Virudunagar

News February 17, 2025

விருதுநகரில் மீண்டும் கொண்டு வரப்பட்ட 8 லாரிகள்

image

இ.குமாரலிங்கபுரம் பெரியகுளம் கண்மாயில் கிராவல் மண் திருட்டில் ஈடுபட்ட 12 லாரிகளை வச்சகாரப்பட்டி போலீசார் பறிமுதல் செய்தனர். கனிம வளக் கொள்ளையை தடுக்க தவறியதாக விருதுநகர் மாவட்டத்தில் 7 பேரை சஸ்பெண்ட் செய்து ஆட்சியர் உத்தரவிட்டார். இதில் பறிமுதல் செய்யப்பட்ட 12 லாரிகளில் 4 மட்டுமே காவல் நிலைய வளாகத்தில் நின்றது பெரும் பேசு பொருளான நிலையில் மாயமான 8 லாரிகள் மீண்டும் ஸ்டேஷனுக்கு கொண்டு வரப்பட்டன.

News February 17, 2025

எல்லை சாலைகள் அமைப்பில் 411 காலிப்பணியிடங்கள்

image

மத்திய அரசின் எல்லை சாலைகள் அமைப்பில் (BRO) உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சமையல்காரர், கொத்தனார், கொல்லன், மெஸ் வெய்டர் உள்ளிட்ட 411 பணியிடங்கள் உள்ளான. ரூ.5,200 முதல் ரூ.20,200 வரை சம்பளம் வழங்கப்படும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆர்வமும் தகுதியும் உள்ள ஆண்கள் இந்த காலிப்பணியிடங்களுக்கு இங்கே <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். 18-25 வயதுடையவர்களாக இருக்க வேண்டும். ஷேர் செய்யுங்கள்

News February 17, 2025

திருவண்ணாமலை சீனிவாச பெருமாளுக்கு சிறப்பு பூஜை

image

ஸ்ரீவி அருகேயுள்ள திருவண்ணாமலை ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் மாசி மாத ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீனிவாச பெருமாளுக்கு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஸ்ரீனிவாச பெருமாளுக்கு பால், பழம், பன்னீர் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

News February 17, 2025

சிவகாசி மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

image

சிவகாசி செயற்பொறியாளர் அலுவலகத்தில் வரும் 18ஆம் தேதி காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. எனவே நுகர்வோர்கள் மின்வாரியப் பணிகள் தொடர்பான குறைகளை நேரில் தெரிவித்து, தங்கள் குறைகளுக்கு தீர்வு காணலாம் என சிவகாசி மின் பகிர்மான தலைமை பொறியாளர் பத்மா தெரிவித்துள்ளார்.

News February 16, 2025

விசைத்தறியில் கைத்தறி ஆடை நெய்தவர் மீது வழக்கு

image

அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி அஞ்சல் காலனி பகுதியில் பாண்டி என்பவரது விசைத்தறி கூடத்தில் கைத்தறிகள் உற்பத்தி மற்றும் ரக ஒதுக்கீடு உதவி அமலாக்க அலுவலர் கவிதா தலைமையில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அங்கு கைத்தறியில் நெய்ய கூடிய பருத்தி ஆடைகள் விசைத்தறியில் நெய்யப்பட்டது தெரியவந்தது. இது குறித்து கவிதா புகாரின் பேரில் டவுன் போலீசார் நேற்று பிப்ரவரி 15 வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

News February 16, 2025

விருதுநகரில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

image

விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் பிப்.21 அன்று காலை 10 மணி முதல் 2 மணி வரை தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 20 க்கும் மேற்பட்ட தனியார் பிரபல முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் அதற்கான இணையதளத்தில் தங்களது சுயவிவரங்களை பதிவு செய்து கல்வி சான்று, ஆதார் நகலுடன் கலந்து கொள்ளலாம்.

News February 16, 2025

வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம்

image

வத்திராயிருப்பு அர்ச்சனாபுரம் பகுதியில் உள்ள நல்லதங்காள் கோயிலுக்குள் கடந்த மாதம் 25 ஆம் தேதி புகுந்த மர்ம நபர்கள் அங்குள்ள உண்டியலை உடைத்து பணம் மற்றும் சிலையை சேதப்படுத்தினர். வத்திராயிருப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சிலை உடைக்கப்பட்டு 21 நாட்கள் ஆகியும் குற்றவாளிகளை கைது செய்யாததை கண்டித்து பொதுமக்கள் வீடுகளில் கருப்புக் கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

News February 15, 2025

திருச்சுழி அருகே பத்திரப்பதிவு அலுவலகம் திறப்பு

image

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே ம.ரெட்டியாபட்டியில் புதியதாக கட்டப்பட்ட புதிய பத்திரப்பதிவு அலுவலக திறப்பு விழா நாளை(பிப்.16) நடைபெறுகின்றது. இதில், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு திறந்து வைக்கின்றனர். இவ்வாறு அமைச்சர் அலுவலகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

News February 15, 2025

இருக்கன்குடி மாரியம்மன் கோவில் சிறப்பம்சத்தை தெரிஞ்சிக்கோங்க

image

இருக்கன்குடி மாரியம்மன் கோவில் மிகவும் பிரிசித்தி பெற்றது. இக்கோவிலில் ஒரு சிறப்பு உள்ளது. பொதுவாக அம்மன் இடது காலை மடித்து வலது காலை தொங்கவிட்டபடி இருக்கும். ஆனால் இந்த அம்மனோ, இந்த அண்டசராசரத்தில் ஆக்கலும் அழித்தலும் நானே. நானின்றி ஓர் அணுவும் அசையாது, என்பதற்கேற்ப வலது காலை மடிதெ்து இடது காலை தொங்கவிட்டிருக்கும். இந்த அமைப்பே இருக்கன்குடி மாரியின் மிகப்பெரிய சிறப்பம்சமாகும். *SHARE பண்ணுங்க*

News February 15, 2025

நரிக்குடி அருகே தனியார் பேருந்து விபத்து

image

விருதுநகர் மாவட்டம் நரிக்குடியில் இருந்து மதுரை – முதுகுளத்தூர் நோக்கி சென்ற தனியார் பேருந்து மானாசாலை அடுத்துள்ள தனியார் பேப்பர் மில் அருகே சாலையை விட்டு இறங்கி விபத்தில் சிக்கியது. இதில் பேருந்தில் பயணம் செய்த மாயலேரி பகுதியை சேர்ந்த ராமசாமி (72) என்பவருக்கு லேசான காயம் என்பட்டதாக பொதுமக்கள் மூலமாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் வீரசோழன் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!