India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரம் மக்களே நீங்கள் வாங்கிய நிலங்கள் (அ) உங்க தாத்தா, அப்பா வாங்கிய பழைய நிலங்களின் பத்திரம் இருக்கு, ஆனா நிலம் எங்க இருக்கன்னு தெரியலையா? சர்வேயர்க்கு காசு கொடுக்கனுமான்னு யோசீக்கிறீங்களா?? உங்க நிலங்களை கண்டுபிடிக்க EASYயான வழி. இங்க<
விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள இரண்டாம் நிலை காவலர் சிறை காவலர் தீயணைப்பாளர் ஆகிய பதவிகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நாளை ஆகஸ்ட் 28 காலை 10 மணி முதல் பயிற்சி வகுப்பு நடக்க இருக்கிறது. எனவே விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் குழந்தைகளுக்கான அவசர உதவி மையம் அமைக்கப்பட இருக்கிறது. இந்நிலையில் பல்வேறு பதவிகளுக்கு 42வயதிற்கு உட்பட்ட +2 தேர்ச்சி முதல் முதுகலை பட்டம் பெற்றவர்கள் வரை விழுப்புரம் மாவட்ட இணையதளத்தில் https://villupuram.nic.in பதிவிறக்கம் செய்து 15 தினங்களுக்குள் விண்ணப்பிக்கலாம் என விழுப்புரம் கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் ஆகஸ்ட் மாத விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் ஆகஸ்ட்-29ஆம் தேதி காலை 11 மணியளவில் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற இருக்கிறது. இக்கூட்டத்தில் விவசாயிகள் சங்க பிரதிநிதிகளும், விவசாயிகளும் விவசாயம் சம்பந்தப்பட்ட கோரிக்கைகளை மனுவாக கொடுத்து பயன்பெறுமாறு விழுப்புரம் கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான் அறிவுறுத்தியுள்ளார்.
தி நியூ இந்திய இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு 550 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும், வயது 21க்கு மேல் இருக்க வேண்டும். இந்த பணிக்கு மாதம் 96,000க்கு மேல் சம்பளம் வழங்கப்படுகிறது. மேலும் எழுத்து & நேர்முக தேர்வும் நடத்தப்பட இருக்கிறது, விருப்பமுள்ள்ளவர்கள் ஆகஸ்ட்-30குள் இந்த<
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் சுற்றியுள்ள சில லாட்ஜ்களில் விபசாரம் நடப்பதாக காவல்துறைக்கு தகவல் வந்தது. புகாரின் பேரில் விழுப்புரம் போலீசார் நேற்று ஆக.26 நள்ளிரவு அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பிரபல லாட்ஜில் சோதனையிட்டபோது 2அழகிகளை வைத்து மேலாளர் தட்சணாமூர்த்தி (45) விபசாரம் நடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து மேலாளர் மற்றும் அவருடன் இருந்து இருவர் என 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி இன்று பக்திபூர்வமாக கொண்டாடப்படுகின்றது. புதன்கிழமையில் வரும் சதுர்த்தி சிறப்புமிக்கதாக கருதப்படுகிறது. ▶வீட்டில் விநாயகர் சிலை வைக்கும் இடத்தில் பன்னீர், தீர்த்தால் சுத்தம் செய்ய வேண்டும். ▶மலர்களுடன் கோலமிட்டு வைக்க வேண்டும். ▶அருகம்புல், எருக்கம்பூ மாலையால் அலங்கரிக்க வேண்டும். வழிபாட்டிற்கு சிறந்த நேரம் காலை 7:45–8:45,10:40–1:10, மாலை 5:10–7:45ஷேர் பண்ணுங்க
உங்கள் பகுதியில் வைத்திருக்கும் வண்ண வண்ண விநாயகர் சிலையை ஊர் அறிய செய்ய அருமையான வாய்ப்பு. அலங்கரித்து வைப்பட்டுள்ள விநாயகர் சிலையை தெளிவாக புகைப்படம் எடுத்து நம்ம way2newsல் பதிவிடுங்கள். எப்படி பதிவிடுவது என்பதை இங்கே<
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (26.08.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்தை காணலாம்.
விழுப்புரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணை குழு சார்பில் தேசிய அளவில் லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் நடக்க இருக்கிறது. செப்டம்பர் 13ஆம் தேதி விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், செஞ்சி, திண்டிவனம், திருவெண்ணைநல்லூர், விக்கிரவாண்டி மற்றும் திருக்கோவிலூர் நீதிமன்ற வளாகங்களில் நடைபெற உள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என மாவட்ட முதன்மை நீதிபதி மணிமொழி கேட்டுகொண்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.