India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரம் மாவட்டத்தில் முதல்வர் மருந்தகங்கள் திறக்க விண்ணப்பிக்கலாம் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அப்துல் ரகுமான் தெரிவித்துள்ளார். தமிழக அரசு முதல் கட்டமாக 1000 இடங்களில் முதல்வர் மருந்தகங்களை திறந்து மக்களுக்கு சேவை செய்து வருகிறது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் டி.ஃபார்ம் முடித்தவர்கள் தொழில் தொடங்க முதல்வர் மருந்தகங்கள் அமைக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
விழுப்புரத்தில் தற்போது நடைபெற்றுவரும் புத்தகத் திருவிழா இன்று(மார்ச்.12) மாலையுடன் நிறைவுபெற உள்ளது. கடந்த மார்ச்.02 ஆம் தேதி துவங்கப்பட்ட இக்கண்காட்சி 10 நாட்களாக மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இன்று கடைசி நாள் என்பதால் மக்களின் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது. இன்று மாணவ மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதுவரை ஆயிரக்கணக்கான புத்தகங்கள் விற்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு அரசு Mobile App Developer பணிக்கு இலவச படிப்பை வழங்குகிறது. இந்த படிப்பு மூலம் செயலிகளை உருவாக்குவும், செயல்படுத்தவும் முடியும். 12ஆம் வகுப்பு முடித்திருந்தாலே போதும். 18 வயதுக்கு மேற்பட்ட யார் வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம். இதன்மூலம் ரூ.35,000 – ரூ.45,000 வரை சம்பளத்தில் வேலை கிடைக்கும். GRIT Talents, Gradianty, AIRNODE UK, IBM, Brainhunters MY ஆகிய நிறுவனங்களில் <
பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு, வரும் வியாழக்கிழமை காலை 9.25க்கு விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் (வ.எண் 06130) இயக்கப்படுகிறது. எதிர் வழித்தடத்தில் திருவண்ணாமலையில் பிற்பகல் 12:40க்கு புறப்படும் சிறப்பு ரயில் (வ.எண் 06129) பிற்பகல் 2:15-க்கு விழுப்புரம் வந்தடையும் என ரயில்வே நிர்வாகம் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் 11 ஒன்றியங்களில் கூடுதலாக வட்டார வள பயிற்றுநர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் 25 வயது முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். தகுதி உள்ளவர்கள் திட்ட இயக்குனர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை கட்டிடம், ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகம்-605502 என்ற முகவரியை அணுகலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் இருவேல்பட்டு கிராமத்தில் பெஞ்சல் புயலின் போது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெள்ள சேதத்தை பார்வையிட வந்த தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் மீது சேறு சகதியை வீசிய வழக்கில் தலைமுறைவாக இருந்து வந்த விழுப்புரம் தெற்கு மாவட்ட பாஜக மகளிர் அணி முன்னாள் துணைத் தலைவி விஜய ராணியை இன்று திருவெண்ணைநல்லூர் போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (11.03.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள், போதைப் பொருட்களின் விற்பனை தடுப்பது மற்றும் கண்காணித்திடுவது தொடர்பான வாராந்திர ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் இன்று நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் கி.அரிதாஸ், திண்டிவனம் சார் ஆட்சியர் திவ்யான்ஷு நிகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நேற்று ரஞ்சித் குமார் என்பவர் சென்னையில் இருந்து கம்பம் நோக்கி ஆம்னி பேருந்தில் பயணம் மேற்கொண்டு உள்ளார். அப்போது அவரது இருக்கைக்கு அருகில் அமர்ந்துள்ள பெண்ணிடம் ரஞ்சித் குமார் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து, பெண் பேருந்து ஓட்டினரிடம் புகார் அளிக்க, பேருந்து மயிலம் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அந்த பெண்ணிடம் பெறப்பட்ட புகார் அடிப்படையில் ரஞ்சித் கைது செய்யப்பட்டார்.
இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயிலில் பல்வேறு பதவிகளுக்கான காலிப்பணியிடங்கள் மார்ச் 12ம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.பல்வேறு பதவிகளில் மொத்தம் 76 காலிப்பணியிடங்கள் உள்ளன.18-45 வயதுக்குள் இருக்க வேண்டும்.இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் இந்து மதத்தை சார்ந்தவரக இருக்க வேண்டும்.ரூ.10,000 முதல் ரூ.50,400 வரை மாத சம்பளம். இந்த <
Sorry, no posts matched your criteria.