India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஜூலை 10ஆம் தேதி விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து விக்கிரவாண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி தேர்தல் நடத்துவது தொடர்பாகவும், வாக்கு இயந்திரங்களை பாதுகாப்பாக வைப்பது தொடர்பாகவும் ஆய்வு மேற்கொண்டார்.
உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மாவட்ட ஆட்சித்தலைவர் பழனி தலைமையில், முகையூர் ஊராட்சி ஒன்றியம், சென்னகுணம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், 2024 -2025ஆம் ஆண்டிற்கு பள்ளிகள் திறக்கப்பட்டதையடுத்து , மாணவ, மாணவியர்களுக்கு இனிப்பு வழங்கி வரவேற்றனர். பின்னர் விலையில்லா பாடப்புத்தகங்களை இன்று வழங்கி விழாப் பேரூரையாற்றினார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ புகழேந்தி மறைவையடுத்து அந்த சட்டமன்றத் தொகுதி காலியானது. இந்நிலையில் இந்தத் தொகுதிக்கு ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஜூன் 14ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல், கடைசி நாள் ஜூன் 21. ஜூலை 10ல் வாக்குப்பதிவு, ஜூலை 13இல் வாக்குகள் எண்ணப்படும். இன்று முதல் தேர்தல் விதிகள் நடைமுறைக்கு வந்தன.
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே நல்லாவூர் கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் செல்வகுமாரின் மகள் மம்தா. இவர் திண்டிவனத்தில் அரசு நிதி உதவிபெறும் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து 579 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்தார். மம்தாவுக்கு சிறு வயது முதலே மருத்துவராக வேண்டுமென்ற கனவு இருந்ததால் நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார். தேர்ச்சி பெற்றும் கல்லூரியில் இடம் கிடைக்குமா என்று தவிக்கிறார்.
விழுப்புரம் மாவட்டம் – மயிலம் ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி சன்னதியில் நேற்று (ஜூன் 9) நடைபெற்ற, பாட்டாளி சமூக ஊடக பேரவையின் மாநில துணை ஒருங்கிணைப்பாளர் டி.வெற்றிச்செல்வம் – எஸ்.விஜயா இணையரின் திருமண விழாவில் பசுமலை தியாகத்தின் மாநில தலைவர் சௌமியா அன்புமணி பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். உடன் பாமக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
விழுப்புரம் அடுத்த பானாம்பட்டு வார்டு கழக துணைச் செயலாளர் ஆர்.எஸ்.முருகன் இல்ல திருமண விழாவில் உயர்கல்வி துறை அமைச்சர் க.பொன்முடி கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். உடன் நகரச் செயலாளர் இரா.சக்கரை, சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் பால்ராஜ், தகவல் தொழில்நுட்ப அணி ப.அன்பரசு, வார்டு செயலாளர் சண்முகம், அவைத் தலைவர் ஜனார்த்தனன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தமிழக முழுவதும் இன்று டிஎன்பிஎஸ்சி தேர்வு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் தேர்வு நடைபெறும் மையங்களில் அரசு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி தேர்வு மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திண்டிவனம் அடுத்த வடஆலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் விஜயரங்கன்(27). புதிய வீட்டின் பாத்ரூமில் ஒயரிங் வேலை நடந்து வந்தது. நேற்று (ஜூன் 8) விஜயரங்கன் ஸ்விட்ச் போர்டில் இணைக்கப்பட்டிருந்த டிரில்லிங் மிஷினில் இருந்த மின்சார ஒயரை கையில் சுற்றிய போது, மின்சாரம் தாக்கியதில் மயங்கி விழுந்தவர் உயிரிழந்தார். இதுகுறித்து ரோஷனை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டிவனம் அடுத்த கீழ்மாவிலங்கை கிராமத்தில், நேற்று (ஜூன் 8) வனப்பகுதியில் இருந்து வழி தெரியாமல் மான் வந்துள்ளது. இந்த மானை நாய்கள் துரத்தி கடித்தது. நாய்களிடம் இருந்து மானை கிராம மக்கள் மீட்டு, திண்டிவனம் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். நாய்கள் கடித்ததால் காயமடைந்த மானுக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்து பின் மானை வனப்பகுதியில் விட்டனர்.
பொதுமக்கள் முதலீடு செய்வதில் விழிப்புணர்வுடன் இருக்கும் வகையில் விழுப்புரம் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு சார்பில், பொதுமக்களிடம் மோசடி செய்யும் நிதி நிறுவனங்கள் பற்றிய முன்னெச்சரிக்கை துண்டு பிரசுரங்களை காவல்துறை பல்வேறு பகுதிகளில் வழங்கி வருகின்றனர். இதில், இந்திய ரிசர்வ் வங்கியிடம் பதிவு செய்த வங்கி சாரா நிதி நிறுவனங்களில் மட்டுமே முதலீடு செய்தல் வேண்டும் என பொதுமக்களுக்கு கூறப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.