Virudunagar

News March 22, 2025

ஊஞ்சல் சேவையில் ஆண்டாள், ரெங்கமன்னார்

image

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் கடைசி பங்குனி மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீஆண்டாள் ரங்கமன்னருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக பால், பழம், பன்னீர் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஊஞ்சல் சேவையில் சர்வ அலங்காரத்தில் ஸ்ரீ ஆண்டாள், ரங்கமன்னருடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

News March 22, 2025

தொட்டில் கயிறு இறுகி சிறுவன் பலி

image

விருதுநகர், மீசலூரை சேர்ந்த பாக்கியராஜ் மகன் வைஷ்ணவ் (9) அரசு பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று மதியம் இவரது தாய் முத்துலட்சுமி வீட்டிற்கு வந்தபோது கதவு உள்பக்கமாக பூட்டியிருந்ததால் தட்டி பார்த்து திறக்காததால் அருகில் இருந்தவர்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்ற போது வைஷ்ணவ் கழுத்தில் தொட்டில் கயிறு இறுகி உயிரிழந்தார். இது குறித்து சூலக்கரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News March 21, 2025

விருதுநகர் மாவட்ட காவல்துறையினர் அறிவுறுத்தல்

image

விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து இன்று வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை திருடும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் செல்போனில் தேவையற்ற தகவல்களுக்கு பதில் அளிக்க வேண்டாம் என விருதுநகர் மாவட்ட காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News March 21, 2025

விருதுநகர்: பிளஸ் 1 இயற்பியல் தேர்வில் 224 பேர் ஆப்சன்ட்

image

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற பிளஸ் 1 இயற்பியல் தேர்வு 6,519 மாணவர்களும் 8016 மாணவிகளும் என மொத்தம் 14 ஆயிரத்து 535 மாணவ மாணவிகள் தேர்வு எழுத வேண்டிய நிலையில், 6411 மாணவர்களும் 7900 மாணவிகளும் என மொத்தம் 14 ஆயிரத்து 311 மாணவ மாணவிகள் மட்டுமே தேர்வு எழுதினர். இதில் 108 மாணவர்களும் 116 மாணவிகளும் என மொத்தம் 224 பேர் எழுதவில்லை என தகவல்.

News March 21, 2025

விருதுநகர் : புதிய வழித்தட மினிபஸ்களுக்கு அனுமதி !

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (21.03.2025) போக்குவரத்துத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்டத்தில் சிற்றுந்து புதிய வழித்தடத்திற்கு அனுமதி வழங்குவது குறித்த செயல்முறை ஆணையினை விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் வாகன உரிமையாளர்களுக்கு வழங்கினார்.

News March 21, 2025

7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

image

தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு. கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு. தமிழ்நாட்டில் வரும் 25ம் தேதி வரை ஒரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. *ஷேர்

News March 21, 2025

ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

விருதுநகர் மாவட்டத்தில் மார்ச்.2025 மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் (மார்ச்.21) இன்று காலை 11.00 மணியளவில் விருதுநகர் மாவட்ட ஆட்சியரக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு விவசாயம் தொடர்பான கோரிக்கைகளை நேரடியாக மனு மூலம் தெரிவித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

News March 21, 2025

விருதுநகர் மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் வேலைவாய்ப்பு

image

விருதுநகர் மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் Nurse, Medical Officer, Health Inspector என மொத்தமாக 8 காலிபணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை தபால் மூலம் அனுப்ப வேண்டும். விண்ணபிக்க கடைசி நாள் 24-03-2025. 10th, B.Sc, Diploma, ITI, M.Sc, MBBS, MSW படித்த நபர்களுக்கு ரூ.8,500 முதல் ரூ.60,000 வரை சம்பளம் கிடைக்கும். மேலும் விவரங்களுக்கு<> லிங்கை<<>> செய்யவும் *ஷேர் பண்ணுங்க

News March 20, 2025

விருதுநகர் மாவட்டத்திற்கு காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

image

தமிழகத்தில் உள்ள 8 போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர்,நடத்துனர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திற்கு 72 ஓட்டுநர், நடத்துநர் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சியுடன், 24 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுநர் உரிமம் அவசியம். <>இங்கு கிளிக்<<>> செய்து மார்ச்.21-ஏப்ரல்.21 வரை விண்ணப்பிக்கலாம். Share It.

News March 20, 2025

கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

image

உழவர் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வட்டார உழவர் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம். இதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் இராஜபாளையம் 97863-36396, 76959-53836 சிவகாசி 90425-19911 ,94420-58126 விருதுநகர் 98434-81831 ,97151-09134 என்ற உழவர் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம், முதன்மை நிர்வாக அலுவலர், செயலாட்சியர் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!