Virudunagar

News August 20, 2024

ரூ.4 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் பறிமுதல்

image

சிவகாசி அருகே சிவகாமிபுரம் காலனி பகுதியில் இன்று வருவாய் மற்றும் காவல்துறையினர் சட்டவிரோத பட்டாசு குறித்து ஆய்வு நடத்தினர். அப்போது ராஜசேகரன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடைக்கு அருகே அவர் சட்டவிரோதமாக தகர செட் அமைத்து பட்டாசு பதுக்கியது தெரியவந்தது. இதையடுத்து அதிலிருந்த ரூ.4 லட்சம் மதிப்பிலான பட்டாசுகளை பறிமுதல் செய்து தகர செட்டிற்கு சீல் வைத்தனர்.

News August 20, 2024

குடற்புழு நீக்க நாள் பயிற்சி முகாம்

image

அருப்புக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று அங்கன்வாடி ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் களப்பணியாளர்களுக்கு தேசிய குடற்புழு நீக்க நாள் விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மருத்துவர் கோமதி குடற்புழு நீக்க மாத்திரைகள் குறித்தும் மாத்திரைகளை உட்கொள்ளும் முறைகள் குறித்தும், கை கழுவும் முறைகள் குறித்தும் விளக்கினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

News August 19, 2024

சதுரகிரியில் பக்தர்கள் இன்றி பவுர்ணமி வழிபாடு

image

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆவணி மாத பிரதோஷம் மற்றும் பெளர்ணமி வழிபாட்டிற்கு ஆக.17 முதல் ஆக.20 வரை 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் கனமழை எச்சரிக்கை காரணமாக சதுரகிரி மலையேற தடை விதிக்கப்பட்டது. இதனால் இன்று பெளர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் இன்றி சதுரகிரி மலையில் உள்ள சுந்தர மகாலிங்கம் சுவாமிகளுக்கு 16 வகையான அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது.

News August 19, 2024

விருதுநகர் மாவட்ட நிர்வாகம் மறுப்பு

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 பெறுவதற்கான சிறப்பு முகாம் திங்கள்(19.08.24), செவ்வாய்(20.08.24) ஆகிய தினங்கள் மட்டும் நடைபெறும் என ஒரு குறுஞ்செய்தி வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில் விருதுநகர் மாவட்ட நிர்வாகம் இதற்கு மறுப்பு தெரிவித்து பொய்யான தகவல் என்றும், சிறப்பு முகாம்கள் எதுவும் நடைபெறவில்லை எனவும் இன்று(ஆக.20) விளக்கம் அளித்துள்ளது.

News August 19, 2024

விருதுநகர் அருகே விபத்தில் இளைஞர்கள் 2 பேர் பலி

image

தேனியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, ஜெயபிரகாஷ் இருவரும் சிவகாசி உறவினர் வீட்டு விசேஷத்திற்கு நேற்று(ஆக.,19) பைக்கில் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில், நத்தம்பட்டி அருகே கட்டப்பட்டு வரும் அர்ச்சுனா நதியின் ஆற்றுப் பாலத்திற்கு தோண்டப்பட்டிருந்த பள்ளத்தை கவனிக்காமல், கரையில் மோதி விழுந்ததில் இருவரும் பலியாகினர். இன்று காலை உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் நத்தம்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News August 18, 2024

யானை உயிரிழப்பில் தோட்ட காவலாளி கைது

image

ஸ்ரீவில்லிபுத்தூர் வனச்சரகம் விரியன் கோயில் பீட்டிற்குட்பட்ட மகேஸ்வரிக்கு சொந்தமான தென்னந்தோப்பில் யானை ஒன்று உயிரிழந்து கிடப்பதாக வனத்துறைக்கு விவசாயிகள் தகவல் அளித்தனர். இதனையடுத்து வனத்துறையினர் அப்பகுதியில் ஆய்வு செய்தபோது அதில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி 20 வயது ஆண் யானை உயிரிழந்துள்ளது. இது தொடர்பாக தோட்ட காவலாளி துரைப்பாண்டியனை போலீசார் கைது செய்தனர்.

News August 18, 2024

சதுரகிரி மலையில் 2 டன் நெகிழிக் கழிவுகள் அகற்றம்

image

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசை விழாவையொட்டி ஆக.1 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை ஒரு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனர். இந்த நிலையில் சுந்தர மகாலிங்கம் கோயில், மலைப் பாதையில் பக்தர்கள் விட்டுச் சென்ற நெகிழிக் கழிவுகளை சூழல் மேம்பாட்டுக் குழுவினர். களப் பணியாளர்கள், தாணிப்பாறை சூழல் மேம்பாட்டுக் குழுவினர் உள்ளிட்டோர் 2 டன் கழிவுகளை அகற்றினர்.

News August 18, 2024

வெம்பக்கோட்டையில் பட்டாசு வெடி விபத்து

image

வெம்பக்கோட்டையில் பட்டாசு வியாபாரி குருவையாவிற்கு சொந்தமான மாட்டு தொழுவத்தில் கார்த்திக் என்ற வெல்டிங் தொழிலாளி வெல்டிங் பணி செய்துள்ளார். அப்போது தீப்பொறி பட்டு பட்டாசு வெடித்து சிதறியதில் வெல்டிங் தொழிலாளி கார்த்திக் மற்றும் மாட்டு தொழுவ உரிமையாளர் குருவையா படுகாயங்களுடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

News August 18, 2024

விருதுநகரில் மழைக்கு வாய்ப்பு

image

தென்னிந்தியாவில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி இன்று (ஆக.18) இரவு 7 மணி வரை விருதுநகர் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்தால் கமெண்ட் செய்யவும்.

News August 18, 2024

நீங்களும் இனி ரிப்போர்ட்டர் தான்

image

தமிழில் முன்னணி Short News செயலியான Way2News-ல், விருதுநகர் மாவட்டத்தில் உங்களை சுற்றி நடக்கும் உள்ளூர் நிகழ்சிகள், புகார்கள், கோரிக்கைகள், அரசியல், ஆன்மிக நிகழ்வுகளை செய்திகளாக பதிவேற்றி நீங்களும் செய்தியாளராக மாறுங்கள். செய்திகள் உடனுக்குடன் பதிவிட்டு வருவாய் ஈட்டலாம். இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் 9642422022, என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். * உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்*

error: Content is protected !!