News March 18, 2024
விருதுநகர் தொகுதியில் மீண்டும் காங்கிரஸ் போட்டி

மக்களவை தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் காங்கிரஸ் இடையே 10 தொகுதிகள் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. கடந்த 2019 தேர்தலில் விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூர் வெற்றிபெற்றார்.
Similar News
News July 9, 2025
விருதுநகரில் கிராம உதவியாளர் பணியிடங்கள் அறிவிப்பு

விருதுநகர் மாவட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் (தலையாரி) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் ஊதியமாக ரூ.11,100 – ரூ.35,100 வரை வழங்கப்படும். விண்ணப்பதாரர் 21 வயது நிறைவு செய்து அந்த வட்டத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். இதற்காக விண்ணப்பங்கள் விருதுநகர் மாவட்ட அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT
News July 9, 2025
சாத்தூரில் மதிமுக செயற்குழு கூட்டம்

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் ம.தி.மு.க., சார்பில் நெல்லை மண்டல அளவிலான செயற்குழு கூட்டம் இன்று மாலை 4 மணியளவில் தனியார் திருமண மஹாலில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் வைகோ மற்றும் மதிமுக கழக முதன்மைச் செயலாளர் துரை வைகோ உள்ளிட்ட ஏராளமான மதிமுக நெல்லை மண்டலத்துக்குட்பட்ட நிர்வாகிகள். மாவட்ட செயலாளர் கலந்து கொள்ள உள்ளனர்.
News July 9, 2025
சாத்தூர்: பட்டாசு தொழிலாளி ஓட ஓட வெட்டிக் கொலை

சாத்தூர் அருகே ஒத்தையால் கிராமத்தை சேர்ந்தவர் பட்டாசு தொழிலாளி சங்கர்(24). காதல் விவகாரம் தொடர்பாக நேற்று மாலை இவரை ஒரு கும்பல் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக ஓட ஓட வெட்டியத்தில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதில் கோவில்பட்டியை சேர்ந்த விஜயபாண்டி(23), ராஜபாண்டி(24), அபி(25) ஆகியோரை கைது செய்து மற்ற 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.