News April 3, 2025

12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

image

கோவை, நீலகிரி, திருப்பூர், மதுரை, தேனி, தென்காசி, நெல்லை, குமரி, சேலம், தூத்துக்குடி, திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று (ஏப்.3) முதல் வரும் 5-ஆம் தேதி வரை சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

Similar News

News December 11, 2025

ரூமி பொன்மொழிகள்

image

*வருத்தப்படாதீர்கள். நீங்கள் இழக்கும் எதுவும் வேறொரு வடிவத்தில் திரும்ப வரும். *நீங்கள் எவ்வளவு அமைதியாகிறீர்களோ, உங்களால் அவ்வளவு அதிகமாகக் கேட்க முடியும். *உங்கள் இதயத்திற்கு வழி தெரியும். அந்தத் திசையில் ஓடுங்கள். *வாழ்க்கையின் நோக்கம் அன்பாக மாறும் போது அனைத்து சந்தேகங்கள், விரக்தி மற்றும் அச்சம் போன்றவை முக்கியமற்றதாகிவிடும். *நீங்கள் எதைத் தேடுகிறீர்களோ அது உங்களைத் தேடுகிறது.

News December 11, 2025

நீதிபதி சுவாமிநாதனுக்கு Z பாதுகாப்பு வழங்குக: கஸ்தூரி

image

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதி G.R.சுவாமிநாதனை, தேசவிரோத சக்திகள் சமூக வலைதளங்களில் மிரட்டுவதாக கஸ்தூரி குற்றஞ்சாட்டியுள்ளார். இதனால் அவருக்கு மத்திய அரசு Z பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், திருப்பரங்குன்றத்தில் உள்ள இந்து, முஸ்லிம்களே ஒன்றும் சொல்லாத நிலையில், அரசியலுக்கு திமுக அரசு சர்ச்சையை எண்ணெய் ஊற்றி வளர்ப்பதாகவும் விமர்சித்துள்ளார்.

News December 11, 2025

தீயில் உடல் கருகும் போது தாய்லாந்துக்கு டிக்கெட்

image

<<18509384>>கோவா இரவு விடுதியில்<<>> 25 பேர் உடல் கருகி பலியாகிக் கொண்டிருந்த சமயத்தில், விடுதி உரிமையாளர்கள் தாய்லாந்துக்கு விமான டிக்கெட் புக் செய்தது தெரியவந்துள்ளது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடிய நள்ளிரவு 1:17 மணிக்கு டிக்கெட் புக் செய்து, அதிகாலை 5:30 மணிக்கு தாய்லாந்து தப்பி ஓடியுள்ளனர். அதேபோல், அவர்கள் பயன்படுத்தும் சிம் கார்டுகளும் வீட்டு வேலைக்காரருடையது என போலீசார் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!