Villupuram

News October 17, 2025

விழுப்புரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் (அக்-16) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News October 16, 2025

விழுப்புரத்தில் வேலைவாய்ப்பு முகாம்.. மிஸ் பண்ணிடாதீங்க

image

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. அதன்படி வரும் அக்.17ஆம் தேதி காலை 10.00 மணி முதல் 2:00 மணி வரை நடைபெற உள்ளது. இம்முகாமில் 10th,12th, டிப்ளமோ, ஐடிஐ முடித்தோர், மற்றும் <>பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்<<>>. மேலும் விபரங்களுக்கு 9080515682 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும். நண்பர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க

News October 16, 2025

வேலூர்: குட்கா கடத்தியவர் குண்டர் சட்டத்தில் அடைப்பு

image

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் இருந்து, புதுச்சேரிக்கு காரில் குட்கா மற்றும் புகையிலை பொருட்களை கடத்தி வந்த புதுச்சேரி மாநிலம் பாகூர் பகுதியைச் சேர்ந்த கதிரவன் என்பவரை விழுப்புரம் அருகேயுள்ள அரசூர் பகுதியில் திருவெண்ணை நல்லூர் போலீசார் கைது செய்து குண்டர் தடுப்பு சட்டத்தில் இன்று சிறையில் அடைத்தனர். இதையடுத்து அவரிடம் இருந்து 120 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

News October 16, 2025

விழுப்புரம் எம்.பி வைத்த கோரிக்கை!

image

விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முண்டியம்பாக்கத்தில் அமைந்துள்ளது. இங்கு கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பொதுமக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்த மருத்துவமனையை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக தரம் உயர்த்த குரல் கொடுப்பதாக எம்.பி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

News October 16, 2025

விழுப்புரம்: வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை!

image

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்துள்ள அஞ்சாஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். வீட்டில் தனது தந்தை மற்றும் தாய் ஆகிய இருவருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சென்னையில் உள்ள இளைய மகன் வீட்டிற்கு இவர்கள் கடந்த 3ம் தேதி சென்றுள்ளனர். திரும்பி வந்து பார்த்தபோது, மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து நகை & பணத்தை திருடிச்சென்றுள்ளனர். இதுகுறித்து செஞ்சி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News October 16, 2025

விழுப்புரம்: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

image

பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். ஷேர் பண்ணுங்க.

News October 16, 2025

விழுப்புரம் கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

image

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டத்தில் பொன்பத்தி ஏரி இருக்கிறது, இங்கு மின்னணு ஒப்பந்தபுள்ளி மூலம் மீன் பாசி குத்தகை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் தெரிவித்துள்ளார். www.tntenders.gov.in என்ற இணையதளத்தில் மின்னணு ஒப்பந்த புள்ளி மூலம் 3 ஆண்டுகளுக்கு மீன் பாசி குத்தகை விடப்பட உள்ளன. மீன்வளம் மற்றும் மீன் வளர்ப்பு உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ள கேட்டுக் கொண்டுள்ளனர்.

News October 16, 2025

விழுப்புரத்தில் 8th, 10th, +2, டிகிரி படித்தவரா நீங்கள்?

image

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் அக்.17ல் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாம் காலை 10 மணிக்கு நடைபெறும். இம்முகாமில் 25-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டு பணிவாய்ப்பு வழங்க உள்ளது. இதில் 8th, 10th, 12th, டிப்ளோமா & ITI படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள் இந்த <>லிங்க்<<>> மூலம் அக்.16-க்குள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

News October 16, 2025

விழுப்புரம்: ஒரு புகாருக்கு ரூ.1,000-மிஸ் பண்ணாதீங்க!

image

நெடுஞ்சாலையில் நாம் உபயோகிக்கும் கழிவறைகள் பெரும்பாலும் முகம் சுளிக்க வைக்கும் வகையில்தான் உள்ளது. இதைத் தடுக்க மத்திய அரசு புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. நெடுஞ்சாலையில் உள்ள கழிவறைகள் சுத்தமாக இல்லையெனில், அதனை புகைப்படம் எடுத்து, <>’ராஜ்மார்க் யாத்ரா<<>>’ ஆப்பில் பதிவேற்றம் செய்தால், FAST TAG கணக்கிற்கு ரூ.1,000 வெகுமதியாக கிடைக்கும். உடனே இதை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News October 16, 2025

விழுப்புரம்: மீன் பாசி குத்தகை பற்றிய அறிவிப்பு

image

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டத்தில் பொன்பத்தி ஏரி இருக்கிறது, இங்குள்ள மின்னணு ஒப்பந்தபுள்ளி மூலம் மீன் பாசி குத்தகை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் தெரிவித்துள்ளார். www.tntenders.gov.in என்ற இணையதளத்தில் மின்னணு ஒப்பந்த புள்ளி மூலம் 3 ஆண்டுகளுக்கு மீன் பாசி குத்தகை விடப்பட உள்ளன.மீன்வளம் மற்றும் மீன் வளர்ப்பு உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ள கேட்டுக் கொண்டுள்ளனர்.

error: Content is protected !!