India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரம் மக்களே வாடகை வீட்டில் உள்ளீர்களா? வீட்டு ஓனர் ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸாக பெற வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க!
ஏர்போர்டில் பல்வேறு பணிகளுக்கு ஆட்களை நியமிக்கும் நிறுவனமான IGI Aviation Servicesல் Airport Ground Staff பணிக்கு 1446 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு 12th பாஸ் போதும். மாதம் ரூ.25,000 – 35,000 வழங்கப்படும். 18-30 வயது உடைய ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் <
விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் அனைத்து ஊராட்சிகளிலும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்ட பணியில் குறித்து மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஒன்றிய பொறியாளர்களிடம் கலந்தாய்வு நடைபெற்றது இதில் துறை அதிகாரிகள் பங்கேற்று தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்
ஏர்போர்டில் பல்வேறு பணிகளுக்கு ஆட்களை நியமிக்கும் நிறுவனமான IGI Aviation Servicesல் Airport Ground Staff பணிக்கு 1446 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு 12th பாஸ் போதும். மாதம் ரூ.25,000 – 35,000 வழங்கப்படும். 18-30 வயது உடைய ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் <
விழுப்புரம் அருகே உள்ள அய்யன்கோவிலைட்டு கிராமத்தில் 25 மண்பாண்டத் தொழிலாளர் குடும்பங்கள், விநாயகர் சதுர்த்திக்காக காகிதக் கூழ் சிலைகளைத் தயாரித்து வருகின்றனர். 2 அடி முதல் 12 அடி உயரம் கொண்ட இந்தச் சிலைகள், மும்பை மாடல், கற்பக விநாயகர், ராஜ கணபதி உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் உருவாகின்றன. ₹1,000 – ₹23,000 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இந்தச் சிலைகள், வெளி மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகின்றன.
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் 9,168 விபத்துகள் நடந்துள்ளன. இதில், 2,173 பேர் உயிரிழந்துள்ளனர். கவனக்குறைவே அதிக விபத்துகளுக்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது. விபத்துகளில் உயிரிழப்புக்குக் காரணமான 993 நபர்களின் ஓட்டுநர் உரிமங்கள் கடந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டன. சாலை விதிகளைப் பின்பற்றி விபத்துகளைத் தவிர்க்க வேண்டும் எனப் போக்குவரத்து அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இ-சேவை மையம் தொடங்க விருப்பமா? அதற்கு முதலில், www.tnesevai.tn.gov.in , என்ற தமிழக அரசின் இ-சேவை இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். புகைப்படம், கல்வி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், ஆதார் அட்டை, பான் கார்டு, வங்கிக் கணக்கு புத்தகம், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை சமர்பித்து விண்ணப்பிக்கலாம். தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க.
கண்டாச்சிபுரம் அடுத்த ஒட்டம்பட்டு ஊராட்சித் தலைவர் முருகன், நேற்று (ஆக.22) கிராம மக்களுடன் இணைந்து விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தார். அந்த மனுவில், கஞ்சா விற்பனை குறித்துத் தான் தகவல் தெரிவித்ததால் தனக்குக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, தனக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
விழுப்புரம் மாவட்ட கடலோர ஊர்க்காவல் படையில் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள 15 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கோட்டக்குப்பம் உட்கோட்டப் பகுதியில் உள்ள ஆண்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும், 20 முதல் 45 வயதுக்குட்பட்டவராகவும், குற்றச் செயலிலும் ஈடுபடாதவராகவும் இருக்க வேண்டும். ஆக.25ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நேற்று(ஆக.22) நடந்தது. இதில், 21 நிறுவனங்கள் கலந்து கொண்டு ஆட்களை தேர்வு செய்தனர். இந்த முகாமில், 164 பேர் கலந்து கொண்டதில், 37 பேர் தேர்வு செய்யப்பட்டு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. மேலும், 13 பேர் இரண்டாம் கட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.