India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விருதுநகர் மக்களே இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள 6238 டெக்னீசியன் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 10,12, ஐடிஐ முடித்தவர்கள் இங்கே <
சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தையும், சமூக ஒற்றுமையினையும் கடைபிடிக்கும் ஊராட்சிகளை கௌரவிக்கும் வகையில் 10 ஊராட்சிகளுக்கு விருதுடன் தலா ரூ.1 கோடி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனடிப்படையில் விருதுநகர் மாவட்டத்தில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருது பெற விரும்புவோர் <
சாத்தூர் அருகே சின்னகாமன்பட்டியில் ஜூலை.1 அன்று கமல்குமார் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஏற்கனவே 9 பேர் உயிரிழந்த நிலையில் இன்று காலை மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அழகுராஜா (28) என்பவரும் உயிரிழந்தார். இந்நிலையில் வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்த 3 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அருப்புக்கோட்டை நகராட்சியில் அனுமதியின்றி பிளக்ஸ் பேனர்கள் அதிக அளவில் வைக்கப்பட்டுள்ளது. சாலைகள், பேருந்து நிறுத்தங்களில் பேனர்கள் வைப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இந்நிலையில் அருப்புக்கோட்டையில் அனுமதியின்றி பிளக்ஸ் பேனர்கள் வைக்க கூடாது எனவும், ஏற்கனவே இருந்த பேனர்களை அகற்ற வேண்டும். அனுமதியின்றி பேனர்கள் வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என டவுன் போலீசார் எச்சரித்துள்ளனர்.
விருதுநகர் மாவட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்கள் விருதுநகர் மாவட்ட அரசு கலை மற்றும் அறிவியல் பிரிவு இளங்கலை பட்டப் படிப்புக்கு https://www.tngasa.in/ இணையதளத்தில் 07.05.2025 முதல் 27.05.25 வரை விண்ணப்பிக்கலாம். திருவில்லிபுத்தூர், சிவகாசி, சாத்தூர், அருப்புக்கோட்டை மற்றும் திருச்சுழி ஆகிய இடங்களில் அரசு கல்லூரிகள் உள்ளன.
விருதுநகர் மாவட்ட காவல்துறை அதிகாரிகளின் தொடர்பு எண்கள்
▶️விருதுநகர் SP- கண்ணன் – 9940277199
▶️அருப்புக்கோட்டை DSP – மதிவண்ணன் -9894364326
▶️ராஜபாளையம் ம் DSP – ப்ரீத்தி – 9884215769
▶️சாத்தூர் DSP – நாகராஜன் – 9498784040
▶️சிவகாசி DSP – பாஸ்கர் -9840211811
▶️ஸ்ரீவில்லிபுத்தூர் DSP – ராஜா -8300002059
உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். (அவசிய தேவைக்கு மட்டும்)
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள S.H.N எட்வர்ட் மேல்நிலைப் பள்ளியில் அரசு சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடக்க உள்ளது. சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 20க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 100க்கும் மேற்பட்ட தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். முகாமில் கலந்து கொள்ள <
அட்சய திருதியை அன்று செல்வத்துக்கு அதிபதியான லட்சுமியை பூஜை செய்வது சிறப்பு. இதனால் செல்வம் பெருகும், லட்சுமி கடாட்சம் உண்டாகும். இந்த நல்ல நாளில் மாலை 6 மணிக்கு வீட்டில் விளக்கேற்றி வைத்து விட்டு, அருகில் உள்ள மகாலட்சுமி அல்லது பெருமாள் கோயிகளுக்கு சென்று தாமரை மற்றும் துளசி மாலை அணிவித்து வழிபாடு செய்தால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. இதை உங்கள் அன்பானவர்களுக்கு *SHARE* செய்யுங்கள்.
விருதுநகர் மாவட்டத்தில் பொதுமக்கள் பட்டா மாற்றம் சாதிச்சான்று பொதுமக்களுக்கு அரசு செய்து கொடுத்துள்ள சலுகைகளை பெறுவதற்கு அரசு அலுவலகங்களை அணுகும்போது அலுவலகத்திற்கு வெளியே அரசு சலுகைகளை பெற்றுத் தருவதாக ஏமாற்றி அவர்களிடமிருந்து பணங்களை பறிக்கும் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இந்த (9791322979) தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.
விருதுநகர் பஜார் காவல் நிலையத்தில் பணி புரிந்த எஸ்.ஐ பார்த்திபன் விருதுநகர் தனிப்பிரிவு எஸ்.ஐ-யாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதுபோல் சாத்தூர் டவுன், அம்மாபட்டி, வெம்பக்கோட்டை, மல்லி, எம் புதுப்பட்டி உள்ளிட்ட 14 காவல் நிலையங்களில் தனிப்பிரிவு போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் போலீஸ் ஏட்டு உள்ளிட்ட 193 பேரை எஸ்.பி கண்ணன் இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.