News September 10, 2025
சினிமா நடுவர்களுக்கானது அல்ல: பிருத்விராஜ் ஓபன் டாக்

‘ஆடுஜீவிதம்’ படத்திற்கு தேசிய விருது அளிக்கப்படாதது விவாதமானது. இதுகுறித்து பேசியுள்ள அப்படத்தின் நாயகன் பிருத்விராஜ், 10 பேர் உட்கார்ந்து ஒரு படத்தை பார்த்து மதிப்பீடு செய்யவோ (அ) ஒரு நடுவர் படம் பற்றி தீர்மானிப்பதற்காகவோ சினிமா உருவாக்கப்படுவதில்லை, மக்களுக்காகவே உருவாக்கப்படுகின்றன என கூறினார். அத்துடன், ஆடுஜீவிதம் படத்துக்கு மக்கள் ஏற்கெனவே மிகப்பெரிய விருதை வழங்கிவிட்டனர் என்றார்.
Similar News
News March 10, 2026
விஜய் நாளைக்கு டெல்லி செல்ல வேண்டாம்!

டெல்லி CBI அலுவலகத்தில் நாளை ஆஜராவதில் இருந்து விஜய்க்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கரூர் துயர வழக்கு விசாரணை தொடர்பாக நாளை ஆஜராகுமாறு இன்று அவருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. ஆனால், தேர்தல் பணி இருப்பதால் விலக்கு அளிக்குமாறு விஜய் தரப்பில் கோரப்பட்டிருந்தது. இதனை ஏற்று விஜய் நாளை CBI அலுவலகம் செல்வதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
News March 10, 2026
விஜய் NDA கூட்டணியில் சேரலாம்: இயக்குநர் மோகன் ஜி

NDA கூட்டணியில் விஜய்யை இணைக்க பவன் கல்யாண் பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் வெளியானது. இதை சுட்டிக்காட்டி, NDA கூட்டணியில் விஜய் இணைந்து செயல்படுவதே புத்திசாலித்தனம் என இயக்குநர் மோகன் ஜி பதிவிட்டுள்ளார். வெறும் 6,7 தெரிந்த முகங்களை வைத்து தேர்தலில் போட்டியிட்டு, வாக்குகளை பிரித்து யாரையோ 500, 1000 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிக்க வைப்பதை விட இது சிறந்தது எனவும் கூறியுள்ளார்.
News March 10, 2026
புதுச்சேரியில் மகளிர் வங்கி கணக்கில் ₹5,000 டெபாசிட்

தமிழகத்தை தொடர்ந்து, புதுச்சேரியிலும் மகளிர் வங்கி கணக்கில் இன்று ₹5,000 வரவு வைக்கப்பட்டுள்ளது. சிவப்பு நிற ரேஷன் அட்டைதாரர்களுக்கு பிப்ரவரி, மார்ச் மாதங்களுக்கான உரிமை தொகை ₹5,000 மொத்தமாக வழங்கப்படும் என CM ரங்கசாமி ஏற்கெனவே அறிவித்திருந்தார். அதன்படி, 63,000 குடும்ப தலைவிகளின் வங்கிக் கணக்கில் பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இதற்காக, ₹31.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


