Villupuram

News July 7, 2025

விழுப்புரத்தில் பெண் தூக்கிட்டு தற்கொலை!

image

ஒரத்துார் கிராமத்தை சேர்ந்த முத்துவேல் (28) சிந்தாமணியை சேர்ந்த மோனிஷா (25) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். முத்துவேல் குடித்துவிட்டு வருவதால் மனைவியிடையே தகராறு ஏற்படும். இதற்கிடையே நேற்று மீண்டும் முத்துவேல் குடித்துவிட்டு வந்ததால், இருவருக்கும் தகராறு ஏற்பட்டு, மோனிஷா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News July 7, 2025

விழுப்புரம் – ராமேஸ்வரம் சிறப்பு ரயில் நீட்டிப்பு

image

தென்னக ரயில்வே இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், விழுப்புரம் – ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு ரயில் சேவை ஜூலை 27 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வண்டி எண்கள் 06109 (விழுப்புரம்-ராமேஸ்வரம்) மற்றும் 06110 (ராமேஸ்வரம்-விழுப்புரம்) ஆகிய ரயில்கள் இரு மார்க்கங்களிலும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தொடர்ந்து இயக்கப்படும். இந்த நீட்டிப்பு பயணிகளுக்கு பெரும் வசதியை ஏற்படுத்தியுள்ளது.

News July 7, 2025

விழுப்புரம் அரசு பள்ளிக்கு பேராசிரியர் அன்பழகன் விருது

image

விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு 2024-2025 ஆம் ஆண்டுக்கான பேராசிரியர் அன்பழகன் சிறந்த பள்ளிக்கான விருது இன்று (ஜூலை 6) வழங்கப்பட்டது. கற்றல்-கற்பித்தல், ஆசிரியர் திறன் மேம்பாடு மற்றும் மாணவர்களின் கல்வி நலன் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிகளில் சிறந்து விளங்கியதற்காக இந்த விருது வழங்கப்பட்டது. பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இவ்விருதை வழங்கினார்.

News July 6, 2025

விழுப்புரம்: இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (ஜுலை.06) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவல் அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம் அல்லது 100 அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.

News July 6, 2025

பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள்

image

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாடு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த தமிழக முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மாணவர்களின் நலன் கருதி இத்திட்டத்தை அமல்படுத்த அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

News July 6, 2025

அரகண்டநல்லூர்: வழிபறியியல் ஈடுபட்ட வாலிபர் கைது

image

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூர் அடுத்துள்ள, கீழ்க்கொண்டூர் கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அப்பகுதியில் மது போதையில் இருந்த மூன்று இளைஞர்கள் அவ்வழியாக வந்த நபரிடம் 45 ஆயிரம் ரூபாய் பணத்தை வழிப்பறி செய்துள்ளனர். இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் அரகண்டநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தமிழரசன் என்ற நபரை இன்று(ஜூலை 6) கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News July 6, 2025

புதிய பாமக நிர்வாகிகள்: ஜூலை 8 செயற்குழு கூட்டம்

image

நேற்று (ஜூலை 5) பாமக நிர்வாகக் குழுவிலிருந்து அன்புமணி ராமதாஸ் நீக்கப்பட்டு, 21 புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். பாமக நிறுவனர் ராமதாஸ் இந்த மாற்றங்களைச் செய்தார். இந்நிலையில், ஓமந்தூரில் ஜூலை 8 அன்று செவ்வாய்க்கிழமை நடைபெறும் பாமக செயற்குழுக் கூட்டத்திற்கு அன்புமணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கௌரவ தலைவர் ஜி.கே. மணி அறிவித்துள்ளார்.

News July 6, 2025

விழுப்புரம்: “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் குறித்த கையேடு!

image

“உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் தன்னார்வலர்கள் மூலம் வீடு வீடாக சென்று விண்ணப்பம் (ம) தகவல் கையேடு வழங்கும் பணி 07.07.2025 முதல்
தொடங்கவுள்ளது. தொடர்ந்து 15.07.2025 முதல் முகாம்கள் நடைபெறவுள்ளது.
“உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தில் உங்கள் பகுதிகளில் நடைபெறும் முகாம்களில் பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான், தெரிவித்துள்ளார்.

News July 6, 2025

கால் மாற்றி அறுவை சிகிச்சை விசாரணைக்கு உத்தரவு

image

விழுப்புரம் விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த நடத்துநர் மாரிமுத்துவிற்கு விழுப்புரம் அரசு மருத்துவமனையில் வலது காலில் அறுவை சிகிச்சை செய்வதற்கு பதிலாக இடது காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில், இதுகுறித்து நான்கு பேர் கொண்ட மருத்துவக் குழு விசாரணை செய்ய இன்று ஜூலை 6ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

News July 6, 2025

மகளிர் உரிமைத்தொகை பெற நாளை முதல் விண்ணப்பம்

image

மகளிர் உரிமை தொகை பெற நாளை ஜூலை 7 முதல் விண்ணப்பங்கள் வீடு வீடாக விநியோகிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது. ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற திட்டத்தின் கீழ் உள்ள தன்னார்வலர்கள் மூலம் விண்ணப்பம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத்தொகை பெறாதவர்கள் உரிய ஆவணங்கள் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!