News September 30, 2025
சர்ச்சை ட்வீட்.. ஆதவ் அர்ஜுனா மீது வழக்கு பாய்ந்தது

சர்ச்சைக்குரிய ட்வீட் பதிவிட்ட ஆதவ் அர்ஜுனா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கை, நேபாள் போல தமிழகத்திலும் புரட்சியை உண்டாக்க வேண்டும் என்று அவர் X-ல் பதிவிட்டு சில நிமிடங்களிலேயே அதை நீக்கியிருந்தார். இந்த நிலையில் கலவரத்தை தூண்டும் வகையில் பதிவிட்டதாக அவர் மீது, சென்னை காவல்துறை வழக்குப்பதிந்துள்ளது. அவர் விரைவில் கைது செய்யப்படவும் வாய்ப்புள்ளது.
Similar News
News March 8, 2026
NDA-வில் விஜய் இணைய வேண்டும்.. பாஜக விருப்பம்!

விஜய்யை NDA கூட்டணியில் இணைக்க, <<19326229>>AP DCM பவன் கல்யாண்<<>> முயற்சிப்பதாக பேசப்படுகிறது. இந்நிலையில், விஜய், NDA கூட்டணியில் இணைய வேண்டும் என பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ANS பிரசாத் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதுதான் தனது லட்சியம் என விஜய் கூறுவது உண்மை என்றால், அவர் தங்களோடு இணைய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இது, அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
News March 8, 2026
சர்ச்சையில் அகமதாபாத் கிரிக்கெட் ஸ்டேடியம்!

இன்று WC T20I இறுதிப் போட்டி நடைபெறவுள்ள அகமதாபாத் ஸ்டேடியத்தில்தான், 2023-ம் ஆண்டின் WC ODI இறுதிப் போட்டியும் நடைபெற்றது. ஆனால், அப்போது இந்திய அணி தோற்றதை போல, இம்முறை நடந்து விடக்கூடாது என்பதற்காக மைதானத்தின் ஆடுகளம் மாற்றப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. பேட்டிங்கில் சிறப்பாக செயல்படும் இந்திய அணிக்கு உதவும் வகையில் ஆடுகளம் பேட்டிங்கிற்கு ஏதுவாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதாம்.
News March 8, 2026
எந்திரன் படத்தில் வந்தது நிஜமாகவே நடக்கப்போகுது!

எந்திரன் படத்தில் சிட்டி ரோபோவை உருவாக்கிய வசி, அது போர் சமயங்களிலும் பயன்படும் என கூறியிருப்பார். அதுபோல, எதிர்காலப் போர்களில் AI பங்கு அதிகமாக இருக்கும் எனவும், போர்க்களத்தில் சரியான முடிவுகளை எடுக்கவும், வெற்றிபெறவும் AI உதவும் என்றும் இந்திய முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுஹான் கூறியுள்ளார். அத்துடன் ரோபோக்கள் போர்தொழில் பழகும் நிலையும் உருவாகலாம் என நிபுணர்கள் சொல்கின்றனர்.


