India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நரிக்குடி பனைக்குடியைச் சேர்ந்தவர் உதயகுமார் 31. மாற்றுத்திறனாளியான இவர் ஓட்டலில் வேலை செய்கிறார்
பொட்டப்பசேரியை சேர்ந்த முருகனுடன் பழக்கமானார். திருச்சுழி நெடுஞ்சாலைத் துறையில் வேலை பார்ப்பதாகவும், மாற்றுத்திறனாளி இட ஒதுக்கீட்டில் எழுத்தர் வேலை வாங்கித் தருவதாகவும் உதயகுமாரிடம் முருகன் ஆசை வார்த்தை கூறி, ரூ.10லட்சம் மோசடி செய்தார். முருகனை கைது செய்த போலீசார் , மேலும் 11 பேரை தேடி வருகின்றனர்.
ஶ்ரீவில்லிபுத்தூர் சத்யா நகரை சேர்ந்த ராமசாமி மகன் ராம்குமார்(34). இவர் மீது கடந்த மே மாதம் கொலை வழக்கும், அக்.மாதம் ஒப்பந்த நிறுவன மேலாளரை தாக்கி பணம் பறித்த வழக்கும், நவ.மாதம் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை மிரட்டிய வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. இதனையடுத்து எஸ்.பி.கண்ணன் பரிந்துரையின் பேரில்,மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில்,ராம்குமாரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே அரசு வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி பனைக்குடியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி உதயகுமார் என்பவரை ஏமாற்றி சுமார் 11 இலட்சம் ரூபாய் மோசடி செய்ததாக போலி நெடுஞ்சாலைத்துறை ஊழியரான கட்டனூர் அருகே உள்ள பொட்டப்பச்சேரி கிராமத்தைச் சேர்ந்த முருகன் உள்ளிட்ட 12 பேர் மீது நீதிமன்ற உத்தரவின் பேரில் வழக்குப்பதிவு செய்த நிலையில், முருகனை நரிக்குடி போலீசார் கைது செய்தனர்.
ஶ்ரீவில்லிபுத்தூர் சத்யா நகரை சேர்ந்த ராமசாமி மகன் ராம்குமார்(34). இவர் மீது கடந்த மே மாதம் கொலை வழக்கும், அக்.மாதம் ஒப்பந்த நிறுவன மேலாளரை தாக்கி பணம் பறித்த வழக்கும், நவ.மாதம் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை மிரட்டிய வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. இதனையடுத்து எஸ்.பி.கண்ணன் பரிந்துரையின் பேரில்,மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில்,ராம்குமாரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.
வேளாண் துறை சார்பில் விவசாயிகளுக்கு மானிய விலையில் பவர் டில்லர் பெற அதிகபட்சம் ரூ.1.20 லட்சம், விசைகளை எடுக்கும் கருவிகளுக்கு அதிகபட்சம் ரூ.63 ஆயிரம் அல்லது கருவியின் மொத்த விலையில் 50 சதவீத இவற்றில் எது குறைவோ அத்தொகை சிறு, குறு, ஆதிதிராவிடர் , பழங்குடியினர், பெண் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதர விவசாயிகளுக்கு அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட மொத்த விலையில் 40% மானியமாக வழங்கப்படுகிறது.
கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தை சேர்ந்தவர் தொழிலதிபர் கஃபூரை ஏப்.13.2023 அன்று விருதுநகரை சேர்ந்த ஆயிஷா உள்ளிட்ட 4 பேர் கொலை செய்தனர். இது குறித்து போலீசார் விசாரித்த போது மாந்திரீகம் மூலம் 4760 கிராம் தங்க நகைகளை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி அவரை கொலை செய்து நகையை திருடிச்சென்றது தெரியவந்துள்ளது. நகைக்காக தொழிலதிபரை கொன்ற வழக்கில் 20 மாதங்களுக்குப் பிறகு கொலையாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
தேனி பகுதியைச் சேர்ந்தவர் வைரவன்மாரி. இவர் மினி வேனில் இன்று காலை தேனியில் இருந்து வாழைப்பழங்களை ஏற்றி விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூருக்கு இறக்குவதற்காக சாமிநத்தம் அருகே வந்து கொண்டிருந்த போது எதிரே செங்கல் ஏற்றி வந்த லாரி நேருக்கு நேர் மோதியது. இதில் சம்பவ இடத்திலே வாழைப்பழம் ஏற்றி வந்த டிரைவர் வைரவன்மாரி உயிரிழந்தார்.சம்பவம் குறித்து மல்லி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தென் மத்திய ரயில்வே சார்பில் தமிழகம் வழியாக இயக்கப்படும் நான்கு ரயில்களில் இரண்டு முன்பதிவு இல்லா பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது. திருப்பதி-கொல்லம், கச்சக்குடா- முர்தேஷ்வர், கச்சக்குடா-மதுரை, மதுரை-கச்சகுடா ஆகிய ரயில்களில் கூடுதலாக தலா இரண்டு முன்பதிவு விழா பெட்டிகள் இணைக்கப்படுகின்றன என ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குட்டி ஜப்பான் என அழைக்கப்படும் சிவகாசியில் பட்டாசு மற்றும் அச்சு தொழில் பிரதானமாக விளங்குகிறது. இந்நிலையில் இங்கு தற்போது 2025ஆம் ஆண்டிற்கான காலண்டர் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு ரூ.300 கோடி வரை வர்த்தகம் நடைபெற்ற நிலையில் இந்த ஆண்டு 400 கோடி அளவிற்கு இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து ஆர்டர்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக காலண்டர் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் சமூக நலத்துறையினர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கலப்பு திருமண திட்டத்தில் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 892 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் 892 பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், 671 பேருக்கு உதவித்தொகை, தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 221 பேருக்கு நிலுவையில் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.