India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1.பான்கார்டு: NSDL 2.வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3.ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ 4.பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink <

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும். SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) HDFC (7070022222) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். ஷேர் பண்ணுங்க.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகேயுள்ள பாஞ்சாலம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயக்குமார். இவர் கடந்த மே 12ஆம் தேதி, 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், நேற்று (அக்.10) குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு. கடலூர் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.

விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 60 கிராம பஞ்சாயத்து செயலாளர் வேலைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10th பாஸ் போதும். தமிழ் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். 18 நிறைந்த, விருப்பமுள்ளோர் இந்த <

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (அக்.11) “நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாம் கானை VET கல்லூரியில் நடைபெற உள்ளது. இந்த மருத்துவ முகாமில் பொதுமக்களுக்கு தேவையான ரத்த பரிசோதனை, கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன், எக்ஸ்ரே, ECG, எக்கோ, அல்ட்ரா சவுண்டு & கண், மகப்பேறு மருத்துவம் போன்றவற்றிற்கு சிகிச்சை அளிக்கப்படவுள்ளது. மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 688 ஊராட்சிகளிலும் இன்று கிராம சபை பொதுக்கூட்டம் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியாளர் ஷேக் அப்துல் ரகுமான் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து தெருக்களிலும் உள்ள ஜாதிப் பெயரை நீக்கி தீர்மானம் நிறைவேற்றி அலுவலகத்திற்கு அனுப்புமாறு அனைத்து ஊராட்சிகளுக்கும் ஆணையிட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், பாணாம்பட்டு ஏரியில் பசுமை விழுப்புரம் குழுவின் மூலமாக, இரண்டாம் ஆண்டு மாபெரும் மரம் நடும் விழா வரும் ஞாயிற்றுக்கிழமை அக்.12 அன்று காலை 8:30 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் 500 மரக்கன்றுகள் மற்றும் 1000 பனைமரம் விதையை நட உள்ளனர். இந்நிகழ்வில் சமூக சேவை அமைப்பினர், ஊர் பொதுமக்கள், தன்னார்வலர்கள் மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்திய மருத்துவ சங்கம் விழுப்புரம் கிளை மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி சார்பில் உலக மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி இன்று (அக்.10) விழுப்புரத்தில் நடைபெற்றது. ஆட்சியில் அலுவலக வளாகத்தில் இருந்து புறப்பட்ட இந்த பேரணியை ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரகுமான் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.சரவணன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

தேசிய அருங்காட்சியகத்தில் காலியாக உள்ள உதவியாளர், டெக்னீஷியன், அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 10th, ஐடிஐ, Visual Art / Fine Arts / Commercial Arts) டிகிரி முடித்த 19 முதல் 35 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பணிக்கு ஏற்ப மாதம் ரூ. 19,900 – ரூ. 92,000 வரை ஊதியம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <

விழுப்புரத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், பிரதான் மந்திரி மானியத்துடன் வீடுகளுக்கு சோலார் மின் இணைப்பு வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மின்சார செலவை குறைக்கவும், மின் சிக்கனத்தை ஊக்குவிக்கவும் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் <
Sorry, no posts matched your criteria.