India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆனந்த் நேற்று முன் தினம் திண்டிவனத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். திண்டிவனம் சாலையில் உள்ள பஸ் ஸ்டாப் அருகே வந்தபோது, முன்னாள் கரும்பு லோடு ஏற்றிச் சென்ற லாரி பின்பகுதியில் மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் காயமடைந்த ஆனந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
கயத்துார் கிராமத்தை சேர்ந்தவர் கருணாகரன், 43 இவர் விக்கிரவாண்டில் கொள்முதல் செய்யும் பணியில் உள்ளார். கருணாகரன் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த பைக் ஒன்று ஆட்டோ மீது மோதியது. இதில் கருணாகரன் மற்றும் பைக் ஓட்டியவர் இருவரும் காயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை பெற்று வந்த நிலையில் கருணாகரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விழுப்புரம் மாவட்டம் தும்பூரில் அமைந்துள்ளது நாக கன்னியம்மன் திருக்கோயில்.இங்கு 10 கி.மீ நீளம் பாம்பு சிலை உள்ளது. இக்கோயிலில் சித்திரை மாத வெள்ளிக்கிழமை காணும் பொங்கல் ஆகிய நாட்கள் விசேஷ நாட்களாகும்.இங்கு வந்து ராகு, கேது, தோஷம் உள்ளவர்கள் வேண்டினால் தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். பிரார்த்தனை நிறைவேறியவர்கள் கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்து நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம். சேர் செய்யுங்கள்.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (10.03.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
செஞ்சி நகரத்தில் இன்று பிற்பகல் 102 டிகிரி வெயிலின் வெப்பம் பாதிவாகியுள்ளது. கடந்த சில நாட்களாக சுட்டெரிக்கும் வெயில், இன்று முன்பைக் காட்டிலும் சற்று அதிகமாக சுட்டெரித்துள்ளது. இதனை தாங்க முடியாமல் அப்பகுதி மக்கள் அவதியடைந்து வருகின்றனர். இப்பொழுதே இப்படி என்றால், இன்னும் கத்தரி வெயிலின் தாக்கம் எப்படி இருக்குமோ என மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். உங்கள் பகுதிகளில் வெயில் எப்படி இருக்கு?.
பரோடா வங்கியில் 518 சிறப்பு அலுவலர் காலிப் பணியிடங்கள் உள்ளன. மாதம் ரூ.48,400 – ரூ. 67,160 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளன. முதுநிலை மேலாளர் பணிக்கு 27 – 37 வயதிற்குள்ளும், மேனஜர் ஆபிசர் பணிக்கு 22 – 32க்குள்ளும் இருக்க வேண்டும். பணி அனுபவம், கல்வித்தகுதி அடிப்படையில் எழுத்துத்தேர்வுக்கு அழைக்கப்பட்பட்டு தேர்வு செய்யப்படுவர். நாளைக்குள் (மார்ச் 11) இந்த லிங்கை <
விக்கிரவாண்டியை அடுத்த கயத்தூா்,ஜெயராமன்( 55), விவசாயி. இவருக்கும் மனைவி சரசு என்பவருக்கும் பல நாட்கள் குடும்பப் பிரச்னை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், மனஉளைச்சலில் இருந்து வந்த ஜெயராமன்,மாா்ச் 6 விஷம் குடித்து மயங்கிக் கிடந்தாராம்.குடும்பத்தினா், மருத்துவமனையில் சோ்த்தனா். தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த ஜெயராமன் நேற்று உயிரிழந்தாா். விக்கிரவாண்டி போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே 16 வயது சிறுமியை இன்ஸ்டாகிராமில் பழகி திருமணம் செய்த 18 வயது ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சிறுவனை இன்று(மார்ச்.09) போலீசாரால் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் சிறுவன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் 10ஆம் தேதி தொழிற்பழகுநர் பயிற்சி செயற்கை முகாம் நடைபெற உள்ளது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முன்னணி நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களை நிரப்ப உள்ளனர். கூடுதல் தகவல்களைப் பெற விழுப்புரம் தொலைபேசி எண் 04146 290673 / 294 989 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள தென்புதுப்பட்டு கிராமத்தில் இன்று காலை(மார்ச்.09) 20 பேர் பயணம் செய்த வேன் கவிழ்ந்ததில் 5 பேர் படுகாயம் அடைந்தனர். 15 பேர் எவ்வித காயங்களும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். காயம் அடைந்த ஐந்து பேர் செஞ்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் செஞ்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.