Virudunagar

News February 5, 2025

வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்கள் கவனத்திற்கு

image

வெளிநாடுகளுக்கு வேலை, கல்வி நிமித்தமாக செல்லும் இளைஞர்கள் ஒன்றிய அரசின் பதிவு செய்யப்பட்ட முகவர்கள் மூலம் வேலைக்கான விசா, பணி ஒப்பந்த விவரங்களை சரியாக தெரிந்து கொள்ள வேண்டும். வேலைக்கு செல்வோர் அங்கீகரிக்கப்பட்ட முகவர்களின் பட்டியலை www.emigrate.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். வெளி நாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்கள் வேலையின் உண்மை தன்மையை உறுதி செய்ய வேண்டும்.

News February 5, 2025

விருதுநகர் திரையரங்கில் வெளியாகும் விடாமுயற்சி

image

நடிகர் அஜித், மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவான `விடாமுயற்சி` நாளை(பிப்.6) வெளியாக உள்ளது. இதற்கு ரசிகர் மிகவும் ஆர்வத்துடன் உள்ள நிலையில் படத்திற்கான டிக்கெட்டை முன்பதிவு செய்து வருகின்றனர். அதில் விருதுநகர் ராஜலட்சுமி, ராஜபாளையம் ரேடியன்ஸ், மீனாட்சி, சிவகாசி கனேஷ், ஸ்ரீபழனி ஆண்டவர், ஸ்ரீவி ரேவதி, தெய்வம், அருப்புக்கோட்டை KLASMAX , குயின்ஸ் ரத்தினவேல், தமிழ்மணி உள்ளிட்ட திரையரங்கில் வெளியாகிறது.

News February 5, 2025

ராஜபாளையம் தம்பதி கொலையில் குண்டாஸ்

image

ராஜபாளையத்தில் 16.7.22 அன்று வீட்டில் தனியாக இருந்த ராஜகோபால்(75), அவரது மனைவி குருபாக்கியம் ஆகியோர் கொலை செய்யப்பட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நகைகள் மீட்கப்பட்ட நிலையில் முக்கிய குற்றவாளியான முத்துக்குமாரை போலீசார் குண்டர் சட்டத்தில் நேற்று(பிப்.4) கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

News February 5, 2025

அலுவலர்களை மிரட்டினால் குண்டாஸ் – ஆட்சியர்

image

விருதுநகர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மணல், இதர கனிமங்களை வெட்டி எடுப்பது, அதை எடுத்துச்செல்வது குற்றமாகும். மேலும் கனிமங்களை வெட்டி எடுப்பது, அதை எடுத்துச்செல்வது, அதைத் தடுக்க முற்படும் அரசு அலுவலர்களை அச்சிறுத்துவது போன்ற குற்ற சம்பங்களில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் உள்ளிட்ட குற்றவியல் சட்டங்களின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்படுவர் என ஆட்சியர் ஜெயசீலன் எச்சரித்துள்ளார்.

News February 5, 2025

முன்னாள் படை வீரர்களுக்கு காக்கும் கரங்கள் திட்டம்

image

இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற முன்னாள் படைவீரர்களது பாதுகாப்பை உறுதி செய்திடவும், வாழ்வாதாரத்தை மேம்படுத்திடவும், “முதல்வரின் காக்கும் கரங்கள்” என்ற புதிய திட்டம் மூலம் முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்கள் தொழில் தொடங்குவதற்காக மானியத்துடன் கூடிய கடனுதவிகள் பெற விண்ணப்பிக்கலாம். இதற்கு விருதுநகர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல இணை இயக்குநர் அலுவகத்தினை தொடர்பு கொள்ளவும்.

News February 4, 2025

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கடும் எச்சரிக்கை

image

மணல் மற்றும் இதர கனிமங்கள் வெட்டி எடுப்பது மற்றும் எடுத்துச்செல்வது, அதைத் தடுக்க முற்படும் அரசு அலுவலர்களை அச்சுறுத்துவது போன்ற குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் உள்ளிட்ட குற்றவியல் சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் எச்சரித்துள்ளார்.

News February 4, 2025

லாரி பின் சக்கரத்தில் சிக்கி வாலிபர் உயிரிழப்பு

image

விருதுநகர் அருகே மல்லாங்கிணறு அழகர்சாமி கோவில் தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன் (35). இவரின் எட்டு வயது மகனுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். இந்நிலையில், நேற்று மதியம் அரசு மருத்துவமனை அருகே உள்ள சாலையில் சீனிவாசன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக சென்ற லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி சீனிவாசன் உயிரிழந்தார். 

News February 4, 2025

நம்ம ஊர் நம்ம கோவில்

image

சிவபெருமானின் தேவாரப் பாடல் பெற்ற 274 ஆலயங்களில் 202வது ஆலயமாக திருச்சுழி திருமேனிநாதர் கோவில் விளங்குகிறது. பழமையான இந்த ஆலயத்தில் அம்பாள் திரிபங்கி லட்சண அமைப்பில், இடுப்பு, கழுத்து, இடது கால் போன்றவற்றை சற்றே சாய்த்து நடன அமைப்பில் தரிசனம் தருகிறாள். இத்தல இறைவனை சிவராத்திரி அன்று,ஒரு வில்வ இலை கொண்டு அர்ச்சித்தால், உலகம் முழுவதும் உள்ள அனைத்து சிவாலயங்களுக்கும் சென்று வழிபட்ட பலன் கிடைக்கும்.

News February 4, 2025

அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி

image

ஸ்ரீவி பகுதியை சேர்ந்த ஜெயமாலா என்பவரிடம் கீழராஜகுலராமனை சேர்ந்த ஆனந்த், சாந்தி தம்பதியினர் ராஜபாளையத்தில் துப்புரவு பணியாளர்களை கணக்கெடுக்கும்அரசு வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார். இதை நம்பி அவர் முதலில் ரூ.40,000 கொடுத்த நிலையில் பின் 5 பவுன் நகைகளை அடமானம் வைத்து ரூ.2 லட்சம் செலுத்தியுள்ளனர். பின் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் ராஜபாளையம் காவல் நிலையத்தில் ஆனந்த், சாந்தி மீது புகார் அளித்துள்ளார்.

News February 3, 2025

விருதுநகரில் தயார் நிலையில் 17 சேமிப்பு கிட்டங்கிகள்

image

விருதுநகர் மாவட்டத்தில் 17 ,800 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 17 சேமிப்பு கிட்டங்கிகள் வேளாண் விளைபொருட்களை இருப்பு வைக்க தயார் நிலையில் உள்ளது. இதில் 6 மாதம் வரை இருப்பு வைத்து கொள்ளும் நிலையில் 15 நாட்கள் வரை வாடகை வசூலிக்கப்படுவதில்லை. விவசாயிகள் தாங்கள் விளைவித்த விளைபொருட்களை ஒழுங்குமுறை விற்பனை கூட கிட்டங்கிகளில் இருப்பு வைத்து பயன்பெறலாம் என விற்பனை குழு செயலாளர் வேலுச்சாமி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!