Virudunagar

News March 20, 2025

மினி பேருந்துகள் இயக்க விண்ணப்பிக்க இன்றே கடைசி

image

விருதுநகர் மாவட்டத்தில் தமிழக அரசு உத்தரவுப்படி அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ள 41 வழித்தடங்களில் மினி பஸ்கள் இயக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்ப படிவத்தினை ஆன்லைன் மூலம் ரூ.1600 செலுத்தி பெற்று அதனை பூர்த்தி செய்து மார்ச்.20 க்குள் விருதுநகர், ஸ்ரீவி மற்றும் சிவகாசி வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் நேரில் சமர்ப்பிக்கலாம் என ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

News March 20, 2025

சிவகாசி மக்களுக்கு மாநகராட்சி எச்சரிக்கை

image

சிவகாசி மாநகராட்சிப் பகுதியில் குடிநீா் இணைப்பில் மின் மோட்டாா் இணைத்து குடிநீா் பிடித்தால், குடிநீரைத் திருடினால் இணைப்பு துண்டிக்கப்படும் என மாநகராட்சி ஆணையா் கிருஷ்ணமூா்த்தி எச்சரித்துள்ளார். மாநகராட்சியில் மொத்தம் 38,630 குடிநீா் இணைப்புகள் உள்ள நிலையில் குடிநீா் இணைப்பில் மின் மோட்டாா் இணைத்து தண்ணீா் பிடிப்பது கண்டறியப்பட்டால்,சம்பந்தப்பட்ட குடிநீா் இணைப்புகள் துண்டிக்கப்படும் என எச்சரிக்கை.

News March 20, 2025

குறி சொல்பவர் வெட்டிக் கொலை

image

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த சந்தனகோடாங்கி(45) மடப்புரம் கோவில் செல்லும் வழியில் கோடாங்கி அடித்து குறி செல்லி வந்துள்ளார். நேற்று மாலை இவரை தினேஷ்குமார்(27) வெட்டி விட்டு தப்பிச் சென்ற நிலையில் திருப்புவனம் போலீசார் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் உயிரிழந்தார். போலீசார் தினேஷ்குமாரை கைது செய்த நிலையில், இவரது உறவுக்கார பெண்ணுடன் சந்தனகோடாங்கி தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.

News March 19, 2025

விருதுநகர் ஆட்சியருக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

image

விருதுநகர் மாவட்டம் வேளானேரியில் 12 வாரத்திற்குள் குடிநீர் மற்றும் சாலை விரிவாக்க பணிகளை மேற்கொள்ள ஆட்சியருக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. வேளானேரியில் குடிநீர் மற்றும் சாலை விரிவாக்க பணிகள் முறையாக மேற்கொள்ள கோரிய பொதுநல மனுவில், 12 வாரங்களுக்குள் மனுவை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க விருதுநகர் ஆட்சியர் மற்றும் ஊரக மேம்பாட்டு துறை செயலாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டப்பட்டுள்ளது.

News March 19, 2025

விருதுநகரில் குழந்தைகள் இலக்கியத் திருவிழா

image

விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக, பள்ளி மாணவர்களுக்கான குழந்தைகள் இலக்கிய திருவிழா மார்ச்.20, 21 அன்று கிருஷ்ணன்கோயில் லிங்கா குளோபல் பள்ளியில் நடைபெறவுள்ளது. இதில் 4 முதல் 7ஆம் வகுப்பு வரை பயிலும் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொள்கின்றனர். இதில் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

News March 19, 2025

விருதுநகர் காவலர் எரித்துக் கொலை

image

மதுரை ஈச்சனேரி கிராமத்தில் அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவரின் உடல் நேற்று தீயில் பாதி எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து பெருங்குடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட நிலையில் அவர் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த மலையரசன் என்பதும்,தனிப்படை காவலராக பணியாற்றி வந்தது தெரியவந்துள்ளது. எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து பெருங்குடி காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News March 19, 2025

அக்னிவீர் திட்டத்தில் ஆட்சேர்ப்பு

image

விருதுநகர் மாவட்டத்தில் 2025-2026 ஆம் ஆண்டு அக்னி வீர் திட்டத்தின் கீழ் 10, 12 ஆம் வகுப்பு படித்த இளைஞர்களுக்கு பொதுப்பணி, டெக்னிக்கல், கிளார்க், டிரேட்ஸ்மென் பிரிவுகளில் ஆட்சேர்ப்பு நடைபெறவுள்ளது. இதில் சேர விருப்பமுள்ள இளைஞர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் ஏப்.10 வரை பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு ஸ்ரீவியில் உள்ள முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தினை அனுகலாம்.

News March 19, 2025

ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிக்க விண்ணப்பிக்கலாம்

image

விருதுநகரில் தாட்கோ மூலமாக 10, 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர், பழகுடியின மாணவர்கள் ஹோட்டல் மேனேஜ்மென்ட், கேட்டரிங் டெக்னாலஜி இன்ஸ்டிட்யூட்டியில் இளங்கலை அறிவியல் படிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆரம்ப கால மாத ஊதியமாக ரூ.25,000 முதல் ரூ.35,000 வரை பெறலாம். பின்னர் திறமைக்கேற்றவாறு ரூ.50,000 முதல் ரூ.70,000 வரை மாத ஊதியமாக பெறலாம். ஆர்வமுள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம்.

News March 19, 2025

நாய் குறுக்கே வந்ததால் வாலிபர் பலி

image

கள்ளிக்குடியை சேர்ந்த ராகுல்(20), மையிட்டான்பட்டியைச் சேர்ந்த கார்த்திக் ராஜா(21) ஆகியோர் முட்டை வண்டியில் லோடு மேனாக பணியாற்றி வந்தனர். நேற்று காலை இருவரும் விருதுநகரில் நண்பர்களை பார்த்து விட்டு கள்ளிக்குடி நோக்கி டூவிலரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது வடமலைக்குறிச்சி அருகே சென்ற போது நாய் குறுக்கே வந்ததால் டூவிலர் நிலைதடுமாறி விபத்துக்குள்ளானதில் கார்த்திக் ராஜா உயிரிழந்தார்.

News March 18, 2025

விருதுநகர் : அகழாய்வு பணிகள் பாதிப்பு!

image

வெம்பக்கோட்டையில் மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக அகழாய்வு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. அகழாய்வு குழிகளுக்குள் தண்ணீர் தேங்குவதால் தொடர்ந்த அகழாய்வு பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டு உள்ளதால்  தற்காலிகமாக அகழாய்வு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!