Virudunagar

News April 8, 2025

டூவிலரில் சேலை சிக்கியத்தில் பெண் உயிரிழப்பு

image

சிவகாசியை சேர்ந்த ஜோதிமணி என்பவர் நேற்று காலை அவரது உறவினரின் மகன் மணிகண்டன் என்பவருடன் எப்போதும்வென்றானில் உள்ள கோவிலுக்கு டூவிலரில் சென்றுள்ளார். நாலாட்டின்புதூர் அருகே சென்ற போது காற்றில் பறந்த ஜோதிமணியின் சேலை திடீரென இருசக்கர வானகத்தின் சக்கரத்தில் சிக்கியதில் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். இதில் பலத்த காயமடைந்த ஜோதிமணி உயிரிழந்த நிலையில் மணிகண்டன் சிகிச்சை பெற்று வருகிறார்.

News April 7, 2025

விருதுநகர் மாவட்டம் வரலாற்று சாதனை

image

கொரோனாவுக்கு பின் தமிழகத்தில் பிரசவ கால தாய், சேய் இறப்பு விகிதம் குறைந்து வருகிறது. 2021- 22 இல் 1 லட்சம் பிரசவங்களில் 90 தாய்மார்கள் உயிரிழந்த நிலையில், 22-23இல் 52 ஆகவும், 23-24இல் 45 ஆகவும் குறைந்துள்ளது. விருதுநகரில் 23-24இல் 7991 பிரசவங்களில் உயிரிழப்பு எதுவும் இல்லை என்பது ஒரு வரலாற்று சாதனையாகும். நாட்டில் முதன்முறையாக விருதுநகர் தாய் இறப்பு இல்லாத மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News April 7, 2025

தாய் இறப்பு இல்லாத மாவட்டமாகும் விருதுநகர்

image

கொரோனாவுக்கு பின் தமிழகத்தில் பிரசவகால தாய், சேய் இறப்பு விகிதம் குறைந்து வருகிறது. 2021- 22 இல் 1 லட்சம் பிரசவங்களில் 90 தாய்மார்கள் உயிரிழந்த நிலையில், 22 – 23 இல் 52 ஆகவும், 23- 24 இல் 45 ஆகவும் குறைந்துள்ளது. விருதுநகரில் 23 – 24 இல் 7991 பிரசவங்களில் உயிரிழப்பு எதுவும் இல்லை என்பது ஒரு வரலாற்று சாதனையாகும். நாட்டில் முதன்முறையாக விருதுநகர் தாய் இறப்பு இல்லாத மாவட்டமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

News April 7, 2025

விருதுநகர் அமைச்சர்கள் வழக்கில் நீதிபதி விலகல்

image

விருதுநகர் அமைச்சர்களாக தங்கம் தென்னரசு, KKSSR ராமச்சந்திரன் மற்றும் இவர்களது குடும்பத்தினருக்கு எதிராக சொத்து குவிப்பு வழக்கை மறு விசாரணை நடத்த என உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது. இதற்கு எதிராக அமைச்சர்கள் உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் இருந்து விலகுவதாக நீதிபதி சுந்தரேஷ் தெரிவித்துள்ளார். மேலும் வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

News April 7, 2025

ஆண்டாள்,ரெங்கமன்னார் ஐந்தாம் நாள் காலை புறப்பாடு

image

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் ரெங்கமான்னார் திருக்கல்யாண திருவிழா கோலகலமாக (ஏப்.3) அன்று கருட கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையடுத்து 5-ம் திருநாளான இன்று காலை ஆண்டாள், ரெங்கமன்னார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார். ஏப்ரல் 11ஆம் தேதி ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.

News April 7, 2025

விருதுநகரில் அங்கன்வாடியில் வேலை வாய்ப்பு

image

விருதுநகர் மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 141 அங்கன்வாடி பணியாளர்கள், 115 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் செய்யப்பட உள்ளன. விண்ணப்பிக்க விரும்புவர்கள் www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து ஏப்.23 க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதில் ஊதியமாக பணியாளருக்கு ரூ.7700 – 24200, உதவியாளருக்கு ரூ.4100 – 12500 வரை வழங்கப்படும்.

News April 7, 2025

ஸ்ரீவி ஆண்டாள் ,ரெங்கமன்னார் நான்காம் நாள் இரவு புறப்பாடு

image

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் ரெங்கமான்னார் திருக்கல்யாண திருவிழா கோலகலமாக (ஏப்.3) அன்று கருட கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையடுத்து 4-ம் திருநாளான நேற்று இரவு ஆண்டாள் சேஷ வாகனத்திலும், ரெங்கமன்னார் கோவர்தனகிரி வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்தார். ஏப்ரல் 11ஆம் தேதி ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.

News April 7, 2025

டூவிலர் மோதியதில் 2 பேர் உயிரிழப்பு

image

விருதுநகர் அருகே பி.குமாரலிங்கபுரத்தை சேர்ந்த அமுதவள்ளி(39), மாரீஸ்வரி(39), இரவது மகள் முத்துமாரி(21), மீனாட்சி(14) உள்ளிட்டோர் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது மீசலூர் அருகே நடந்து சென்ற போது சரவணக்குமார்(25) என்பவர் ஓட்டிவந்த டூவிலர் இவர்கள் மீது மோதியது. இதில் 5 பேரும் காயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அமுதவள்ளி, சரவணன் ஆகியோர் உயிரிழந்தனர்.

News April 6, 2025

முன்னோர்கள் சாபம் தீர்க்கும் பூமிநாதர் கோயில்

image

திருச்சுழி பகுதியில் உள்ள பாண்டியர் காலத்துப் பூமிநாதர் கோயில், முன்னோர்களின் சாபம் தீர்க்கும் தலமாக நம்பப்படுகிறது. இதை மையப்படுத்தி திருச்சுழியை சுற்றி 8 இடங்களில் அஷ்ட லிங்கங்கள் உள்ளன. இங்குள்ள மூலவர் கல்யாண கோலத்தில் உள்ளதால் இங்கு வந்து வழிபட்டால் திருமண தடை நீங்கும் என்பது நம்பிக்கை. மேலும் இங்கு மோட்ச தீபம் ஏற்றினால் முன்னோர்கள் சாபம் நீங்கும் என்று நம்பப்படுகிறது. SHARE பண்ணுங்க.

News April 6, 2025

சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய திருவேங்கடமுடையான்

image

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு சொந்தமான நாடக சாலை தெருவில் உள்ள திருவேங்கடமுடையான் சன்னதியில் பங்குனி மாத சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி, சமேத திருவேங்கடமுடையான் சர்வ அலங்காரத்தில் எழுத்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

error: Content is protected !!