India's largestHyperlocal short
news App
            Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

அருப்புக்கோட்டையில் குற்ற சம்பவங்களை தடுக்க நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தது. இந்நிலையில் அப்பகுதியில் தற்போது வரை சுமார் 500 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை உடனுக்குடன் கண்டறிய இக்கேமராக்கள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இதனால் குற்ற சம்பவங்கள் குறையும் என போலீசார் தெரிவித்துள்ளனர்

சிவகாசி பங்குனி பொங்கல் விழாவை முன்னிட்டு வரும் 7 மற்றும் 8ம் தேதிகளில் ஹெலிகாப்டர் ரைடு நடைபெற உள்ளது. விருதுநகர் மாவட்டத்தை சுற்றிப் பார்க்கும் வகையிலான ஹெலிகாப்டரில் பயணிக்கும் நபர்கள் அனைவருக்கும் சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஏப்ரல் 25 முதல் மே 25ஆம் தேதி வரை நடைபெறும் பொருட்காட்சிக்கு செல்ல 3100 ரூபாய் மதிப்பிலான நுழைவு கட்டண டிக்கெட் இலவசமாக வழங்கப்படுகிறது.

விருதுநகர் மாவட்டத்தில சுத்திப் பார்க்க எக்கச்சக்க டூரிஸ்ட் ஸ்பாட் இருக்கு.. அதுல முக்கியமா போக வேண்டிய 10 இடங்கல சொல்றேன் போய் பாருங்க..
ஆண்டாள் ரெங்கமன்னார் கோயில்
சதுரகிரி கோயில்
ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் கோயில்
மடவார் வளாகம் வைத்தியநாதர் கோயில்
ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோயில்
செண்பகத்தோப்பு
அய்யனார் அருவி
ஸ்ரீபத்ரகாளியம்மன் கோயில்
பிளவக்கல் அணை
குல்லூர் சந்தாய் நீர்த்தேக்கம்
Share It.

சாத்தூர் அருகே கோல்வார்பட்டியில் கோயில் கொண்டிருக்கும் அன்னை மீனாட்சி இப்பகுதி மக்களின் இஷ்டதெய்வமாக கோலோச்சி வருகிறாள். இங்கு அம்பாளும், சுவாமியும் கிழக்கு நோக்கி எழுந்தருளியும், மீனாட்சி திருக்கரத்தில் கிளிக்கு பதிலாக தாமரையை ஏந்தியபடி தரிசனம் தருகிறாள்.11 வாரங்கள் மீனாட்சியை வணங்கி, கடைசி வாரம் ஹோமம் செய்தால் பெண்களுக்கு மாங்கல்ய பலம் பெருகும், தீர்க்க சுமங்கலியாக வாழும் பாக்கியம் கிடைக்கும்.

சிவகாசி பராசக்தி காலனியைச் சேர்ந்தவர் சேதுராஜ்(47). உணவக ஊழியரான இவர் பணி முடிந்து திருத்தங்கல் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னாலிருந்து வந்த மற்றொரு பைக் மோதியதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார். விருதுநகர் அரசு கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்து குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக 2023-24 ஆம் ஆண்டில் தமிழகத்திலேயே அதிகப்படியான குடும்ப நல அறுவை சிகிச்சை செய்தமைக்காக மாநில அளவில் முதல் மற்றும் இரண்டாமிடம் பெற்றமைக்காக விருதுகள் பெற்ற மருத்துவ அலுவலர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், இ.ஆ.ப.,பெற்ற விருதினை காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

ராஜபாளையத்தில் SDPI கட்சி சார்பில் நடைபெற்ற சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு நோன்பு கஞ்சி அருந்தினார். பின்னர் பேசிய அவர் இஸ்லாமியர்களுக்கும், விஸ்வகர்மா சமுதாயத்தில் பிறந்த எனக்கும் தொப்புள்கொடி உறவு உள்ளது. இஸ்லாமியர்களை நான் சித்தப்பா என அழைப்பேன், அவர்கள் என்னை மகன் என அழைப்பார்கள் என பேசினார்.

அருப்புக்கோட்டை அருகே ஆத்திப்பட்டியில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோர்கள் தங்களது குறைகளை நேரில் தெரிவிப்பதற்காக மின் நுகர்வோர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (மார்ச்.25) காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்களுடைய குறைகளை நேரில் தெரிவித்து பயன்பெறுமாறு மின்வாரிய செயற்பொறியாளர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

சிவகாசி மாநகர் பகுதிகளில் மட்டும் கடந்த ஒரு மாதத்தில் நான்கு கொலைகள் நடைபெற்றுள்ளது பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. சில கொலைகள் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாகவும், சில கொலைகள் பழிக்கு பழியாக நடைபெற்ற நிலையில் அதன் தொடர்ச்சியாக மேலும் கொலைகள் நடைபெறாமல் தடுக்க சந்தேகப்படும் நபர்களை கண்காணிக்கும் பணியில் தனிப்பிரிவு மற்றும் உளவுத்துறை காவல்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

மதுரை ஈச்சனேரி பகுதியில் விருதுநகரை சேர்ந்த மலையரசன் என்ற காவலர் மார்ச்18-ல் எரித்து கொல்லப்பட்டார். இதில் வில்லாபுரத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் மூவேந்தரை இன்று அதிகாலை கைது செய்ய முயன்ற போது ஆய்வாளர் மாரி கண்ணனை அரிவாளால் வெட்டிவிட்டு தப்ப முயன்ற போது போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மூவேந்தர் பணத்திற்காக கொன்றதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.