Villupuram

News October 19, 2025

விழுப்புரத்தில் கனமழை வெளுக்க போகுது!

image

அரபிக்கடல் பகுதியில் உருவாகியுள்ள தாழ்வுநிலை மண்டலத்தால், தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு பகுதியில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, நாளை (அக்.20) விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே முன்னெச்சரிக்கையோடு இருக்க அறிவிக்கப்பட்டுள்ளது.

News October 19, 2025

விழுப்புரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் (அக்.18) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News October 18, 2025

விழுப்புரம் மக்களே மழை காலத்தில் கரண்ட் கட்டா..?

image

விழுப்புரம் மக்களே தற்போது மழை காலம் தொடங்கியுள்ளதால் பல்வேறு பகுதியில் மின் விநியோகத்தில் பிரச்சனை எழும். அதனை சரி செய்ய லைன்மேனை நேரில் தேடி அலைய வேண்டாம். TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் உடனடியாக லைன் மேன் வருவார். இதை உடனே எல்லோருக்கும் SHARE பண்ணுங்க!

News October 18, 2025

விழுப்புரம் : Driving Licence-க்கு வந்த முக்கிய Update!

image

விழுப்புரம் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் <>இங்கு கிளிக் செய்து<<>> மேற்கொள்ளலாம். மேலும், இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News October 18, 2025

விழுப்புரம்:ஆன்லைன் மோசடி: பணத்தை 48 மணிநேரத்தில் மீட்கலாம்!

image

ஆன்லைன் பொருட்கள் விற்பனை, பகுதிநேர வேலை எனப் பல வழிகளில் ஆன்லைன் மோசடி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நீங்கள் பணத்தை இழந்தவுடன், உங்கள் பணம் மோசடியாளர் கணக்கிற்கு சென்றுவிடும். ஆனால் வங்கிகளுக்கிடையேயான பணப் பரிவர்த்தனைக்கு 48 மணிநேரம் ஆகும். மக்களே இப்படி நடந்தால் 1930 என்ற எண்ணிலோ (அ) இந்த லிங்க் மூலமாகவோ புகார் அளித்து, வங்கிக்கு தகவல் அளித்தால், பணத்தை விரைவாக மீட்கலாம். ஷேர் பண்ணுங்க!

News October 18, 2025

விழுப்புரம்: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

image

விழுப்புரம் மக்களே வாடகை வீட்டில் உள்ளீர்களா? இதை தெரிந்து கொள்ளுங்கள்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும்.2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும்.11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க

News October 18, 2025

விழுப்புரம் : மக்களே வீடுகளில் இனி இது கட்டாயம்

image

விழுப்புரம் மக்களே அடுக்குமாடி குடியிருப்புகளை போல தனி வீடுகளுக்கு பார்க்கிங் கட்டாயம் என தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில், 3,300 சதுர அடி வரையிலான தனி வீடுகளில் 2 பைக், 2 கார்கள், 3,300 சதுரஅடிக்கு மேல் உள்ள வீட்டில் 4 பைக், 4 கார்கள் நிறுத்துமிடம் ஒதுக்குவது கட்டாயம் என விதிகள் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. *தெரிந்தவர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க*

News October 18, 2025

விழுப்புரம்: மக்களே ரயில்வேயில் வேலை ரெடி!

image

ரைட்ஸ் எனப்படும் ரயில்வே நிறுவனத்தில் சிவில், எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் போன்ற பிரிவுகளில் காலியாக உள்ள 600 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பதவிகளுக்கு ஏற்ப தகுதிகள் மாறுபடும். இதற்கு 18- 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.16,000-ரூ 29,000 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் நவ.12க்குள் <>இந்த லிங்கில்<<>> விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க

News October 18, 2025

பயிர் காப்பீடு செய்ய மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

image

விழுப்புரம் மாவட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு செய்ய நெல் 1ஏக்545 இழப்பீடு ஏற்பட்டால்ரூ36312 கடைசி தேதி 15 11 2025 உளுந்து 1 ஏக் ரூ256 இழப்பீடு ஏற்பட்டால்ரூ17006 மணிலா பயிர் 1 ஏக்468 இழப்பீடு ஏற்பட்டால் ரூ31210 தரப்படும் கடைசி தேதி 30 12 2025என்று மாவட்ட ஆட்சியர் விவசாய மக்கள் அனைவரும் காப்பீடு செய்து பயன் பெறுமாறு வேண்டுகோள் விடுத்தார்

News October 18, 2025

விழுப்புரம் அருகே 900 ஆண்டுகள் பழைய சிற்பம் கண்டெடுப்பு

image

விழுப்புரம் அருகே கண்டாச்சிபுரம் அருகே நெற்குணம் கிராமத்தில் உள்ள திருப்பனிசந்துறை நாயனார் கோவியிலில் 900 ஆண்டு காலப் பழமை வாய்ந்த துர்கைச் சிற்பம் கண்டுடெடுக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பம் ‘எண்தோளி என்றழைக்கப்படும் கொற்றவை (துர்கை) சிற்பம் கி.பி. 11ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழ காலப் புடைப்புச் சிற்பம் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

error: Content is protected !!