Villupuram

News August 31, 2025

கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையின் அளவு

image

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக வளத்தியில் 12 மி.மீ, திருவெண்ணெய்நல்லூர் 8 மி.மீ, வளவனூரில் 2.8 மி.மீ, அரசூரில் 2.5 மி.மீ, அவலூர்பேட்டையில் 2 மி.மீ, விழுப்புரத்தில் 2 மி.மீ, செஞ்சியில் 1.5 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இந்த மழை விவசாயிகளுக்கு ஓரளவு பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News August 31, 2025

விழுப்புரத்தில் அருங்காட்சியகம் அமைக்க கோரிக்கை

image

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 30 ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான உதிரிச் சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஜேஷ்டா தேவி, கொற்றவை , சப்தமாதா், விஷ்ணு, முருகன், சூரியன், தீா்த்தங்கரா் உள்ளிட்ட கடவுளா்களின் சிலைகள் மட்டுமல்லாது, வீரா்களின் நினைவுச் சிற்பங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில் இவற்றை உரிய முறையில் பாதுகாக்க விழுப்புரம் அருங்காட்சியகம் அமைக்க வரலாற்று ஆய்வாளர்கள் கோரிக்கை

News August 31, 2025

விழுப்புரம்: கேஸ் சிலிண்டர் இருக்கா? இது கட்டாயம்

image

விழுப்புரம் மக்களே எதிர்பாராத நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் எல்பிஜி (LPG) கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைக்கவும். இது இந்தியன் ஆயில், ஹெச்பிசி போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். வேறு எதேனும் உதவி தேவைப்பட்டால் 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். (கேஸ் சிலிண்டர் வைத்துள்ளோருக்கு SHARE பண்ணுங்க)

News August 31, 2025

விக்கிரவாண்டி: நாளை முதல் சுங்ககட்டணம் உயர்வு

image

சென்னை- திருச்சி நெடுஞ்சாலையில் விழுப்புரம் அருகே அமைந்துள்ள விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் செப்.1 (திங்கள்கிழமை) முதல் சுங்க கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. அதன்படி நாள் ஒன்றுக்கு ரூ.5 முதல் ரூ.20 வரையும், மாத கட்டணம் ரூ.70 முதல் ரூ.395 வரையும் உயருகிறது. கார்/வேனுக்கு ஒருமுறை சென்று திரும்பி வருவதற்கு ரூ.155 பதில் ரூ.160 வசூலிக்கப்படும்.

News August 31, 2025

ஓணம் முன்னிட்டு விழுப்புரத்தில் இருந்து சிறப்பு ரயில் சேவை

image

விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து சூரத் நகரத்திற்கு நாளை(செப்.01) ஓணம் முன்னிட்டு சிறப்பு ரயில் சேவை(ஒருவழி தடம்) தொடங்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நாளை காலை 10.30 மணி அளவில் தொடங்கும் இந்த சிறப்பு ரயில் செங்கல்பட்டு, சென்னை எக்மோர், காட்பாடி, சேலம், ஈரோடு, திருச்சூர் வழியாக சூரத் நகரை சென்றடைகிறது. இந்த ரயில் சேவையை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 31, 2025

விழுப்புரம்: ரூ.1,500 வேண்டுமா? இதை பண்ணுங்க!

image

விழுப்புரம்: மண்புழு உரம் உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக, விவசாயிகளுக்கு 50% மானியத்தில் உரப்படுக்கைகள் வழங்கப்படுகின்றன. விவசாயிகள் தங்கள் சொந்த செலவில் மண்புழு உரம் தயாரிக்கத் தேவையான பொருட்களை வாங்கி, அதற்கான பட்டியலை சமர்ப்பித்தால், ரூ.1,500 மானியமாகப் பெற்றுக்கொள்ளலாம். கூடுதல் தகவல்களுக்கு, உங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலரையோ அல்லது உழவன் செயலியையோ அணுகலாம். ஷேர் பண்ணுங்க.

News August 31, 2025

விழுப்புரத்தில் இன்று டிஎன்பிஎஸ்சி தேர்வு: 3,000 பேர் எழுதுகின்றனர்.

image

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 3,000 பேர் இன்று(ஆக.31) டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத உள்ளனர். இவர்களுக்காக விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி, அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளி, வி.ஆர்.பி மேல்நிலைப்பள்ளி மற்றும் சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் தேர்வு மையம் அமைக்கபட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் தெரிவித்துள்ளார். தேர்வெழுத உள்ள நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க

News August 30, 2025

விழுப்புரம் : ரூ.1,20,000 சம்பளத்தில் வேலை… சூப்பர் வாய்ப்பு!

image

மத்திய அரசின் பவர்கிரிட் நிறுவனத்தில் பீல்டு இன்ஜினியர், பீல்டு சூப்பர்வைசர் பணிக்கு 1,543 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு சிவில், எலெக்ட்ரிக்கல், ECE, IT அல்லது அதற்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் டிகிரி அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். சம்பளமாக ரூ.23,000-ரூ.1,20,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் செப்.17-க்குள் <>இந்த<<>> லிங்க் மூலம் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News August 30, 2025

பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர் பணிநீக்கம்

image

விழுப்புரம் நகர பகுதியில் இயங்கி வரும் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு மாணவிகள் மூன்று பேரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆங்கில பாட ஆசிரியர் பால் வின்சென்ட் என்பவரை நேற்று போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் ஆசிரியர் பால் வின்சென்ட் இன்று (சனிக்கிழமை) பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

News August 30, 2025

விழுப்புரம்-நாகப்பட்டினம் இடையே சிறப்பு ரயில்.

image

வேளாங்கண்ணி திருவிழாவையொட்டி, விழுப்புரம் – நாகை இடையே செப்.8 மெமு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. விழுப்புரத்தில் இருந்து காலை 9.10 மணிக்கு புறப்படும் ரயில், மதியம் 1.05 மணிக்கு நாகப்பட்டினம் சென்றடையும். பின்னர், அங்கிருந்து மதியம் 1.20 மணிக்கு புறப்பட்டு மாலை 5.30 மணிக்கு விழுப்புரத்தை வந்தடையும். இந்த ரயில்கள் கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும்.

error: Content is protected !!