India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (03.03.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
மேல்மலையனூர் தேர் திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளதால் (04.03.2025) நாளை விழுப்புரம், அவலூர்பேட்டை, விக்கிரவாண்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மறைமுக ஏலம் நடைபெறாது என்பதை கமிட்டி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் (05.03.2025) புதன்கிழமை வழக்கம் போல் விவசாயிகள் தங்களது விளைபொருட்களை கொண்டுவந்து பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயில் திருவிழா நாளை நடைபெறுவதை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், மத்திய அரசு அலுவலகங்கள் மட்டும் குறிப்பாக வங்கி, தபால் நிலையங்கள் மட்டும் இயங்கும். மற்ற அலுவலகங்கள் அனைத்திற்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகளிடமிருந்து மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்,இ.ஆ.ப., அவர்கள் இன்று (03.03.2025) பெற்றுக்கொண்டார். பின்னர் அவர்களது மனுக்களுக்கு உடனடி தீர்வு காண்பதாக உறுதி அளித்தார்.
திமுக ஆட்சி பொறுப்பு ஏற்று 4 ஆண்டுகள் ஆகி நீட் ரத்து ரகசியம் சொல்லவில்லை. நீட் தேர்வு ரத்து ரகசியத்தை # Daddy-Son உடனடியாக சொல்ல வேண்டும் என்றும், திண்டிவனத்தில் நீட் தேர்வு குறித்த அச்சம் காரணமாக இந்துமதி என்ற மாணவி நேற்று தற்கொலை செய்து கொண்டதற்கு ஸ்டாலின் மாடல் அரசு தான் முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும்,அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை மூலம் இன்று வலியுறுத்தியுள்ளார்.
தமிழகம் முழுவதும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வானது இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. திண்டிவனம் கல்வி மாவட்டத்தில் 49 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்று வருகிறது. இதில் 4778 மாணவர்களும், 4976 மாணவிகளும் என மொத்தம் 9754 தேர்வில் கலந்துக் கொண்டுள்ளனர். இன்று மொழிப்பாட தேர்வு தொடங்கி உள்ள நிலையில் இம்மாதம் மார்ச் 25 – ஆம் தேதி வரை 12-ம் வகுப்பு பொதுக் தேர்வு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
செஞ்சி மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு, நாளை (மார்ச்.4) விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. இதற்கு பதிலாக மார்ச்.15 ஆம் தேதி (சனிக்கிழமை) பணி நாள் எனவும், பிளஸ் டூ தேர்வு வழக்கம்போல் நடக்கும் எனவும் மாவட்ட ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (02.03.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், வண்டிமேடு பகுதியில் சமூக விழிப்புணர்வு இயக்கம், சமூக ஆர்வலர்களின் கூட்டமைப்பு சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று காலை நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய மாநில அரசுகள் சமூக ஆர்வலர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், ஒலக்கூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை ஒலக்கூர் ஊராட்சியில் அமைத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
சி.வி. சண்முகம் மீதான 4 அவதூறு வழக்கு விசாரணையை ஏப்ரல் 2ஆம் தேதிக்கு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் ஒத்திவைத்தது. விழுப்புரம் மாவட்டம் வானூர் மற்றும் கோட்டகுப்பம் ஆகிய பகுதிகளில் நடந்த பொதுக்கூட்டத்தில் சி.வி. சண்முகம் (எம்பி), தமிழக முதல்வரையும், தமிழக அரசையும் அவதூறாக பேசியதாக வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் விசாரணையை அடுத்த மாதம் நீதிபதி ஒத்தி வைத்தார்.
Sorry, no posts matched your criteria.