India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரம், செஞ்சிக் கோட்டையில் உள்ள மூன்று மலைக்கோட்டைகளில் இதுவும் ஒன்றாகும். கி.பி. 1200இல் கட்டப்பட்ட இதன் பொருள் மன்னன் மலை ஆகும். இக்கோட்டை கருங்கற்களால் கட்டப்பட்டது. இதன் வளாகத்தில் உடற்பயிற்சிக் கூடம், அரண்மனை தளம், மணிமாடம், களஞ்சியம், இந்தோ-இஸ்லாமிய பாணி கருவூலம், தானியங்கள் பாதுகாப்பு கட்டடம், யானைக்குளம், கோவில்கள், பள்ளிவாசல்கள் போன்றவை சிதைந்த நிலையில் உள்ளன.
விழுப்புரம் நாடாளுமன்ற (தனி) தொகுதி வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அரசினர் அறிஞர் அண்ணா கலைக்கல்லூரியில் உள்ள வாக்கு என்னும் மையத்தினை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி ஆய்வு செய்தார். பின்னர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் மத்திய பாதுகாப்பு படையினரிடம் பாதுகாப்பு குறித்த விளக்கங்களை கேட்டறிந்தார்.
முகையூர் திமுக மாவட்ட கவுன்சிலர் ராஜீவ் காந்தியை இன்று காலை போலீசார் கைது செய்தனர். தேர்தல் பணியின்போது பெண் கிராம நிர்வாக அலுவலரை தாக்கியதாக காணை போலீசார், ராஜீவ் காந்தி மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுத்துள்ளனர். கிராம நிர்வாக அலுவலர் சாந்தி கொடுத்த புகாரின் பேரில், ராஜீவ் காந்தி மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவாகியுள்ளது.
வார இறுதி நாட்களான இன்று மற்றும் நாளை சுபமுகூர்த்த தினம் என்பதால் சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும் என விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், விருத்தாசலம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
வார இறுதி நாட்களான நாளை மற்றும் நாளை மறுநாள் சுபமுகூர்த்த தினம் என்பதால் சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும் என விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், விருத்தாசலம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
விழுப்புரம்- மயிலாடுதுறை பயணிகள் ரயில் திருவாரூர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே திருச்சி கோட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், அதன்படி விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை வரை இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரயில் மே 2 முதல் திருவாரூர் வரை இயக்கப்பட உள்ளன. இதனால், ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் வளாக மைதானத்தில், வட்டார போக்குவரத்துத்துறையின் சார்பில் விழுப்புரம் மற்றும் திண்டிவனம் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் செஞ்சி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலக மூலம், மாவட்ட அளவிலான தனியார் பள்ளி வாகனங்களின் கூட்டாய்வு செய்யும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் சி.பழனி இன்று துவக்கி வைத்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் காவல் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ். இவர் நேற்று(ஏப்.24) ரோந்து சென்றபோது கோட்டைமேடு பகுதியில் இருந்து குயிலாப்பாளையம் செல்லும் பாதையில் நின்று கொண்டிருந்த பெரிய முதலியார்சாவடியை சேர்ந்த ரவுடி மணவாளனை விசாரித்தார். அப்போது மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து எஸ்.ஐ. ரமேஷை, மணவாளன் வெட்ட முயன்றார். அவரை போலீசார் கைது செய்தனர்.
கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி விழுப்புரம் அண்ணாமலை பேருந்து நிறுத்தத்தில் பெண் பயணிகளை ஏற்றாமல் அரசு பேருந்து சென்றது குறித்து ஊடகத்தின் வாயிலாக செய்தி வெளியானது. இதையடுத்து, பெண் பயணிகளை ஏற்றி செல்லாத அரசு பேருந்து ஓட்டுநர் ஆறுமுகத்தை சஸ்பெண்ட் செய்தும், ஒப்பந்த ஊழியரான நத்துனர் தேவராசு அவர்களை பணி நீக்கம் செய்து விழுப்புரம் மண்டல பொது மேளாலர் இன்று உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளில் (Strong Room) வைக்கப்பட்டுள்ள 06 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கண்காணிப்பு மையத்திலிருந்து கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் பழனி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Sorry, no posts matched your criteria.