Villupuram

News September 15, 2025

விழுப்புரம்: இன்று வாரந்திர குறை தீர்வு கூட்டம்

image

விழுப்புர மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(செப்.15) வாரந்திர குறை தீர்வு கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்களின் குறைகளைத் தீர்ப்பதற்காக அரசு அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் கலந்து கொள்வர். இந்த கூட்டத்தில், மக்கள் தங்கள் புகார்களைத் தெரிவிக்கலாம், அதிகாரிகள் அவற்றை நிவர்த்தி செய்ய முயற்சிப்பார்கள். மற்றவர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்கள்

News September 14, 2025

விழுப்புரம்: அரசு மகளிர் கல்லூரியில் மாணவியர் சேர்க்கை

image

விழுப்புரம், புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், கலந்தாய்வுகள் முடிவடைந்த நிலையில், கணிதவியல் மற்றும் புள்ளியியல் பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. எனவே, விருப்பமுள்ள மாணவிகள், கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம் என, கல்லூரி முதல்வர் தாமரைக்கண்ணன் தெரிவித்துள்ளார்.

News September 14, 2025

விழுப்புரம் மாணாக்கர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய எண்

image

பள்ளி மாணவ, மாணவிகளுக்குப் பாலியல் தொல்லைகள், அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும் நிலையில், இலவச உதவி மையத்தை அணுகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மன, உடல், பாலியல் சார்ந்த துன்புறுத்தல்களுக்கோ அல்லது அச்சுறுத்தல்களுக்கோ உள்ளாக்கப்படும் மாணவர்கள், 14417 என்ற இலவச உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம். கல்வி தொடர்பான சந்தேகம் உள்ள மாணவர்களும் இந்த எண்ணை தொடர்புக் கொள்ளலாம். அவசியம் SHARE பண்ணுங்க

News September 14, 2025

‘விஜய் பின்னால் இருப்பது கொள்கையில்லா கூட்டம்’

image

தேர்தலில் அளித்த 90% வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றியுள்ளது. ஆனால், சிலர் அரசியலுக்காக, திமுக ஆட்சியை குறை கூறுகின்றனர் என, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பொன். கௌதம சிகாமணி, விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும், “கூட்டம் கூடுவதால் தலைவனாக முடியாது. கொள்கையில்லா கூட்டம் தான், விஜய் பின்னால் கூடுகின்ற கூட்டம்” என்றும் அவர் கூறினார்.

News September 14, 2025

விழுப்புரம்: கொட்டிக்கிடக்கும் வேலைகள்!

image

▶️தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சியில் வேலை – tnrd.tn.gov.in ▶️ இந்திய உளவுத் துறையில் Intelligence Bureau வேலை – https://www.mha.gov.in/ ▶️எஸ்பிஐ வங்கி – https://sbi.co.in/ ▶️ இந்தியன் ஆயில் ஜூனியர் ஆபீசர் வேலை – https://iocl.com/ ▶️இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் Specialist Officer – www.iob.in/Careers ▶️கனரா வங்கியில் வேலை – https://www.canmoney.in/careers ▶️அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 14, 2025

விழுப்புரம்: வீட்டு வரி, குடிநீர் வரி செலுத்துவது இனி ஈஸி!

image

விழுப்புரம் மக்களே! ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். https://vptax.tnrd.tn.gov.in/ என்ற இணையதளத்தில் அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 அழைக்கலாம். இதனை அனைவருக்கும் Share பண்ணுங்க!

News September 14, 2025

விழுப்புரம் மக்களே.. இதை தெரிஞ்சிகோங்க..!

image

விழுப்புரம் மக்களே! நீங்கள் புகார் அளித்த பிரச்சனைகள் வழக்குகளாகி பல வருடங்கள் ஆகி இருக்கும். அந்த வழக்குகளின் நிலை தெரியமால் இருப்பீர்கள். இதற்காக கோர்ட் வாசலையே சுற்றுகீறிர்களா?இதை தீர்க்க ஒரு வழி உண்டு. உங்க போனில் ECOURTS <இடைவெளி> <உங்கள் CNR எண்> என்ற வடிவில் 9766899899 எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்புங்க. வழக்கு நிலை உடனே உங்க Phone-க்கு வரும். இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!

News September 14, 2025

விழுப்புரம்: ராமதாஸ், அன்புமணிக்கு தடை?

image

பாமகவில் ராமதாஸ், அன்புமணி இடையிலான அதிகார மோதல் 8 மாதங்களாக நீடித்தது. இதையடுத்து, செப்.11ம் தேதி அன்புமணியை கட்சியிலிருந்து நீக்கி ராமதாஸ் அதிரடி நடவடிக்கை எடுத்தார். வரும் செப்.17ம் தேதி திண்டிவனத்தில் நடைபெறும் தியாகிகள் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில், இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதால், நிகழ்ச்சிக்கு இருவருக்கும் தடைவிதிக்க திண்டிவனம் சார் ஆட்சியருக்கு டிஎஸ்பி பரிந்துரைத்துள்ளார்

News September 14, 2025

விழுப்புரம்: மண்ணெண்ணை குடித்த முதியவர் பலி

image

விழுப்புரம் வட்டம் தெளி கிராமத்தை சேர்ந்த சக்கரவர்த்தி(85). இவர் கடந்த, 10ம் தேதி வீட்டில் கவனக்குறைவாக குடிநீர் என நினைத்து, மண்ணெண்ணையை குடித்தார். மயங்கி விழுந்த அவரை மீட்டு, உறவினர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று(செப்.13) காலை உயிரிழந்தார். இதுகுறித்து, காணை போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

News September 14, 2025

விழுப்புரம்: 2586 வழக்குகளில் ரூ.30.49 கோடிக்கு தீர்வு

image

விழுப்புரம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நேற்று (செப்.13) நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு உயர் நீதிமன்ற நீதிபதி எம்.தண்டபாணி தலைமை தாங்கினார். இதில் 2586 வழக்குகளில் ரூ.30.49 கோடிக்கு, தீர்வு காணப்பட்டதாக தெரிவித்தனர். இதில் நீதிபதி மணிமொழி, சட்டப்பணிகள் ஆணையக்குழு செயலர் ஜெயச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.

error: Content is protected !!