India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரம் மாவட்ட அரசு பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 288 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்படவுள்ளது. 18 வயது முதல் 40 வரை உள்ள பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி/தோல்வி அடைந்திருக்கலாம். விருப்பமுள்ளவர்கள் <
விழுப்புரம் மாவட்ட அரசு பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 288 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்படவுள்ளது. 18 வயது முதல் 40 வரை உள்ள பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி/தோல்வி அடைந்திருக்கலாம். விருப்பமுள்ளவர்கள் <
விழுப்புரம் ரயில் நிலையம், நேற்று நிஜாமுதின் – கன்னியாகுமரி நோக்கி செல்லும் திருக்குறள் அதிவிரைவு ரயிலில் ரயில்வே சப் இன்ஸ்பெக்டர் முத்துசெல்வம் தலைமையிலான ரயில்வே மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் சோதனை நடத்தினர். அப்போது கழிப்பறை அருகே கேட்பாரற்ற நிலையில், வெள்ளை நிற சாக்கு பை கிடந்தது. சோதனை செய்ததில் 30 கிலோ குட்கா இருந்தது தெரியவந்தது. பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (27.04.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு நீட் நுழைவு தேர்வு மே 4ஆம் தேதி நடைபெறுகிறது. இதை ஒட்டி திண்டிவனம் Dr.அப்துல்கலாம் நீட் பயிற்சி மையம் சார்பில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 30.04.2025 அன்று காலை 10மணி முதல் 1மணி வரை இலவச நீட் மாதிரித் தேர்வு நடத்தப்படுகிறது. நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம் என பயிற்சி மைய நிர்வாகி சுப்பிரமணியன் தெரிவித்தார். தொடர்புக்கு: 9942132049/6380044810
பாலியல் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால், ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்கள், ரயில்களில் அல்லது ரயில் நிலையங்களில் பாலியல் சீண்டல்களை எதிர்கொண்டால் 9962500500 என்ற எண்ணுக்கு உடனே அழைக்கவும். ரயில்வே காவல் உதவி எண் 1512 என்ற எண்ணுக்கும் தொடர்பு கொள்ளலாம். தனியாக செல்லும் பெண்கள் இந்த நம்பர்களை உங்கள் மொபைலில் கட்டாயம் வைத்து கொள்ளுங்கள். உங்கள் தோழிகளுக்கு ஷேர் பண்ணுங்க
விழுப்புரம் மாவட்டம் திரு.வி.க. சாலையில் அமைந்துள்ள பெரியநாயகி சமேத கயிலாசநாதர் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது. திருமண வரம் வேண்டுவோர், இங்குள்ள துர்க்கைக்கு 11 வாரம் நெய் விளக்கேற்றி, எலுமிச்சை மாலை அணிவித்தால் திருமணத்தடை நீங்கும். அதேபோல, தட்சிணாமூர்த்திக்கு நான்கு வாரம் நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் விரும்பிய வரம் கிடைப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர். ஷேர் பண்ணுங்க
விழுப்புரம் முட்டத்தூரில் கடந்த 22-ம் தேதி குழந்தை வரம் வேண்டி சாமிக்கு பரிகாரம் செய்வதாக கூறி 5 பவுன் பறித்து சென்றுள்ளனர். விசாரணை நடத்திய போலீசார் வேலூரை சேர்ந்த வல்லரசு, வள்ளியம்மாளை கைது செய்தனர். விசாரணையில் வள்ளியம்மாள் முதல் நாள் தேன் விற்பது போல் வந்து வீட்டை நோட்டம் பார்த்துள்ளார். வீட்டில் குழந்தை இல்லாதவர்கள் பற்றி தகவலை மகன் வல்லரசுவிடம் கூறியது விசாரணையில் தெரியவந்தது.
விழுப்புரம் நகரத்தில் அமைந்துள்ள VRP மேல்நிலைப் பள்ளியில் வருகின்ற மே.10ம் தேதி மாபெரும் இலவச வேலைவாய்ப்பு முகாம் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த முகாமில் சிறப்பு விருந்தினராக விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன், விழுப்புரம் நகரமன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு கலந்துகொள்ள உள்ளனர். இந்த முகாமை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் திருவக்கரையில் அருள்மிகு மகாகாளீஸ்வரர் கோயிலில் அமைந்துள்ளளது. இந்த கோயிலில் அம்பிகை மதுர சுந்தரநாயகியாக இருக்கிறார்.
முன்னொரு காலத்தில் ஓர் அவமானத்தால் சிவன் 3 லிங்கங்களாக உடைந்த வரலாறும் இங்குள்ளது. குரல்வளம் பெருகவும், கலைத்துறையில் சாதிக்கவும் இந்த கோயிலை தரிசித்தால் பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதை கலைத்துறையை தேர்தெடுத்த நண்பர்களுக்கு பகிரவும்.
Sorry, no posts matched your criteria.