News August 8, 2024
சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்

மகேந்திரவர்ம பல்லவரால் நிர்மாணிக்கப்பட்ட முதல் குடவரை விநாயகர் கோவில் என்ற பெருமைக்கு உரியது பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் திருக்கோவில். 1,600 ஆண்டுகள் பழமையான அர்ச்சுன வனத்தலமான இக்கோயிலுக்கு சதுர்த்தி நாளில் (இன்று), விரதமிருந்துச் சென்று, துதிக்கை வலம் சுழித்தபடி அருளும் கணபதிக்கு அருகம்புல் மாலை சாற்றி, கொழுக்கட்டைப் படைத்து வழிபட்டால் சங்கடங்கள் அனைத்தும் நீங்கும் என்பது ஐதீகம்.
Similar News
News December 7, 2025
எந்த மரம் அதிகளவில் ஆக்சிஜன் கொடுக்கிறது?

மனிதன் உயிர்வாழ மரங்கள் ஆக்சிஜனை வழங்குகின்றன என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், எந்த மரம் அதிக ஆக்சிஜனை வழங்குகிறது என தெரியுமா? ஆலமரம் தான் இந்த சிறப்பான காரியத்தை செய்கிறது. குறிப்பாக இரவில் அதிக ஆக்சிஜனை அவை வெளியிடுகின்றன. இதற்கடுத்து அரசமரமும், வேப்பமரமும் அதிக ஆக்சிஜனை கொடுக்கின்றன. நீங்களும் ஒரு மரத்தை நட்டு, வரும் சந்ததியினருக்கு உதவுங்கள். SHARE IT.
News December 7, 2025
இந்த மல்டி ஸ்டார் படமெல்லாம் பார்த்திருக்கீங்களா?

கேமியோ ரோல்களுக்கு கிடைக்கும் கைதட்டல்களுக்காக, கதையில் வேண்டுமென்றே சில கேரக்டர்கள் திணிக்கப்படுவதாக சமீப காலமாக விமர்சனங்கள் எழுகின்றன. ஆனால், 1980, 90 காலகட்டங்களில் 2 – 4 நடிகர்கள் வரை மெயின் ரோலிலேயே ஒரே படத்தில் நடித்துள்ளனர். அப்படமும் இன்று வரை ரசிக்கும்படியாகவே உள்ளது. அப்படிப்பட்ட சில படங்களை மேலே கொடுத்துள்ளோம். அதை swipe செய்து பாருங்கள். உங்களுக்கு பிடித்த படத்தை கமெண்ட் பண்ணுங்க.
News December 7, 2025
BREAKING: செங்கோட்டையன் அறிவித்தார்.. விஜய் புதிய முடிவு

ஈரோட்டில் வரும் 16-ம் தேதி விஜய்யின் கூட்டத்திற்கு மாற்று ஏற்பாடாக விஜயமங்கலம் டோல்கேட் அருகே 16 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். <<18493694>>முன்னதாக பவளத்தாம்பாளையத்தில்<<>> அனுமதி கேட்டு கடிதம் கொடுக்கப்பட்ட நிலையில், இந்த இடத்திற்கு அனுமதி கேட்டு மற்றொரு கடிதம் வழங்க உள்ளதாகவும் கூறினார். மேலும், விஜய்யின் வருகையால் ஈரோட்டில் மாபெரும் மாற்றம் நிகழும் என்றும் சூளுரைத்தார்.


