Villupuram

News April 26, 2025

தண்ணீரில் மூழ்கடித்து பச்சிளம் குழந்தையை கொன்ற தாய்

image

விழுப்புரம், விக்கிரவாண்டியை சேர்ந்தவர் பவுசியா(19). இவருக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், மன அழுத்தத்தில் இருந்துவந்த பவுசியா நேற்று தூக்கிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். உறவினர்கள், சென்று பார்த்தபோது பச்சிளம் ஆண் குழந்தை இறந்து கிடப்பதும் தெரிய வந்தது. குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்து கொன்றதாக பவுசியா கூறினார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 26, 2025

பட்டா, சிட்டா விவரங்களை பார்ப்பது எப்படி?

image

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லுங்கள். பட்டா, சிட்டா நில அளவைப் பதிவேடு ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள். அதில் 1) மாவட்டம், 2) வட்டம், 3) கிராமம் 4) பட்டா, சிட்டாவை தேர்வு செய்து உங்கள் செல்போன் எண்ணை பதிவிடுங்கள். பின்னர் OTP-யை பதிவிட்டு உறுதி செய்தவுடன் உங்களது ஆவணம் PDF ஃபைலாக தோன்றும். அதனை பிரிண்ட் அவுட் எடுத்துக்கோங்க அவ்வளவுதான். (SHARE IT)

News April 26, 2025

ராகு கேது தோஷம் நீக்கும் ஸ்ரீ சிவலோகநாதர் ஆலயம்

image

விழுப்புரம் ஸ்ரீ சிவலோகநாதர் ஆலயம், நவகிரகங்களில் கேது பரிகார தலமாக விளங்குகிறது இன்று (ஏப்.26) மாலை 4:28 மணிக்கு கும்ப ராசிக்கு ராகுவும் சிம்ம ராசிக்கு கேதுவும் பெயர்ச்சி ஆவதை முன்னிட்டு, கேது பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இங்கு சென்று எமகண்ட நேரத்தில் கொள்ளு தானியத்தில் தீபம் ஏற்றி வழிபட்டால் சர்ப தோஷம் கேது தோஷம் நிவர்த்தி பெறலாம். SHARE பண்ணுங்க.

News April 25, 2025

விழுப்புரம் இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (25.04.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News April 25, 2025

விழுப்புரம்: துன்பங்கள் மறைய இங்கு போங்க

image

விழுப்புரம் அருகேயுள்ள கோலியனூர் வாலீஸ்வரர் கோயிலின் சிறப்பாக பாலாள ரிஷி கடின தவத்திற்கு திருஆசி தரும் விதமாக சிவபெருமான் இங்கு தோன்றியதாகக் கூறப்படுகிறது. இந்த கோயிலை தொடர்ந்து வழிபட்டு வந்தால் துன்பங்கள் மறைந்து மகிழ்ச்சி பிறக்கும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது. துன்பங்கள் மறைய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இதை பகிரவும்

News April 25, 2025

விழுப்புரம் பெண்களிடம் இருக்க வேண்டிய எண்கள்

image

பெண்களுக்கு எதிராக பல குற்றச்சம்பவங்கள் நடைபெறுகின்றன. எனவே, அனைத்து பெண்களும் மகளிர் காவல் துறை எண்களை தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையம் – 04146-240602, திண்டிவனம்- 04147 – 228503, கோட்டக்குப்பம்- 0413-2236150. மேலும், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் அவரச உதவிக்கு 1091. இதனை உங்களுக்கு தெரிந்த அனைத்து பெண்களுக்கும் பகிர்ந்து சேவ் பண்ண சொல்லுங்கள்.

News April 25, 2025

தம்பியை கட்டையால் அடித்து கொன்ற அக்கா

image

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே மதுபோதையில் தகராறு செய்த தம்பியை கட்டையால் அடித்து கொன்ற அக்கா கைது செய்யப்பட்டார். மணிகண்டன் என்பவர் மதுபோதையில் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அவரது அக்கா அம்சவேணி கட்டையால் அடித்ததில் படுகாயமடைந்த மணிகண்டன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 25, 2025

ஜம்மு காஷ்மீர்; உயிர் தப்பித்த 6 பேர்

image

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் கடந்த 22ஆம் தேதி நடத்திய தாக்குதலில், சுற்றுலா பயணிகள் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை சேர்ந்த சையத் காஜா பாஷா(55), ராஜா(44) உள்ளிட்ட 6 பேர் காஷ்மீரை சுற்றிப் பார்க்க சென்றிருந்தனர். அங்கு துப்பாக்கிச் சூடு நடைபெற்றதை அறிந்து, அங்கிருந்து தப்பி சென்றனர். இதையடுத்து தமிழக அரசின் உதவியுடன் நேற்று சென்னை வந்தடைந்தனர்.

News April 25, 2025

விழுப்புரம் முதல் ராமேஸ்வரத்திற்கு சிறப்பு ரயில்

image

விழுப்புரம் ரயில்வே நிர்வாகம் இன்று (ஏப்ரல் 24) வெளியிட்டுள்ள அறிக்கையில், விழுப்புரத்தில் இருந்து ராமேஸ்வரத்திற்கு வாரத்தில் 4 நாட்கள் (திங்கள், செவ்வாய் வெள்ளி சனி)ஆகியதேதிகளில் ( விருத்தாசலம் ஸ்ரீரங்கம் திருச்சிராப்பள்ளி திண்டுக்கல் மதுரை மானாமதுரை ராமநாதபுரம் )வழியாக சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக விழுப்புரம் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News April 24, 2025

விழுப்புரம் இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (24.04.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

error: Content is protected !!