News August 8, 2025
ஆணுறுப்பில் மிளகாய் பொடி.. அஜித் மரண வழக்கில் திருப்பம்

கோயில் காவலாளி அஜித் குமார் மரண வழக்கில், சிபிஐ விசாரணையில் அடுத்தடுத்து பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆணுறுப்பில் மிளகாய் பொடியை தூவி அஜித்தை போலீஸ் சித்ரவதை செய்த தகவல் ஏற்கெனவே வெளியானது. இந்நிலையில், தனிப்படை போலீஸுக்கு மிளகாய்ப் பொடி வாங்கி கொடுத்ததே அஜித்தின் நண்பர் பிரவீன் குமார்தான் எனத் தெரியவந்துள்ளது. இதுகுறித்து சிபிஐ தீவிரமாக விசாரித்து வருகிறது.
Similar News
News August 8, 2025
டிரம்ப்புக்கு ஷாக் கொடுத்த இந்தியா

அமெரிக்காவின் வரிவிதிப்புக்கு பதிலடியாக இந்தியாவும் ஆக்ஷனில் இறங்கியுள்ளது. போயிங் நிறுவனத்திடமிருந்து P-8I ஜெட் விமானங்கள் வாங்கும் $3.6 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்துள்ளது. ஜெட் உற்பத்திக்கான மூலப் பொருள்கள் இந்தியாவிலிருந்து செல்லும் நிலையில், டிரம்ப்பின் 50% வரிவிதிப்பால், அவற்றின் விலையும் 50% உயர்ந்துள்ளது. இதனால் ஜெட் விலையும் உயர்வதால் ஆர்டரை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.
News August 8, 2025
மாநிலக் கல்விக் கொள்கை ஒரு நாடகம்: அண்ணாமலை

அரசு வெளியிட்டுள்ள மாநில கல்விக்கொள்கை என்பது CM ஸ்டாலினின் நாடகம் என்று அண்ணாமலை விமர்சித்துள்ளார். திமுகவினர் நடத்தும் தனியார் பள்ளிகளில், இந்தி உள்பட பல மொழிகள் கற்றுக் கொடுக்கப்படுவதாக தெரிவித்த அவர், ஆனால் அரசுப் பள்ளிகளில் 2 மொழிகள்தான் கற்றுக் கொடுப்போம் என CM சொல்வதாக சாடியுள்ளார். ஏழை மாணவர்கள் 2 மொழி தான் கற்க வேண்டும் என்பதுதான் திமுகவின் கொள்கை எனவும் குற்றம்சாட்டினார்.
News August 8, 2025
நீதிபதி அழைத்தும் வரமறுத்த ராமதாஸ்..!

அன்புமணி தரப்பில் கூட்டப்படும் பொதுக்குழுவுக்கு தடைக் கோரி ராமதாஸ் தரப்பில் HC-ல் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதன் விசாரணையின் போது <<17340719>>ராமதாஸ், அன்புமணியிடம்<<>> தனியாகப் பேச வேண்டியிருப்பதால் இருவரையும் நேரில் வருமாறு நீதிபதி அழைத்தார். இதற்கு அன்புமணி தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் ராமதாஸால் வரமுடியாது என அவரது வழக்கறிஞர் தரப்பில் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.