Virudunagar

News April 1, 2025

விருதுநகரில் இன்று முதல் நீச்சல் பயிற்சி வகுப்புகள்

image

விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் நீச்சல் பயிற்றுநர்களை கொண்டு நீச்சல் பழக 12 நாட்கள் பயிற்சி வகுப்புகள் இன்று முதல் துவங்க உள்ளது. மேலும் இரண்டாம் தொகுப்பு ஏப்.15 – ஏப்.27, முன்றாம் தொகுப்பு ஏப்.29 – மே11, நான்காம் தொகுப்பு மே.13 – மே.25, ஐந்தாம் தொகுப்பு மே.27 – ஜூன்.8 வரை வகுப்புகள் நடைபெறும். மேலும் விவரங்களுக்கு 9751393412 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

News April 1, 2025

திருக்கல்யாண திருவிழா இன்று முதல்  தொடக்கம்

image

ஸ்ரீவி ஆண்டாள் – ரெங்கமன்னார் திருக்கல்யாணம் ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வருகிறது. பங்குனி திருக்கல்யாண திருவிழாவிற்கு ஏப்.1 ஆம் தேதி தேங்காய் தொட்டு நியமனம் பெறுதல்,ஏப்.2-ம் தேதி சேனை முதல்வர் புறப்பாடும்,ஏப்.3-ம் தேதி காலை கொடியேற்றத்துடன் திருக்கல்யாண விழா தொடங்குகிறது.ஏப்.11 ஆம் தேதி காலை செப்பு தேரோட்டமும், இரவு ஆடிப்பூர கொட்டகையில் ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாணமும் நடைபெற உள்ளது.

News April 1, 2025

சாத்தூர் சுங்கச்சாவடியில் கட்டணம் உயர்வு

image

தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் 78 சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வரும் நிலையில் அதில் கப்பலூர், சாத்தூர் எட்டூர் வட்டம் உள்ளிட்ட 46 சுங்கச்சாவடிகளில் இன்று அதிகாலை முதல் கட்டணம் உயர்வு அமலுக்கு வந்துள்ளது. இதில் கார், ஜீப், வேன் ஒருமுறை பயன்பாட்டிற்கான புதிய கட்டணம் ரூ.105, இலகு வணிக வாகனத்திற்கு ரூ.170 வசூலிக்கப்படுகிறது. எலியார்பத்தி சுங்கச்சாவடியில் கட்டணம் உயரவில்லை.

News April 1, 2025

திருச்சுழி ஆய்வாளருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவு

image

திருச்சுழி காவல் நிலையத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் முத்து. இவர் ஆய்வாளராக இருக்கும்போது அருப்புக்கோட்டை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த குற்றவியல் வழக்கில் ஆஜராக பலமுறை சம்மன் அனுப்பியும் தற்போது வரை ஆஜராகாமல் இருந்துள்ளார். இந்நிலையில் அருப்புக்கோட்டை சார்பு நீதிபதி ஆய்வாளர் முத்துவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளதாக நீதிமன்ற செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 1, 2025

வேன் மோதியதில் தந்தை, மகள் உயிரிழப்பு

image

ஸ்ரீவி அத்திக்குளம் காலனி பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் செல்வம் விடுமுறைக்கு வீட்டிற்கு வந்த இவரது மகள் சுமித்ராவை சிவகாசியில் உள்ள கல்லூரியில் விடுவதற்காக ஆட்டோவில் நேற்று அழைத்துச் சென்றுள்ளார். மாயத்தேவன்பட்டி விலக்கு அருகே சென்ற போது எதிரே வந்த வேன் ஆட்டோ மீது மோதி பின்னர் அவ்வழியே சென்ற பைக் மீது மோதியது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி செல்வம், சுமித்ரா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

News March 31, 2025

விருதுநகர்: ரேஷன் கார்டில் கைரேகை வைக்கலயா?

image

விருதுநகர் மாவட்டத்தில் AAY மற்றும் PHH குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் கைரேகையை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாதவர்கள் இன்றைக்குள் (மார்ச்.31) பதிவு செய்ய வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் அட்டையை இழக்க நேரிடும். ஒருவேளை நீங்கள் வெளி மாவட்டத்திலோ, வெளி மாநிலத்திலோ இருந்தால் அருகில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று ரேகையை பதிவு செய்து கொள்ளலாம். ரேஷன் கார்ட் வைத்திருக்கும் அனைவருக்கும் பகிரவும்.

News March 31, 2025

விருதுநகரில் ஒரே மாதத்தில் 7 கொலைகள்

image

▶️மார்ச்.4 பாளையம்பட்டியில் அமரர் ஊர்தி ஓட்டுநர் கொலை.
▶️மார்ச்.5 ஜோகில்பட்டியில் முன்னாள் ராணுவ வீரர் கொலை.
▶️மார்ச்.5 தாயில்பட்டியில் மனைவியை எரித்து கொன்ற கணவர்.
▶️மார்ச்.8 தளவாய்புரத்தில் பாட்டியை கொன்ற பேரன்.
▶️மார்ச்.9 சிவகாசியில் பட்டாசு தொழிலாளி வெட்டி கொலை.
▶️மார்ச்.17 சிவகாசியில் பழிக்குப்பழியாக வெட்டி கொலை.
▶️மார்ச்.26 மல்லாங்கிணறில் தாயுடன் தொடர்பில் இருந்தவரை குத்திக் கொன்ற மகன்.

News March 30, 2025

விருதுநகர் கலெக்டர் பெயரில் போலி கணக்கு தொடக்கம்

image

விருதுநகர் கலெக்டர் ஜெயசீலன் பெயரில் முகநூலில் போலி கணக்கு உருவாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர், “இந்தப் போலி ஐடி அடிக்கடி வரும் பிரச்சனையாக இருந்து வருகிறது. நண்பர்களே, விழிப்புடன் இருங்கள். இதற்கு கடுமையான நடவடிக்கைகளைச் எடுக்குமாறு முகநூலை கேட்டுக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டும் இதே போல் போலி கணக்கு தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. *போலி கணக்கை பின் தொடர்பவர்களுக்கு பகிரவும்

News March 30, 2025

விருதுநகரில் கனமழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் அண்மை காலமாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் நாளை(மார்ச்.31) முதல் 5 நாட்களுக்கு தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் ஏப்.2 அன்று கனமழை பெய்யக்கூடும் எனவும், ஏப்.5 வரை தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News March 30, 2025

விருதுநகர் காப்பகத்தில் இருந்து தப்பிய 2 சிறுமிகள் மீட்பு

image

விருதுநகர் பாண்டியன் நகர் காந்தி நகரில் அரசு உதவி பெறும் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்த காப்பகத்தில் பல்வேறு வழக்குகள் தொடர்பாக மீட்கப்பட்ட ஏழு சிறுமிகள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் அங்கிருந்த 14 வயது சிறுமியும், 15 வயது சிறுமியும் திடீரென மாயமாயினர். இது குறித்து ஊரக போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் இருவரையும் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் மீட்டனர்.

error: Content is protected !!