Villupuram

News April 17, 2025

திரெளபதி அம்மன் கோவிலுக்குள் சென்ற பட்டியலின மக்கள்

image

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி விழுப்புரம் அடுத்த மேல்பாதியில் உள்ள திரெளபதி அம்மன் கோவில் திறக்கப்பட்டது. இன்று காலை கோயில் நடை திறக்கப்பட்ட நிலையில், பட்டியலின மக்கள் கோயிலுக்கு உள்ளே சென்றனர். முதல் முறையாக உள்ளே சென்று திரெளபதி அம்மனை தரிசித்ததாக மக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். பட்டியலின மக்கள் உள்ளே சென்று வழிபடுவதை தடுப்பதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை என்று ஐகோர்ட் தெரிவித்திருந்தது.

News April 16, 2025

அமைதி தரும் மரக்காணம் கடற்கரை

image

விடுமுறை தினத்தில் வெளியில் சென்று வர அருகிலேயே சிறந்த சுற்றுலா தலமாக மரக்காணம் கடற்கரை உள்ளது. கீழக்கு கடைகரையோரம் அமைந்துள்ள இந்த பகுதியின் அமைதியான சூழல் மனதுக்கு அமைதி தரும். அமைதியை விரும்புவோர் நிச்சயம் சென்று வரலாம். இங்குள்ள உப்புத் துறை இந்த கடற்கரையின் மிகவும் பிரபலமான ஒன்றாகும். இப்பவே உங்க நண்பருக்கு ஷேர் பண்ணி ட்ரிப்க்கு பிளான் பண்ணுங்க

News April 16, 2025

மேல்மலையனுார் கோயிலில் காணிக்கை வசூல்

image

மேல்மலையனுார் அங்காளம்மன் கோயில்  உண்டியல் எண்ணும் பணி நேற்று ஏப்.15 காலை துவங்கியது. இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சக்திவேல், துணை ஆணையர் சிவலிங்கம், அறங்காவலர் குழு தலைவர் மதியழகன் முன்னிலையில் கோவில் ஊழியர்கள், தன்னார்வலர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் ரூ.73 லட்சத்து 61 ஆயிரத்து 483 ரொக்கம் ,190 கிராம் தங்கம், 902 கிராம் வெள்ளியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

News April 16, 2025

விழுப்புரத்தில் மதியம் 2.30 மணி வரை மழை தொடரும்

image

விழுப்புரம் மாவட்டம் மற்றும் விழுப்புரம் சுற்றியுள்ள ஒன்றியங்கள் கானை, விக்கிரவாண்டி, மைலம், வானூர், திண்டிவனம், செஞ்சி, மேல்மலையனூர், கண்டமங்கலம், மரக்காணம் ஆகிய ஒன்றியங்களில் இன்று மதியம் 2.30.மணி வரை மழை தொடர வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் பல்வேறு இடங்களில் மழை பெய்து கொண்டு வரும் நிலையில் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்

News April 16, 2025

NLC நிறுவனத்தில் வேலை

image

NLC நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Overman & Mining Sirdar பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 171 காலி பணியிடங்கள் உள்ளன. டிப்ளமோ, இன்ஜினியரிங் படித்தவர்களிடம் இருந்து விண்ணப்பிக்கலாம். Junior Overman பணிக்கு ஆண்டுக்கு ரூ. 8.53 லட்சமும், Mining Sirdar பணிக்கு ஆண்டுக்கு ரூ. 7.16 லட்சம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர். மேலும் அறிய <>இங்கு க்ளிக்<<>> செய்யவும். SHARE பண்ணுங்க

News April 16, 2025

விழுப்புரத்தில் நாளை தனியார் வேலை வாய்ப்பு முகாம்

image

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மாதந்தோறும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. ஏப்ரல் மாதத்துக்கான முகாம் நாளை 17-ஆம் தேதி (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது. முகாமில் 20-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று, 500-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரகுமான் தெரிவித்துள்ளார். SHARE

News April 16, 2025

கோட்டகுப்பத்தில் இலங்கை அகதி விபத்தில் மரணம்

image

மரக்காணம் வட்டம், கீழ்புத்துப்பட்டு இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த முத்துக்குமார். கோட்டக்குப்பத்தை அடுத்த அனிச்சம்குப்பம் பகுதியில் சாலையில் நடந்து சென்றார். அப்போது, அங்கு புதுச்சேரி-சென்னை கிழக்கு கடற்கரை சாலையைக் கடக்க சென்னையிலிருந்து புதுச்சேரி நோக்கிச் சென்ற தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்து முத்துக்குமார் மீது மோதியதில் உயிரிழந்தார். கோட்டகுப்பம் போலீஸ் வழக்கு பதிவு.

News April 15, 2025

செல்வம் அருளும் கோடி கொடுத்த நாதர்!

image

ஒரு கோடி சித்தர்கள் வழிபட்ட அதிசய சிவாலயம் ஒன்று விழுப்புரம் மாவட்டம் ஒரு கோடி என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது.ஒரு கோடி சித்தர்கள் சிவபெருமானை வழிபட்ட பகுதி என்பதால், இந்த ஊருக்கு ‘ஒருகோடி’ என பெயர் வந்தது என்கிறார்கள். கோடி கொடுத்த நாதரை வழிபட்டால், கோடி கோடியாய் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. தொழில், வியாபாரத்தில் சிரமப்படும் உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.

News April 15, 2025

மெட்ராஸ் ஐகோர்ட்டில் வேலை; டிகிரி இருந்தால் போதும்

image

சென்னை உயர் நீதிமன்றத்தில் தனி உதவியாளர், எழுத்தர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 47 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு இளநிலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மாதம் ரூ.20,600 முதல் ரூ. 2,05,700 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து வரும் மே.5ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க.

News April 15, 2025

பள்ளி மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய எண்

image

பள்ளி மாணவ, மாணவிகள் தங்கள் மனம், உடல், பாலியல் சார்ந்த துன்புறுத்தல்களுக்கோ அல்லது அச்சுறுத்தல்களுக்கோ உள்ளாக்கப்பட்டு வந்தால் இலவச உதவி மையத்தை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பற்ற சூழலில் இருக்கும் மாணவர்களும், தேர்வு மற்றும் உயர்கல்வி வழிகாட்டுதல் உள்ளிட்ட தகவல்களை பெற 14417 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!