Virudunagar

News September 13, 2025

விருதுநகர் மக்களே இந்த APP ரொம்ப முக்கியம்..!

image

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நெருங்கும் நிலையில், எதிர்பாராத விதமாக அதீத மழை, புயல் பாதிப்பு, மோசமான வானிலை காலங்களில் மக்களை எச்சரிக்கும் வகையிலும், உள்ளூர் வானிலை தொடர்பான உடனடி தகவலை வழங்கும் வகையிலும் தமிழக அரசு TN ALERT செயலியை அறிமுகம் செய்துள்ளது. <>இங்கு கிளிக் செய்து <<>>பதிவிறக்கம் செய்தால், உங்கள் பகுதி வானிலை நிலவரத்தை எளிதாக அறியலாம். விவசாயிகளுக்கு இது பயனுள்ளதாக இருக்கும். SHARE IT.!

News September 13, 2025

விருதுநகர்: ரேஷன் கார்டு இருக்கா? இதை பண்ணுங்க!

image

விருதுநகர் மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். நண்பர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.

News September 13, 2025

விருதுநகர்:ரிசர்வ் வங்கி வேலை விண்ணப்பிப்பது எப்படி?

image

▶️விருதுநகர் மக்களே இந்திய ரிசர்வ் வங்கியில் 120 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன
▶️இதற்கு ஏதேனும் டிகிரி முடித்திருந்தால் போதுமானது
▶️இப்பணிக்கு ஆன்லைன் தேர்வு,நேர்காணல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவர்
▶️ https://ibpsreg.ibps.in/rbioaug25/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்
▶️ செப்.30ஆம் தேதியே கடைசி நாளாகும்
▶️வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க!

News September 13, 2025

விருதுநகர்: புகார் தெரிவிக்க எண் வெளியீடு-கலெக்டர்

image

விருதுநகர் மாவட்டம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட தொழிலாளர்கள் புகார் எண் அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்ட குறைதீர்ப்பு அலுவலர் ஜெய பிரகாஷ் என்பவர் 8925811346 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தங்களது புகார்களை தெரிவிக்கலாம். என மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.

News September 13, 2025

சிவகாசியில் கூடுதல் ஆய்வு குழு

image

தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் சிவகாசி பகுதியில் பட்டாசு உற்பத்தி பணிகள் தீவிரமடைந்துள்ளது. விதிமீறலை கண்காணித்து தடுக்க ஏற்கனவே 10க்கும் மேற்பட்ட ஆய்வு குழுக்கள் அமைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது கூடுதலாக மேலும் 6ஆய்வு குழுக்கள் நியமிக்கப்பட்டு ஆய்வு நடத்தி வருகின்றனர். இக்குழுவில் தொழிலக பாதுகாப்பு, சுகாதார இயக்ககம், காவல்துறை, வருவாய்த் துறை, தீயணைப்புத் துறையினா் இடம்பெற்றுள்ளனர்.

News September 12, 2025

தற்செயல் விடுப்பு போராட்டம் – 1473 ஊழியர்கள் ஆப்செண்ட்

image

விருதுநகர் மாவட்டத்தில் ஒழிப்பு இயக்கம் சார்பில் நேற்று தற்செயல் விடுப்பு போராட்டம் நடைபெற்றது. திமுக அரசின் தேர்தல் வாக்குறுதிபடி பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற தற்செயல் விடுப்பு போராட்டத்தில், மாவட்ட முழுவதிலும் 1473 பேர் ஆப்செண்ட் ஆகினார். இதன்காரணமாக அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.

News September 12, 2025

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் – கலெக்டர் தகவல்

image

விருதுநகர் மாவட்டத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் நரிக்குடி மருதுபாண்டியர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நாளை (13.09.2025) நடைபெறவுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா இ.ஆ.ப.,தெரிவித்துள்ளார்.

News September 12, 2025

விருதுநகர்: பதுக்கி வைக்கப்பட்ட பட்டாசுகள் பறிமுதல்..!

image

சிவகாசி கிழக்கு சப்-இன்ஸ்பெக்டர் ரபியம்மாள் மற்றும் போலீசார் 56 வீட்டு காலனி பகுதியில் உள்ள குடோனில் சந்தேகத்தின் பேரில் ஆய்வு செய்தனர். அப்போது அந்த குடோனில் சட்டவிரோதமாக 5 அட்டை பெட்டிகளில் பேன்சி வெடிகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அங்கு இருந்த முத்துக்கிருஷ்ணன் (வயது 32), முருகன் (38) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.

News September 12, 2025

விருதுநகர்: ரேஷன் கடையில் பொருட்கள் தரவில்லையா?

image

விருதுநகர் மக்களே, உங்க ரேஷன் கடையில் சரியாக அரிசி, பருப்பு, எண்ணெய் வழங்கவில்லையா? உடனே புகார் பண்ணுங்க.
▶️ராஜபாளையம் – 04563220500
▶️ஸ்ரீவில்லிபுத்தூர் – 04563260209
▶️சாத்தூர் – 04562260220
▶️சிவகாசி – 04562224260
▶️விருதுநகர்- 04562243493
▶️அருப்புக்கோட்டை – 04566220219
▶️திருச்சுழி – 04566282222
▶️காரியாபட்டி – 04566255570
▶️வெம்பக்கோட்டை – 04562284202
▶️வத்திராயிருப்பு – 04563288800

News September 12, 2025

BREAKING: ஸ்ரீவி., போத்தீஸ் கடையில் ஐடி ரெய்டு

image

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பிரபல போத்தீஸ் ஜவுளி விற்பனை நிலையத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று சோதனை மேற்கொண்டு வருகின்றனர் .நுழைவாயில்கள் பூட்டப்பட்ட நிலையில், அதிகாரிகள் கடையின் இருப்பு, விற்பனை ஆவணங்கள் மற்றும் கணினி பதிவுகளை ஆய்வு செய்கின்றனர். இதனால் ஊழியர்களுக்கு நிர்வாகம் சார்பில் விடுப்பு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!