Virudunagar

News September 12, 2025

விருதுநகர்: வாகன அபராதங்களுக்கு முழு தள்ளுபடி

image

விருதுநகர் மக்களே வரும் 13ம் தேதி தேசிய லோக் அதாலத் மூலம் நிலுவையில் உள்ள டிராபிக் பைன்கள் முழுமையாக தள்ளுபடி அல்லது 50% வரை குறைக்கபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்னலில் நிற்காமல் சென்றது, ஓவர் ஸ்பீடு, ஹெல்மெட் அணியாத உள்ளிட்ட 13வகையான அபராதங்களுக்கு தள்ளுபடி பெறலாம். இதற்கு டோக்கன் பதிவு செய்ய<> இங்கு கிளிக் செய்யவும்<<>>. இதை மற்றவர்களுக்கு ஷேர் செய்து உதவுங்கள்.

News September 12, 2025

சிவகாசியில் மின்சாரம் தாக்கி இளைஞர் பலி

image

சிவகாசி சாரதா நகரை சேர்ந்தவர் ராஜ்(45). இவர் மாரனேரி பர்மா காலனியில் மினரல் வாட்டர் பிளான்ட் நடத்தி வருகிறார். இவரது மகன் சஞ்சய்குமார்(19) தனது தந்தையின் மினரல் வாட்டர் பிளான்டுக்கு சென்றுள்ளார். அப்போது மோட்டாரை ஆப் செய்ய சென்றபோது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News September 12, 2025

பட்டாசு தொழிலாளி மீது போக்சோ வழக்கு

image

விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (23). பட்டாசு ஆலை தொழிலாளியான இவர் அதே பகுதியை சேர்ந்த 18 வயது நிரம்பாத சிறுமியை காதலிப்பதாக கூறி தனியாக வீடு பிடித்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். சைல்டு லைன் 1098 எண்ணுக்கு வந்த புகாரைத் தொடர்ந்து சாத்துார் மகளிர் போலீசார் போக்சோ வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News September 11, 2025

விருதுநகர்: வாகன அபராதங்களுக்கு முழு தள்ளுபடி

image

விருதுநகர் மக்களே வரும் 13ம் தேதி தேசிய லோக் அதாலத் மூலம் நிலுவையில் உள்ள டிராபிக் பைன்கள் முழுமையாக தள்ளுபடி அல்லது 50% வரை குறைக்கபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்னலில் நிற்காமல் சென்றது, ஓவர் ஸ்பீடு, ஹெல்மெட் அணியாத உள்ளிட்ட 13 வகையான அபராதங்களுக்கு தள்ளுபடி பெறலாம். இதற்கு டோக்கன் பதிவு செய்ய <>இங்கே கிளிக் செய்யவும்<<>>. இதை மற்றவர்களுக்கு ஷேர் செய்து உதவுங்கள்.

News September 11, 2025

தாயுமானவர் திட்டத்தின் கீழ் வீடு தேடி ரேஷன் பொருட்கள்

image

விருதுநகர் மாவட்டத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் செப்.13,14 அன்று 70 வயதுக்கு மேல் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீட்டிற்கு சென்று ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது. மேலும் இனிவரும் மாதங்களில் 2-வது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மேற்படி திட்டப் பணிகளுக்கு அவரவர் இல்லங்களுக்கு நேரில் சென்று ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படும்.

News September 11, 2025

விருதுநகர்: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை..!

image

விருதுநகர், விளாம்பட்டி சுப்பிரமணிபுரத்தை சேர்ந்த வாலிபர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் குழந்தைகள் வன்கொடுமை குற்றத் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி, ‌வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.40,000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். ‌குற்றங்களில் ஈடுபடுவோர் மீது உரிய சட்டப் பிரிவில் வழக்கு பதியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என SP கண்ணன் எச்சரித்துள்ளார்.

News September 11, 2025

விருதுநகர்: டிகிரி போதும் ரூ.78,000 சம்பளத்தில் வங்கி வேலை..!

image

இந்திய ரிசர்வ் வங்கியில் Grade B ஆபீசர் பணியிடங்களுக்கு 120 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு சம்பளமாக ரூ.78,450 வரை வழங்கப்படுகிறது. ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி முடித்தவர்கள் 10.09.2025 முதல் 30.09.2025 ம் தேதிக்குள் இந்த லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வுகள் மதுரையில் நடைபெறுகிறது. இந்த பயனுள்ள தகவலை உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணி HELP பண்ணுங்க.

News September 11, 2025

விருதுநகர்: மரத்தில் மோதி நொறுங்கிய கார்-தம்பதி பலி

image

விருதுநகர் மாவட்டம், சிவகிரியை சேர்ந்தவர் வசந்தி இருவரது இல்ல விழாவிற்கு அவரது பெற்றோர் மாரியப்பன்,மாய கிருஷ்ணம்மாள் அவர்களின் மூத்த மருமகள் விஜயபாரதி உள்ளிட்ட 7 பேர் தேனியிலிருந்து சிவகிரி வந்தனர். பின், நேற்று முன்தினம் இரவு, சிவகிரியிலிருந்து ஊருக்கு புறப்பட்டனர். நேற்று அதிகாலை மாதரை கிராமம் அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த கார், புளிய மரத்தில் மோதி மாரியப்பன், மாயகிருஷ்ணம்மாள் இறந்தனர்.

News September 11, 2025

விருதுநகரில் 24 வது நாளாக தொடரும் போராட்டம்

image

பழைய ஓய்வூதிய திட்டம் பணியின் போது இறந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு கல்வி தகுதி அடிப்படையில் பணி உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி விருதுநகர் அரசு போக்குவரத்து கழகத்தின் முன்பு சிஐடியு போக்குவரத்து ஊழியர் சங்கம் 24 வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டோர் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி கண்டனத்தை பதிவு செய்தனர்.

News September 11, 2025

விருதுநகரில் வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

image

விருதுநகர் மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா இதை தெரிந்து கொள்ளுங்கள். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கொடுக்க வேண்டும்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும்.மீறினால் விருதுநகர் வாடகை தீர்வாளர் அதிகாரிகளிடம் 9445000474, 9445000475, 9944242782 புகாரளிக்கலாம். தெரியாதவர்களுக்கு SHARE செய்யவும்.

error: Content is protected !!