Virudunagar

News December 7, 2024

மாற்றுத்திறனாளியிடம் சுமார் 11 இலட்சம் மோசடி

image

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே அரசு வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி பனைக்குடியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி உதயகுமார் என்பவரை ஏமாற்றி சுமார் 11 இலட்சம் ரூபாய் மோசடி செய்ததாக போலி நெடுஞ்சாலைத்துறை ஊழியரான கட்டனூர் அருகே உள்ள பொட்டப்பச்சேரி கிராமத்தைச் சேர்ந்த முருகன் உள்ளிட்ட 12 பேர் மீது நீதிமன்ற உத்தரவின் பேரில் வழக்குப்பதிவு செய்த நிலையில், முருகனை நரிக்குடி போலீசார் கைது செய்தனர்.

News December 7, 2024

குண்டர் சட்டத்தில் இளைஞர் கைது

image

ஶ்ரீவில்லிபுத்தூர் சத்யா நகரை சேர்ந்த ராமசாமி மகன் ராம்குமார்(34). இவர் மீது கடந்த மே மாதம் கொலை வழக்கும், அக்.மாதம் ஒப்பந்த நிறுவன மேலாளரை தாக்கி பணம் பறித்த வழக்கும், நவ.மாதம் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை மிரட்டிய வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. இதனையடுத்து எஸ்.பி.கண்ணன் பரிந்துரையின் பேரில்,மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில்,ராம்குமாரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.

News December 7, 2024

விவசாயிகளுக்கு மானிய விலையில் இடுபொருட்கள்

image

வேளாண் துறை சார்பில் விவசாயிகளுக்கு மானிய விலையில் பவர் டில்லர் பெற அதிகபட்சம் ரூ.1.20 லட்சம், விசைகளை எடுக்கும் கருவிகளுக்கு அதிகபட்சம் ரூ.63 ஆயிரம் அல்லது கருவியின் மொத்த விலையில் 50 சதவீத இவற்றில் எது குறைவோ அத்தொகை சிறு, குறு, ஆதிதிராவிடர் , பழங்குடியினர், பெண் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதர விவசாயிகளுக்கு அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட மொத்த விலையில் 40% மானியமாக வழங்கப்படுகிறது.

News December 6, 2024

தொழிலதிபர் கொலையில் விருதுநகர் பெண் உட்பட 4 பேர் கைது

image

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தை சேர்ந்தவர் தொழிலதிபர் கஃபூரை ஏப்.13.2023 அன்று விருதுநகரை சேர்ந்த ஆயிஷா உள்ளிட்ட 4 பேர் கொலை செய்தனர். இது குறித்து போலீசார் விசாரித்த போது மாந்திரீகம் மூலம் 4760 கிராம் தங்க நகைகளை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி அவரை கொலை செய்து நகையை திருடிச்சென்றது தெரியவந்துள்ளது. நகைக்காக தொழிலதிபரை கொன்ற வழக்கில் 20 மாதங்களுக்குப் பிறகு கொலையாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

News December 6, 2024

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சாலை விபத்தில் இளைஞர் பலி

image

தேனி பகுதியைச் சேர்ந்தவர் வைரவன்மாரி. இவர் மினி வேனில் இன்று காலை தேனியில் இருந்து வாழைப்பழங்களை ஏற்றி விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூருக்கு இறக்குவதற்காக சாமிநத்தம் அருகே வந்து கொண்டிருந்த போது எதிரே செங்கல் ஏற்றி வந்த லாரி நேருக்கு நேர் மோதியது. இதில் சம்பவ இடத்திலே வாழைப்பழம் ஏற்றி வந்த டிரைவர் வைரவன்மாரி உயிரிழந்தார்.சம்பவம் குறித்து மல்லி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News December 6, 2024

4 ரயில்களில் கூடுதலாக முன்பதிவில்லா பெட்டிகள்!

image

தென் மத்திய ரயில்வே சார்பில் தமிழகம் வழியாக இயக்கப்படும் நான்கு ரயில்களில் இரண்டு முன்பதிவு இல்லா பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது. திருப்பதி-கொல்லம், கச்சக்குடா- முர்தேஷ்வர், கச்சக்குடா-மதுரை, மதுரை-கச்சகுடா ஆகிய ரயில்களில் கூடுதலாக தலா இரண்டு முன்பதிவு விழா பெட்டிகள் இணைக்கப்படுகின்றன என ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 6, 2024

சிவகாசியில் 400 கோடிக்கு ஆர்டர்

image

குட்டி ஜப்பான் என அழைக்கப்படும் சிவகாசியில் பட்டாசு மற்றும் அச்சு தொழில் பிரதானமாக விளங்குகிறது. இந்நிலையில் இங்கு தற்போது 2025ஆம் ஆண்டிற்கான காலண்டர் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு ரூ.300 கோடி வரை வர்த்தகம் நடைபெற்ற நிலையில் இந்த ஆண்டு 400 கோடி அளவிற்கு இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து ஆர்டர்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக காலண்டர் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

News December 5, 2024

கலப்புத் திருமண திட்டத்தில் 671 பேருக்கு தாலிக்கு தங்கம்

image

விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் சமூக நலத்துறையினர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கலப்பு திருமண திட்டத்தில் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 892 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் 892 பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், 671 பேருக்கு உதவித்தொகை, தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 221 பேருக்கு நிலுவையில் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

News December 5, 2024

பட்டாசு உற்பத்தியாளர்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை

image

தமிழ் தெரியாத வெளிமாநில தொழிலாளர்களை பட்டாசு வேதி பொருட்கள் கையாளுமிடங்களில் பணியமர்த்தக் கூடாது என மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெளி மாநில தொழிலாளர்களை பணியமர்த்தும் பட்டாசு ஆலை நிர்வாகங்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவில்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News December 4, 2024

அகழாய்வில் தென்பட்ட செங்கல் கட்டுமான சுவர்

image

வெம்பக்கோட்டையில் கடந்த ஜூன் 18 ஆம் தேதி முதல் 3 ஆம் கட்ட அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது. அகழாய்வில் இதுவரை சுமார் 2000 ஆண்டுகள் பழமையான 2500 க்கும் மேற்பட்ட தொல்லியல் பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது தோண்டப்பட்டு வரும் அகழாய்வு குழியில் செங்கல் கட்டுமான சுவர் தென்பட்டுள்ளது. இவை குடியிருப்பு அல்லது தொழில் கூட கட்டுமானமாக இருக்கலாம் என தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!