Virudunagar

News February 15, 2025

மின்னணு கைரேகை பதிவு செய்ய இன்றே கடைசி நாள்

image

விருதுநகர் மாவட்டத்தில் மின்னணு குடும்ப அட்டைகளில் PHH, AAY குடும்ப அட்டைதாரர்கள் குடும்ப அட்டையில் உள்ள அனைத்து உறுப்பினர்கள் மற்றும் இதர குடும்ப அட்டைகளின் உறுப்பினர்களுக்கு தங்களது நியாய விலை கடைகளில் கைவிரல் ரேகை பதிவு செய்யப்பட்டு வருகிறது. POS இயந்திரத்தில் கைவிரல் ரேகை பதிவு செய்வது கட்டாயம் என்பதால் பதிவு செய்ய இன்றே கடைசி நாள் என்பதால் பதிவு செய்யாதவர்கள் பதிவு செய்து கொள்ளலாம். ஷேர்

News February 15, 2025

நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்

image

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஒவ்வொரு மாதமும் பூர நட்சத்திரத்தன்று தான் பிறந்த இடமான நந்தவனத்தில் ஆண்டாள் எழுந்தருளுவது வழக்கம். அதேபோல் நேற்று மாசி மாத பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு நந்தவனத்தில் ஆண்டாள் எழுந்தருளினார். இதனையடுத்து சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

News February 15, 2025

விருதுநகர் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் மீது நடவடிக்கை

image

விருதுநகரில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலராக பணியாற்றியவர் தனலட்சுமி. இவரது கண்காணிப்பில் அங்கன்வாடி மையம், குழந்தைகள் ஊட்டச்சத்து பணிகள் இருந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் ஊட்டச்சத்து குறைபாட்டை தடுக்கும் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்தது. அதில் திட்டங்களை முறையாக செயல்படுத்தாமலும், கண்காணிக்காமல் இருப்பதும் தெரியவந்த நிலையில் தனலட்சுமியை ஆட்சியர் ஜெயசீலன் பணிவிடுப்பு செய்துள்ளார்.

News February 14, 2025

விருதுநகர் அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு

image

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் 46 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். <>லிங்க்<<>> ஷேர் பண்ணுங்க

News February 14, 2025

வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம்

image

விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் ஆகிய வருவாய் கோட்டங்களில் 18.02.2025 அன்று முற்பகல் 11.00 மணி அளவில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. சார் ஆட்சியர் சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர்கள் தலைமையில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கை மனு அளிக்கலாம்.

News February 14, 2025

விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் – ஆட்சியர்

image

விருதுநகர் மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெறும். அதன்படி பிப்ரவரி-2025 மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 21.02.2025 அன்று காலை 11.00 மணியளவில் விருதுநகர் மாவட்ட ஆட்சியரக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறவுள்ளது. இதில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளிக்கலாம்.

News February 14, 2025

விருதுநகரில் மினி பஸ்கள் இயக்க விண்ணப்பிக்கலாம்

image

விருதுநகர் மாவட்டத்தில் தமிழக அரசு உத்தரவுப்படி 56 வழித்தடங்களில் மினி பஸ்களை இயக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்ப படிவத்தினை ஆன்லைன் மூலம் ரூ.1600 செலுத்தி பெற்று அதனை பூர்த்தி செய்து உரிய சான்றுகளுடன் விருதுநகர், ஸ்ரீவி மற்றும் சிவகாசி வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் 28.02.2025- க்குள் நேரில் சமர்ப்பிக்கலாம் என ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

News February 13, 2025

மனைவியை கொலை செய்த கணவர் சாத்தூரில் கைது

image

சிவகாசி முருகன் காலனியை சேர்ந்த திருமலைக்குமார் தனது மனைவி ராஜலட்சுமியின் நடத்தையில் சந்தேகமடைந்து அவரிடம் தகராறில் ஈடுபட்டபோது ஆத்திரத்தில் கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்தார். கொலை செய்துவிட்டு கட்டைப் பையுடன் அசால்டாக சென்ற திருமலைக்குமார் சாத்தூர் நீதிமன்றத்தில் சரணடைய சென்ற போது அங்கிருந்த போலீசார் அவரை சுற்றி வளைத்து கைது செய்து சிவகாசி கிழக்கு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

News February 13, 2025

கல்லூரிகள் மாணவர்களை அணுகினால்.. ஆட்சியர் எச்சரிக்கை

image

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் 12ஆம் வகுப்பு மாணவர்களை அரசு அங்கீகாரம் பெறாத தனியார் கல்வி நிறுவனங்கள் அனுகி அவர்களை சேர்ப்பதாகவும், ஒரு சில ஆசிரியர்களே மாணவர்களின் விவரங்களை கல்லூரிகளுக்கு தருவதாகவும் புகார் எழுந்துள்ளது. மாணவர்களின் விவரங்களை அளிப்பதோ, சேர்ப்பதோ, கல்லூரி மாணவர்களை நேரடியாக அணுகினாலோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் ஜெயசீலன் எச்சரித்துள்ளார்.

News February 13, 2025

விருதுநகரில் தேர்வர்களுக்கு ஒரு நாள் அடிப்படை பயிற்சி

image

இரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் மூலம் வெளியிட்டுள்ள 32438 பல்வேறு பணிக் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பிப்.22 வரை விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்களுக்கு விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் அடிப்படை பயிற்சி வகுப்பு பிப்.17 அன்று ஸ்ரீ வித்யா கல்லூரியில் நடைபெற உள்ளது. ஆர்வமுள்ளவர்கள்  <>-1<<>> மூலம் விண்ணப்பிக்கலாம்.

error: Content is protected !!