Virudunagar

News March 11, 2025

மனைவியை எரித்து கொன்ற கணவன் உயிரிழப்பு

image

வெம்பக்கோட்டை அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த கணவர் பொன்னுசாமி கடந்த 5ம் தேதி மனைவி முனிஸ்வரியை பெட்ரோல் ஊற்றி எரித்தார். அப்போது, பொன்னுசாமிக்கு தீக்காயம் ஏற்பட்டது. மனைவி தற்கொலை செய்து கொண்டதாக பொன்னுசாமி நாடகமாடியது போலீஸார் விசாரணையில், தெரியவந்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்; இந்நிலையில், சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பொன்னுச்சாமி நேற்று உயிரிழந்தார்.

News March 11, 2025

பாட்டியை கொடூரமாக கொலை செய்த பேரன்

image

ராஜபாளையம் அருகே தளவாய்புரம் நாயுடு தெற்கு தெருவை சேர்ந்தவர் ஸ்ரீதர்(22). இவர் மது மற்றும் கஞ்சா போதைக்கு அடிமையாகி வீட்டில் அவ்வப்போது தொடர்ந்து சண்டையிட்டு வந்துள்ளார். இவரது பாட்டி சரஸ்வதி போதையில் இருந்த ஸ்ரீதரை கண்டிக்கும் நோக்கில் திட்டியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஸ்ரீதர் பாட்டியின் தலை நெத்தி என மூன்று இடங்களில் சரமாரியாக வெட்டி தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்துள்ளார்.

News March 10, 2025

பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டம்

image

விருதுநகர் மாவட்டத்தில் பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டத்திற்கான சிறப்பு சேர்க்கை முகாம் விருதுநகர், அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நாளை(மார்ச்.11) நடைபெற உள்ளது. இத்திட்டத்தின்கீழ் பயிற்சி பெற 21 முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும். பயிற்சிக்காலத்தில் 12 மாதங்களுக்கு உதவித்தொகையாக மாதத்திற்கு ரூ.5,000- வீதம் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 04562 -294755 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

News March 10, 2025

விருதுநகரில் பேருந்து வழித்தடங்களில் மாற்றம்

image

விருதுநகர் புதிய பேருந்து நிலையம் சிறப்பாக செயல்படவும், வாகன விபத்துகளை தடுப்பதற்கும், போக்குவரத்து நெரிசலை குறைக்க பேருந்து வழித்தரங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதில் விருதுநகர்-சிவகாசி சாலையில் மதுரை-சாத்தூர் நெடுஞ்சாலை சந்திப்புக்கும் ஆத்துப்பாலம் பேருந்து நிறுத்தத்திற்கும் இடையிலான பகுதியில் உடனடியாக அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

News March 10, 2025

மனைவியை எரித்து கொலை செய்த கணவர் உயிரிழப்பு

image

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே தாயில்பட்டி கலைஞர் காலனி சேர்ந்த பொன்னுச்சாமி (38), கடந்த 5ஆம் தேதியன்று மனைவி முனீஸ்வரியின் (28), நடத்தையில் சந்தேகப்பட்டு பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்தார். அப்போது தீக்காயமடைந்த பொன்னுச்சாமி சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர்களது 3 பெண் குழந்தைகளும் தற்போது நிற்கதியாய் தவிக்கின்றனர்.

News March 10, 2025

36 வழக்குகளுக்கு சமரச தீர்வு

image

அருப்புக்கோட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வட்ட சட்ட பணிகள் குழு சார்பாக தேசிய மக்கள் நீதிமன்றம் சார்பு நீதிபதி செல்வன் ஜேசு ராஜா தலைமையில் நடைபெற்றது. இந்த ஜீவனாம்ச வழக்குகள் காசோலை வழக்குகள் என 250 வழக்குகள் எடுத்து கொள்ளப்பட்டது. அவற்றில் நிலுவையில் உள்ள 36 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது. இழப்பீடு தொகையாக ரூ 68,51,500 பெற்று தரப்பட்டதாக செய்தி குறிப்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது

News March 10, 2025

தனியார்துறை வேலைவாய்ப்பு பெற விண்ணப்பிக்கலாம்

image

தமிழக அரசு உருவாக்கிய தனியார்துறை வேலைவாய்ப்பு இணையத்தில் விருதுநகர் மாவட்டத்தில் 146 தனியார் துறை நிறுவனங்கள், 19 துறைகளில், 2128 பணிக்காலியிடங்களை உள்ளீடு செய்துள்ளன. விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த வேலைதேடும் இளைஞர்கள் https://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவுசெய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 93601-71161 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News March 10, 2025

விருதுநகர் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்

image

தமிழ்நாட்டில்(மார்ச்.11) விருதுநகர், சிவகங்கை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், புதுக்கோட்டை. நாகை, ராமநாதபுரம், திருவாரூர் ஆகிய 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்ட மக்கள் முன் எச்சரிக்கையாக செயல்பட அறிவுறுத்தப்படுகிறது. பிறரும் விழிப்புணர்வுடன் செயல்பட ஷேர் செய்யுங்கள்

News March 10, 2025

விருதுநகரில் போக்குவரத்து மாற்றம்

image

நேற்று(மார்ச்.9) முதல் காமராஜர் புது பஸ் ஸ்டாண்டிற்கான வழித்தட மாறுதல்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஓட்டல் பஸ் ஸ்டாப் சர்வீஸ் ரோடு, எம்.ஜி.ஆர் சாலை, ஆத்துப்பாலம், டி.டி.கே ரோடு, கருமாதி மடம், புது பஸ் ஸ்டாண்ட், எம்.ஜி.ஆர் சாலை ஆகிய பகுதிகளில் வரும் பஸ்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் நகரில் போக்குவரத்து நெருக்கடி குறைய வாய்ப்புள்ளதாக கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார். *ஷேர்

News March 9, 2025

சிவகாசியில் பட்டாசு தொழிலாளி வெட்டி கொலை

image

சிவகாசி முருகன் காலனி சாலையில் உள்ள தனியார் பட்டாசு ஆலை அருகில் இன்று சிவகாமிபுரம் காலனியை சேர்ந்த கருப்பசாமி (30) என்பவர் 3 பேர் கொண்ட கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தன் மனைவியுடன் மாரிமுத்து என்பவர் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக அவரை சில நாட்களுக்கு முன் கருப்பசாமி கண்டித்த நிலையில் அவர் தலைமையிலான கும்பல் கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகம்.

error: Content is protected !!