Virudunagar

News February 2, 2025

புரோட்டா மாஸ்டர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

image

அருப்புக்கோட்டை அருகே ம.ரெட்டியபட்டியை சேர்ந்தவர் முத்துராஜ்(55). புரோட்டா மாஸ்டர் ஆன முத்துராஜ் தனது வீட்டில் இருந்தபோது திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. அவரது குடும்பத்தார் முத்துராஜை மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து ம.ரெட்டியபட்டி போலீசார் நேற்று பிப்.1 வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்

News February 2, 2025

கடை இடித்த அதிகாரிகள் மீது புகார்

image

ஶ்ரீவி.கீழரதவீதியில் இருந்து அரங்கநாத பெருமாள் கோவிலுக்கு செல்லும் தெரு நுழைவுப் பகுதியில் உள்ள கடையை நகராட்சி அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடையின் முன் பகுதியை இடித்தனர். இந்நிலையில் கோயில் நிர்வாகம் கையகப்படுத்திய அக்கடையை இடித்த நகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோயில் நிர்வாகம் சார்பில்,நகர் காவல் நிலையத்தில் செயல் அலுவலர் சக்கரையம்மாள் புகார் அளித்துள்ளார்.

News February 1, 2025

கடை இடித்த அதிகாரிகள் மீது புகார்

image

ஶ்ரீவி.கீழரதவீதியில் இருந்து அரங்கநாத பெருமாள் கோவிலுக்கு செல்லும் தெரு நுழைவுப் பகுதியில் உள்ள கடையை நகராட்சி அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடையின் முன் பகுதியை இடித்தனர். இந்நிலையில் கோயில் நிர்வாகம் கையகப்படுத்திய அக்கடையை இடித்த நகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோயில் நிர்வாகம் சார்பில்,நகர் காவல் நிலையத்தில் செயல் அலுவலர் சக்கரையம்மாள் புகார் அளித்துள்ளார்.

News February 1, 2025

விருதுநகர் வடமேற்கு த.வெ.க நிர்வாகிகள் நியமனம்

image

தமிழக வெற்றி கழகத்தின் புதியதாக மாவட்ட நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி விருதுநகர் வடமேற்கு மாவட்ட செயலாளராக மாரிச்செல்வம், இணைச் செயலாளராக பாலமுருகன், பொருளாளராக செந்தில்பிரபு, துணைச் செயலாளராக ரோஸ்பாண்டியன், அகல்யா உட்பட 10க்கும் மேற்பட்ட செயற்குழு உறுப்பினர்களை நியமனம் செய்து தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

News February 1, 2025

விருதுநகர் த.வெ.க நிர்வாகிகளை நியமனம் செய்து விஜய் அறிவிப்பு

image

தமிழக வெற்றி கழகத்தின் புதியதாக மாவட்ட நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளராக செல்வம், இணைச் செயலாளராக முத்துப்பாண்டி, பொருளாளராக சங்கர் கணபதி, துணைச் செயலாளராக மரகதமணி, நாகஜோதி உட்பட 10க்கும் மேற்பட்ட செயற்குழு உறுப்பினர்களை நியமனம் செய்து தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

News February 1, 2025

மத்திய பட்ஜெட்டிற்கு தமிழ்நாடு நிதி அமைச்சர் கண்டனம்

image

நாட்டின் வளர்ச்சியில் தொடர்ந்து முக்கியப் பங்காற்றி வரும் மாநிலமான தமிழ்நாட்டிற்கு, ஒன்றிய பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. தமிழ்நாட்டின் பங்களிப்பிற்கு அங்கீகாரம் இல்லை. குறைந்த பங்களிப்பு செய்யும் மாநிலங்கள் அதிக ஆதாயம் அடைந்துள்ளன என தமிழ்நாடு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்துள்ளார்.

News February 1, 2025

விருதுநகரில் கோழிகளுக்கு நோய் தடுப்பூசி முகாம்

image

கால்நடை பராமரிப்புதுறை மூலம் விருதுநகர் மாவட்டத்தில் தற்போது கோழிகளை தாக்கும் வெள்ளைக் கழிச்சல் நோய்க்கான தடுப்பூசி முகாம்களை இன்று முதல் பிப்.14 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கோழிகள் வளர்ப்போர், கோழிப்பண்ணையாளர்கள் 8 வார வயதிற்குள்ள கோழிகள், குஞ்சுகளுக்கு தடுப்பூசியினை போட்டுக்கொள்ளலாம். மாவட்டத்திற்கு இதற்கு 1.68 லட்சம் டோஸ் மருந்துகள் ஒதுக்கீடு செய்துள்ளதாக ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்

News February 1, 2025

படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு

image

ராஜபாளையம் ராம்கோ பேப்ரிக் யூனிட்டிற்கு Diploma, ITI படித்த ஆட்கள் 200 பேர் தேவை. கலந்துகொள்ள விரும்புவோர் 03-02-2025 காலை 10:30 மணிக்கு ராம்கோ ITI யில் நடைபெறும் நேர்முக தேர்வில் கலந்துகொள்ளலாம். வேலை தெரிந்தவர்களுக்கு தகுதிக்கேற்ற ஊதியம்,ESI,EPF வசதி என ராம்கோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News February 1, 2025

உரிமம் இல்லாமல் விதைகள் விற்றால் கடும் நடவடிக்கை

image

விருதுநகர் மாவட்டத்தில் நெல் அறுவடையை தொடர்ந்து உளுந்து, பச்சை பயிறு, பருத்தி உள்ளிட்ட காய்கறிகள் சாகுபடிக்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனர். மேற்கண்ட பயிர்களுக்கு உரிமம் பெற்ற விதை விற்பனை நிலையங்களில் மட்டுமே விதைகளை வாங்க வேண்டும். உரிமம் இல்லாமல் அல்லது காலாவதியான உரிமத்துடன் விதைகள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

News January 31, 2025

கருத்து கேட்டு கூட்டம் நடத்த எதிர்பார்ப்பு

image

சிவகாசி மாநகராட்சியை விரிவாக்கம் செய்ய ஏதுவாக சிவகாசி மாநகராட்சியையொட்டி உள்ள ஆனையூர், தேவர்குளம், சாமிநத்தம், சித்துராஜபுரம், விஸ்வநத்தம், நாரணாபுரம், அனுப்பன்குளம், பள்ளப்பட்டி செங்கல நாச்சியார்புரம் ஆகிய கிராம பஞ்சாயத்துக்களையும் இணைத்தது. இதற்கு பல்வேறு கிராம ஊராட்சி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இதுகுறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்டு கூட்டம் நடத்த கோரிக்கை எழுந்துள்ளது.

error: Content is protected !!