India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் இன்று முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, கார் மற்றும் ஜீப் போன்ற வாகனங்களுக்கு ஒரு முறை பயணிப்பதற்கான கட்டணம் மாற்றம் இல்லை. இரண்டு முறை பயணிப்பதற்கான கட்டணம் ரூ.5 அதிகரித்துள்ளது. அதேபோல, மாதாந்திர கட்டணம் ரூ.70 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு வாகன ஓட்டிகள் மத்தியில் ஒரு புதிய சுமையாக மாறியுள்ளது. ஷேர் பண்ணுங்க.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் கொள்குறி வகை தேர்வு நேற்று(ஆக.31) நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டத்தில் இந்த தேர்வு எழுதுவதற்கு 3 ஆயிரம் பேருக்கு ஹால்டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன. காலை 9:30 மணி முதல் பகல் 12:30 வரை நடந்த தேர்வை 1,973 பேர் எழுதினர். 1,027 பேர் ஆப்சென்ட் ஆகினர். தேர்வு மையங்களில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஒவ்வொரு திங்கட்கிழமையும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. இன்று (செப்.1) பொதுமக்கள் தங்கள் குறைகளை மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக மனுக்களாகச் சமர்ப்பித்து நிவர்த்தி பெறலாம். மேலும், இந்தக் கூட்டத்தில் அரசுத் திட்டங்கள் மற்றும் சேவைகள் குறித்த தகவல்களையும் பொதுமக்கள் அறிந்துகொள்ள முடியும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
விழுப்புரம் மாவட்டம் மாவட்டத்தில் இன்று(ஆக.31) இரவு 10:00 மணி முதல் நாளை காலை 6:00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவல் அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம் அல்லது 100 அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை சேர்ந்த சிறுமி மித்ரா, 54 சர்வதேச நிறுவனங்களின் லோகோக்களை பார்த்து அவற்றின் பெயர்களை 27 நிமிடங்களில் கூறி, உலக சாதனைப் புத்தகமான “வோல்ட் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்”இல் இடம்பிடித்துள்ளார். மிகக் குறைந்த வயதிலேயே பெற்றுள்ள இச்சாதனை, திண்டிவனம் மற்றும் தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளது. குடும்பத்தினர், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
விழுப்புரம் மக்களே, இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் காலியாக உள்ள 1446 Airport Ground Staff, Loaders, பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 10ஆம் வகுப்பு, மற்றும் 12ம் வகுப்பு போதுமானது. சம்பளமாக ரூ.25,000 முதல் ரூ.35,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ, சரியாக ஊதியம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நல வாரியத்தில் புகாரளிக்கலாம். தொழிலாளர் துறை ஆணையர்-044-24321302, தொழிலாளர் மேம்பாட்டு துறை-044-25665566, கட்டுமான தொழிலாளர் நலவாரியம்-044-28264950, உடலுழைப்பு தொழிலாளர் நலவாரியம்-044-28110147, வீட்டு பணியாளர் நலவாரியம்-044-28110147. ஆட்சியர் அலுவகத்தில் உள்ள தொழிலாளர் நலவாரிய அலுவலகத்திலும் புகார் அளிக்கலாம். SHARE பண்ணுங்க
விழுப்புரம் உட்பட ஆறு மாவட்டங்களில், சுகாதாரத்துறை இணை இயக்குநர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர். உதவியாளர்கள், நிர்வாக அலுவலர்கள், அலுவலகக் கண்காணிப்பாளர்கள், தட்டச்சர்கள் மற்றும் ஓட்டுநர்கள் போன்ற பணியிடங்கள் காலியாக இருப்பதால், சுகாதார மற்றும் ஊரகப் பணிகள் ஆய்வு முடங்கிப் போயுள்ளன. எனவே, இப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என மருத்துவப் பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில், வார இறுதிப் பயணத்திற்கு ஆரோவில் ஒரு சிறந்த தேர்வாகும். சர்வதேச நகரமான இங்கு, அமைதி (ம) ஆன்மிகச் சூழலை அனுபவிக்கலாம். இங்குள்ள பிரதான இடமான மாத்ரிமந்திர்-ஐ வெளியில் இருந்து பார்வையிடலாம், உள்ளே செல்ல முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும். இது தவிர, இங்குள்ள பல்வேறு சர்வதேச அரங்குகள் மற்றும் சூழல் சார்ந்த அமைப்புகளைக் கண்டு ரசிக்கலாம். நண்பர்களுக்கு SHARE செய்து போய்ட்டு வாங்க!
விக்கிரவாண்டி சுங்கச்சாவடி கட்டணம் செப்டம்பர் 1-ம் தேதி நள்ளிரவு முதல் உயர்த்தப்பட உள்ளது. சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த சுங்கச்சாவடி கட்டண உயர்வுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என லாரி உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் வணிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
Sorry, no posts matched your criteria.