Villupuram

News February 16, 2025

விழுப்புரம் இரவு நேர ரோந்து காவலர்களின் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (16.02.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News February 16, 2025

மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் வேலை

image

பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் துணை ராணுவத்தின் ஒரு பிரிவான மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை (CISF) கீழ் காலியாக உள்ள கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். டிரைவர் மற்றும் பம்ப ஆப்பரேட்டர் பிரிவில் 1,124 காலிப்பணியிடங்கள் உள்ளன. 10ஆம் வகுப்பு தகுதி போதுமானது. தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை மாத சம்பளம் வழங்கப்படும். வரும் மார்ச் 4ஆம் தேதிக்குள் <>விண்ணப்பிக்கலாம்.<<>>

News February 16, 2025

முன்னாள் படைவீரர்களுக்கான  சிறப்பு குறைதீர் கூட்டம்

image

முன்னாள் படைவீரர்களுக்கான சுயதொழில் முனைவோர் கருத்தரங்கு மற்றும் முன்னாள் படைவீரர்கள், அவர்களைச் சார்ந்தோருக்கான சிறப்பு குறைதீர் கூட்டம், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் பிப்.19-ஆம் தேதி ஆட்சியரககுறைதீர் கூட்டரங்கில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் துறை அலுவலர்கள் பங்கேற்று, தத்தமது துறையிலுள்ள பல்வேறு திட்டங்கள் குறித்து தெரிவிக்கவுள்ளனர் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News February 16, 2025

கல்லால் அடித்து பெண் கொலை கணவா் கைது

image

கண்டமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் கி.மணிகண்டன் இவரது மனைவி உமா மணிகண்டனுக்கும் உமாவுக்கும் இடையே குடும்பத் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவு 11 மணியளவில் தூங்கிக் கொண்டிருந்த உமாவின் தலையில் குழவிக் கல்லால் மணிகண்டன் அடித்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த உமா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 15, 2025

விழுப்புரம் இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (15.02.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News February 15, 2025

திமுக பொறுப்பாளரை வரவேற்க நிர்வாகிகளுக்கு அழைப்பு

image

திராவிட முன்னேற்றக் கழகத்தின், விழுப்புரம் வடக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக பொறுபேற்றிருக்கும் செஞ்சி மஸ்தான் அவர்களுக்கு செஞ்சி கூட்ரோட்டில் இன்று (பிப்.15) மாலை 05.00 மணி அளவில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட இருக்கிறது. இந்த நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என செஞ்சி ஒன்றிய திமுக சார்பில் ஒன்றிய பெருந்தலைவர் விஜயகுமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

News February 15, 2025

விழுப்புரத்தில் அரசு பேருந்து மோதி பெண் பலி

image

விழுப்புரம் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை மருந்து கடையில் மருந்து வாங்கிக் கொண்டு சாலையை கடக்கும் போது புதுச்சேரியில் இருந்து வந்த அரசு பேருந்து மோதி 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண் உயிரிழந்தார். இதுகுறித்து விழுப்புரம் மேற்கு காவல் நிலையம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

News February 15, 2025

அமைச்சர் பொன்முடி மீதான வழக்கு ஒத்திவைப்பு

image

அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட 7 பேர் மீதான செம்மண் குவாரி வழக்கு விழுப்புரம் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணைக்கு குற்றம் சாட்டப்பட்ட ஜெயச்சந்திரன், சதானந்தம், கோபிநாதன் ஆகிய மூவரும் நேரில் ஆஜராகினர். அமைச்சர் உள்ளிட்ட நான்கு பேர் ஆஜராகவில்லை. அதற்கான காரணம் குறித்து மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, வழக்கை வரும் மார்ச் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

News February 15, 2025

அதிமுக அமைச்சர் சி.வி. சண்முகம் மீதான வழக்கு ஒத்திவைப்பு

image

விழுப்புரத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் முதலமைச்சர் குறித்து அவதூராக பேசியதாக முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி. சண்முகம் மீது தொடரப்பட்ட வழக்கு மீதான விசாரணை நேற்று விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த விசாரணைக்கு சி.வி சண்முகம் ஆஜராகவில்லை. அவர் தரப்பு வழக்கறிஞர்கள் ஆஜராகி நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தனர். இதையடுத்து, வழக்கை மார்ச் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

News February 15, 2025

சிறப்பு பெற்ற மேல்சித்தாமூர் சமண மடம்

image

தமிழ்நாட்டில் வாழ்ந்த திகம்பர சாமிகளின் தலைமையகம் திண்டிவனத்தில் இருந்து 20 கி.மீ. தொலைவில் மேல் சித்தாமூரில் உள்ளது. இங்குள்ள 2 சமணக் கோயில்கள் ஒன்றில் பர்சவானந்தரும், மற்றொன்றில் மயிலானந்தரும் வீற்றுள்ளனர். மயிலானந்தரில் பெரிய கற்பாறையில் பஹீபாலி, பர்சவானந்தர், ஆதிநாதர், மஹாவீரர், அம்பிகா யஷீ ஆகிய சிற்பங்கள் கல்லில் வடிக்கப்பட்டுள்ளன. இந்தச் சமண ஆலயங்கள் 16ம் நூற்றாண்டில் கட்டப்பட்டவையாகும்.

error: Content is protected !!