India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரகுமான் வெளியிட்டுள்ள செய்தியில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அத்தியாவசிய பொருட்கள் பெறும் அந்தியோதயா அன்னயோஜனா மற்றும் முன்னுரிமை ரேஷன் கார்டுதாரர்கள், தங்கள் கார்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் விரல் ரேகையை வரும் 25ம் தேதிக்குள், ரேஷன் கடையில், பி.ஓ.எஸ்., இயந்திரத்தின் மூலம் கட்டாயம் பதிவு செய்திட வேண்டும் என கூறியுள்ளார்.
கோலியனூர் மழவராயனூா், சோ்ந்த தவமணியின் மகன் கலாநிதி (29).இவா், நேற்று கோலியனூர் ரயில்வே கேட் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தாா்.எதிா் திசையில் வந்த லாரி, பைக் மீது மோதியது.மருத்துவமனையில் அனுப்பிவைக்ப்பட்ட அவர் மருத்துவர் பரிசோதனை செய்தலில் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா்.இதுகுறித்த புகாரின் பேரில்,விழுப்புரம் ரயில்வே போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (08.03.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
தமிழக வெற்றிக் கழகத்திற்கு யார் யாரோ மாற்றுக் கட்சியில் இருந்து வருகிறார்கள். அவருக்கு தான் பதவிகள் கொடுப்பார்கள் என்று நினைக்க வேண்டாம். ஆரம்பத்திலிருந்து யார் யார் தலைவரின் வளர்ச்சிக்கு பாடுபட்டு உழைத்தார்களோ அவர்களுக்கு தான் தலைவர் பதவி அளிப்பார். இதில் எந்த அச்சமும் தேவையில்லை என விழுப்புரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக மகளிர் தின விழாவில் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உரையாற்றினார்.
விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில், குடியிருப்பு வீடு கட்டும் திட்டங்களின்கீழ், ஊராட்சிகளில் கட்டப்பட்டு வரும் குடியிருப்பு வீடுகளின் முன்னேற்றப் பணிகள் குறித்து துறைசார்ந்த அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்,இ.ஆ.ப.,அவர்கள் தலைமையில் இன்று (08.03.2025) நடைபெற்றது.
வனம் மற்றும் கதர் துறை அமைச்சர் க.பொன்முடி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் வட்டம், வளையாம்பட்டு கிராமத்தில் வருவாய்த்துறை சார்பில் பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை இன்று (08.03.2025) வழங்கி விழாப்பேருரையாற்றினார். உடன் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் அ.சிவா இருந்தார்.
விழுப்புரத்தில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் உரையாற்றினார். அதில் ஒரு நாட்டின் மகளிர் முன்னேற்ற வளர்ச்சி வழங்கப்படும் பங்களிப்பு என்பது ஒரு சமூக வளர்ச்சிக்கான முதலீடு, சமூக வளர்ச்சிக்கான பாதை, அது ஒட்டுமொத்த குடும்பத்தையும் வழிநடத்திச் செல்லும். அனைத்து மகளிர்களுக்கும் நாம் பெருமை சேர்ப்போம் வளமுடன் வாழ்த்துவோம் என உரையாற்றினார்.
விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அப்ரண்டீஸ் தேர்வு நடைபெறுகிறது. இது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அப்துல் ரகுமான் குறிப்பிட்டுள்ள செய்தி குறிப்பில், தேசிய தொழில் பழகுநர் பயிற்சி திட்டத்தின் கீழ் விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் பத்தாம் தேதி தொழிற்பழகுனர் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
எதனால் இந்தப் பாதிப்பு ஏற்படுகிறது என்பதற்கு உறுதியான காரணம் இல்லை. 30 வயதைக் கடந்த பெண்களுக்கு எவ்வாறு மாா்கப் புற்றுநோய் பரிசோதனை அவசியமோ, அதுபோலவே 20 வயதுக்குப் பிறகு ஆண்டுக்கு ஒருமுறையாவது பெண்கள் இதய நலப் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். மகளிா் தினத்தில் இதய நலம் காப்பதற்கான உறுதிமொழியை அனைத்துப் பெண்களும் மேற்கொண்டால் ஆரோக்கியமான சமூகம் அமையப்பெறும். ஷேர் செய்யுங்கள்
மினோகா, இனோகா என்ற 2 வேறு வகையான மாரடைப்பு பாதிப்பு இளம்பெண்களிடம் தற்போது அதிகரித்து வருகிறது. சா்க்கரை நோய், தவறான உணவுப் பழக்கம், உயா் ரத்த அழுத்தம், கொழுப்புச் சத்து, மரபணு பாதிப்பு, மன அழுத்தம் ஆகியவைதான் முக்கிய காரணம். இதயத்துக்குச் செல்லும் குறுநாளங்களில் அடைப்பு ஏதும் இன்றி ரத்த ஓட்டம் தடைபடும். மிகவும் சிக்கலான இந்த நோய்களுக்கு 18-45 வயது பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனா்.
Sorry, no posts matched your criteria.