News August 8, 2024
சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்

மகேந்திரவர்ம பல்லவரால் நிர்மாணிக்கப்பட்ட முதல் குடவரை விநாயகர் கோவில் என்ற பெருமைக்கு உரியது பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் திருக்கோவில். 1,600 ஆண்டுகள் பழமையான அர்ச்சுன வனத்தலமான இக்கோயிலுக்கு சதுர்த்தி நாளில் (இன்று), விரதமிருந்துச் சென்று, துதிக்கை வலம் சுழித்தபடி அருளும் கணபதிக்கு அருகம்புல் மாலை சாற்றி, கொழுக்கட்டைப் படைத்து வழிபட்டால் சங்கடங்கள் அனைத்தும் நீங்கும் என்பது ஐதீகம்.
Similar News
News November 8, 2025
சற்றுமுன்: அதிமுகவில் மீண்டும் இணைந்தார்

அதிமுகவில் இருந்து விலகி அமமுகவில் ஐக்கியமான ஒன்றியச் செயலாளர் பொன்.சிவா மீண்டும் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் அவர் மீண்டும் அதிமுகவில் இணைந்தார். அவருக்கு பொன்னாடை போர்த்தி சி.வி.சண்முகம் வரவேற்றார். <<18233598>>திமுகவில் இருந்தும் முக்கிய நிர்வாகிகள்<<>> EPS முன்னிலையில் இன்று அதிமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
News November 8, 2025
ஆரோக்கியமான கல்லீரல் வேண்டுமா?

500-க்கு மேற்பட்ட வேலைகளை செய்து உடலை காக்கும் உன்னத உறுப்பாக இருப்பது கல்லீரல். ஆனால், நமது சில தவறான பழக்கங்கள் மற்றும் உணவு முறையால் கல்லீரல் பாதிக்கப்படுகிறது. கல்லீரல் பாதித்தாலே உள்ளுறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழக்க தொடங்கிவிடும். எனவே, கல்லீரலை காக்க தவிர்க்க வேண்டிய உணவுகளை மேலே போட்டோக்களாக கொடுத்துள்ளோம். swipe செய்து பார்த்துவிட்டு இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.
News November 8, 2025
மூச்சு முட்டும் டெல்லி காற்று… அதிகரித்த மாசுபாடு

தலைநகர் டெல்லி காற்றுமாசால் மோசமாக திணறி வருகிறது. இன்று அங்கு பல்வேறு இடங்களில் காற்றுமாசு (AQI) ‘மிக மோசமான’ அளவான 400-ஐ தாண்டியுள்ளது. பனியுடன் காற்றின் நுண்ணிய தூசுகளும் சேர்ந்துகொள்ள, காற்றின் தரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலை சமாளிக்கும் விதமாக அரசு அலுவலக நேரத்தை மாற்றியமைப்பது, வாகனப் போக்குவரத்தை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை டெல்லி அரசு மேற்கொண்டுள்ளது.


