, நேபாள் போல தமிழகத்திலும் புரட்சியை உண்டாக்க வேண்டும் என்று அவர் X-ல் பதிவிட்டு சில நிமிடங்களிலேயே அதை நீக்கியிருந்தார். இந்த நிலையில் கலவரத்தை தூண்டும் வகையில் பதிவிட்டதாக அவர் மீது, சென்னை காவல்துறை வழக்குப்பதிந்துள்ளது. அவர் விரைவில் கைது செய்யப்படவும் வாய்ப்புள்ளது.

Similar News

News September 30, 2025

மகளை பெற்ற தந்தையா… ஹேப்பி நியூஸ்

image

மகளை பெறாத தந்தையரை விட, மகளை பெற்ற தந்தையர் 2 ஆண்டுகள் கூடுதலாக வாழ்வதாகவும், அவர்களின் மனநலமும், சுயமதிப்பும் சிறப்பாக உள்ளதாகவும் போலந்து ஆய்வில் தெரிய வந்துள்ளது. மகன்கள் இருந்தாலும், இல்லையென்றாலும் மகள்கள் இருந்தால் சராசரியாக 74 வாரங்கள் தந்தையரின் ஆயுள் கூடுகிறதாம். அதேபோல குழந்தைகள் இல்லாத பெற்றோரை விட, குழந்தைகள் உள்ள பெற்றோர் ஆரோக்கியமாகவும் நீண்ட ஆயுளுடனும் வாழ்கிறார்களாம். SHARE

News September 30, 2025

டிரம்புக்கு ₹217 கோடி நஷ்டஈடு வழங்கும் யூடியூப்

image

அமெரிக்காவில் கடந்த 2020-ம் ஆண்டு தேர்தலில் தற்போதைய அதிபர் டிரம்ப் தோல்வி அடைந்தார். அப்போது ஜோ பைடன் வெற்றியில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி, டிரம்ப் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தில் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர். இதனால் யூடியூப் உட்பட டிரம்பின் சோசியல் மீடியா கணக்குகள் முடக்கப்பட்டன. இதை எதிர்த்து டிரம்ப் வழக்கு தொடுத்த நிலையில், டிரம்புக்கு ₹217 கோடி நஷ்ட ஈடு வழங்க யூடியூப் ஒப்புக்கொண்டுள்ளது.

News September 30, 2025

அக்.2 அன்று பள்ளிகள் திறப்பு.. தமிழக அரசு அறிவிப்பு

image

அக்.2 விஜயதசமி அன்று அரசு, அரசு உதவிபெறும் துவக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் 1-ம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கையை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், தங்கள் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை விவரங்கள் EMIS தளத்தில் பதிவிடப்படுவதை மேற்பார்வை செய்ய CEO-க்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அக்.5-ம் தேதி வரை மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை தொடர்கிறது.

error: Content is protected !!