Virudunagar

News December 31, 2024

விருதுநகரில் இன்று வாண வேடிக்கை நிகழ்ச்சி

image

பட்டாசு தொழிற்சாலைகளின் பங்களிப்பை பெருமைப்படுத்தும் விதமாகவும், நவீன தொழில்நுட்பங்களுடன் தயாரிக்கப்பட்ட பட்டாசுகளை பொது மக்களுக்கு காட்சிப்படுத்தும் விதமாகவும் வாண வேடிக்கை நிகழ்ச்சி விருதுநகர் மாவட்டம் கே.வி.எஸ். மேல்நிலைப்பள்ளியில் உள்ள பொருட்காட்சித் திடலில் இன்று (டிச.31) இரவு 7 மணி முதல் நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு வாண வேடிக்கையைக் காண மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

News December 31, 2024

விடுப்பட்ட குழந்தைகளுக்கு இன்று கடைசி நாள்

image

தமிழகத்தில் தேசிய தடுப்பூசி அட்டவணையின் கீழ் மொத்தம் 11 வகையான தடுப்பூசிகள் குழந்தைகளுக்கு போடப்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் லட்சகணக்கான குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் போடப்படுகிறது. விருதுநகர் மாவட்டத்தில் விடுபட்ட குழந்தைகளுக்கான தடுப்பூசிகள் போடுவதற்கு இன்று கடைசிநாள் மேலும் அரசு சுகாதார நிலையங்ளில் குழந்தைகள் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.

News December 30, 2024

அனுமன் சுவாமிக்கு 5001 வடை மாலை

image

அருப்புக்கோட்டை அமுதலிங்கேஸ்வரர் கோவிலில் உள்ள அனுமன் சுவாமிக்கு அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு இன்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அனுமன் ஜெயந்தி முன்னிட்டு சிறப்பு யாகசாலை பூஜைகள் நடைபெற்று அனுமன் சுவாமிக்கு பல்வேறு வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 5001 எண்ணிக்கை கொண்ட வடை மாலை அனுமன் சுவாமிக்கு சாற்றப்பட்டது. இந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

News December 30, 2024

விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்

image

அருப்புக்கோட்டை அருகே பாலவநத்தம் கிராமத்தில் 18 அடி விஸ்வரூப ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. இந்த‌ கோவிலில் இன்று ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு பால்,பழம், பன்னீர் திருமஞ்சன பொடி, மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றது. பின்னர் ஆஞ்சநேயருக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

News December 30, 2024

அரசு பஸ் மோதி சிறுவன் பலி

image

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே நல்லமங்கலத்தை சேர்ந்த வேல்முருகன் மகன் சண்முகநாதன் 16. அந்த பகுதியை சேர்ந்தவர்களுடன் திருச்செந்துார் முருகன் கோயிலுக்கு பாதயாத்திரை சென்றார்.நேற்று காலை மானுார் அருகே ரோட்டோரமாக சென்றபோது சங்கரன்கோவிலில் இருந்து திருநெல்வேலி சென்ற அரசு பஸ் மோதியதில் தலையில் பலத்த காயமடைந்து இறந்தார். மானுார் போலீசார் விசாரித்தனர்.

News December 29, 2024

ஆண்டாள் கோயிலில் பகல் பத்து உற்சவம் தொடக்கம்

image

ஶ்ரீவி ஆண்டாள் கோயிலில் டிச.31 முதல் ஜன.9 வரை பகல் பத்து உற்சவம் நடக்கிறது. இதனை முன்னிட்டு டிச.31 மாலை 4.00 மணிக்கு வேதபிரான் திருமாளிகைக்கு ஆண்டாள், ரெங்கமன்னார் எழுந்தருளி பச்சை பரத்தலை பார்க்கும் உற்சவம் நடக்கிறது. முக்கிய நிகழ்வான ஏகாதசியை யை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு 2026 ஜன.10 காலை 7:05 மணிக்கு நடக்கிறது. அதனைத் தொடர்ந்து ஜன.10 முதல் 20 வரை ராப்பத்து உற்சவம் நடக்கிறது

News December 29, 2024

திருப்பாவை முற்றோதல் மாபெரும் சீர்வரிசை திருவிழா

image

ஸ்ரீவில்லிபுத்தூரில் 6 ஆம் ஆண்டு முப்பதும் தப்பாமே திருப்பாவை முற்றோதல் மாபெரும் சீர்வரிசை திருவிழா ஆண்டாள் ஆடிப்பூர கொட்டகையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை மணவாள மாமுனிகள் மடத்தின் 24 வது பீடாதிபதி சடகோப ராமானுஜ ஜீயர், சிறப்பு விருந்தாக கலந்து கொண்ட புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

News December 29, 2024

உணவு திருவிழாவில் 15000 பேர் பங்கேற்பு

image

சிவகாசி எஸ்.எச்.என்.வி. பள்ளி மைதானத்தில் ‘சுவையுடன் சிவகாசி-2024’ என்ற தலைப்பில் நேற்று மாலை உணவு திருவிழா துவங்கியது. உணவு திருவிழாவில் உலக அளவில் முக்கிய அசைவ உணவுகள், இந்தியாவின் பாரம்பரிய உணவு வகைகள், இடம்பெற்றன. முதல் நாளான நேற்று மொத்தம் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் மக்கள் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

News December 29, 2024

போலீஸ்காரர் மனைவியிடம் மோசடி செய்தவர் கைது

image

விருதுநகர் மாவட்டம் சிவகாசி முத்துராமலிங்கபுரம் காலனி கணேஷ் குமார்.இவர் திருத்தங்கல் போக்குவரத்து பிரிவில் போலீசாக பணிபுரிகிறார். இவரது மனைவி முனீஸ்பாண்டியிடம் ரமேஷ்குமார் என்பவர் எனக்கு அரசியல்வாதிகளை தெரியும் என்று சொல்லி அரசு வேலை வாஙகி தருவதாக கூறி ரூ.5 லட்சம் மோசடி செய்துள்ளார்.அவரை கைது செய்த போலீசார் அவருக்கு உடந்தையாக இருந்த திவ்யாலட்சுமியை தேடி வருகின்றனர்.

News December 28, 2024

மாநில அளவிலான திருக்குறள் வினாடி வினா போட்டி துவக்கம்

image

விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் இன்று (டிச.28) திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழாவை முன்னிட்டு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் விருதுநகர் மாவட்ட நிர்வாக ஒருங்கிணைப்பில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நடைபெற்ற மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான மாநில அளவிலான திருக்குறள் வினாடி வினாப் போட்டியினை ஆட்சியர் ஜெயசீலன் துவக்கி வைத்தார்.

error: Content is protected !!