India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரத்தில் நேற்று நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, 25 எம்பிக்கள் இருந்தால் பாராளுமன்றத்தில் பாமக பேசியிருக்கும் என்று அன்புமணி கூறினார். பாஜகவுடன் கூட்டணி வைத்துக்கொண்டு 2026 தேர்தலை பாமக சந்தித்தால், இரண்டு தொகுதிகளில் கூட ஜெயிக்க முடியாது என்று அமைச்சர் பொன்முடி பேசினார்.
விழுப்புரம் எம்பி ரவிக்குமார் இன்று (ஜூலை 27) அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் ஜிப்மர் மருத்துவமனைக்கு 2023-24 இல் 1490.43 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த ஆண்டு பட்ஜெட்டில் 1440 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கிறது. இது கடந்த ஆண்டு ஒதுக்கீட்டைவிட 50 கோடி ரூபாய் குறைவாகும். இதனை வன்மையாக கண்டிக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
திண்டிவனம், JVS திருமண மண்டபத்தில் விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி K.S.மஸ்தான் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். உடன் மாவட்ட பொறுப்பாளர் டாக்டர் ப.சேகர், முன்னாள் மயிலம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா.மாசிலமணி மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக விளையாட்டு தரவரிசை பட்டியலில், விழுப்புரம் தனியார் பள்ளியில் 2023-2024-ம் கல்வியாண்டில் பயின்ற மாணவர்கள் அஷ்விந்தரன், தினேஷ் ராஜ், மாணவி நிஷாந்தி ஆகியோர் தரவரிசை எண் 181, 183, 348 பெற்று தமிழ்நாடு அளவில் சிறப்பிடம் பிடித்து, அண்ணா பல்கலைக்கழக விளையாட்டு ஒதுக்கீட்டு கவுன்சிலிங்கில் முதல் தரவரிசைப்பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் ஊராட்சித் துறையில் பணியாற்றிய துணை பிடிஓக்கள் 30 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். முகையூர், காணை, திருவெண்ணைநல்லூர், மயிலம் உள்ளிட்ட ஊராட்சி பிரிவுகளுக்கும், பொது பிரிவுகளுக்கும் மற்றும் சத்துணவு பிரிவுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த உத்தரவினை விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர் பழனி வெளியிட்டார்.
உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்களின் மகனும், கள்ளக்குறிச்சி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பாளருமான கௌதம சிகாமணியின் சொத்துக்களை வருமானவரித் துறையினர் இன்று முடக்கினார்கள். முடக்கிய சொத்துக்களின் மதிப்பு ரூபாய் 14.21 கோடி ஆகும். இதனால் அரசியல் சுற்று வட்டாரங்களில் சற்று பதற்றம் ஏற்பட்டுள்ளது.
விழுப்புரம் அடுத்த காணை குப்பம் கிராமத்தைச் சேர்ந்த பாத்திர வியாபாரி செந்தில் என்பவர் வசித்து வந்த வீடு இன்று காலை திடீரென தீப்பற்றி எரிந்தன. அக்கம் பக்கத்தினர் உடனே தண்ணீரைக் கொண்டு அணைக்க முயற்சி செய்தனர். மேலும் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக விழுப்புரத்தில் இருந்து தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைத்தனர்.
திருவெண்ணெய் நல்லூர் வட்டத்தில் உள்ள ஆனத்தூர் ஊராட்சியில் 20க்கும் மேற்பட்டோர் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி கள்ளக்குறிச்சி அ.தி.மு.க மாவட்ட செயலாளர் ரா.குமரகுரு அவர்களின் தலைமையில் தங்களை அ.தி.மு.க-வில் இணைத்துக் கொண்டனர். உடன் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் இன்று காலை நடைபெறுகிறது. 10 ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை முடித்தவர்கள், ஐடிஐ, பட்டயப்படிப்பு முடித்தவர்கள் இந்த முகாமில் பங்கேற்கலாம். ரூ.10 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை ஊதியம் வழங்கப்படும் என தொழில்நெறி வழிகாட்டும் மைய இயக்குநர் பால முருகன் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் நேற்று இரவு லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய ரெய்டில், கணக்கில் வராத ரூ.42 ஆயிரம் பணம் சிக்கியது. பத்திரங்களை பதிவு செய்ய லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்புக்கு தகவல் வந்தது. தொடர்ந்து 8 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு துறை குழுவினர் நேற்று இரவு திரு.வி.க., வீதியில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் நுழைந்து, சோதனை செய்தனர். சோதனையில் கணக்கில் வராத பணத்தை பறிமுதல் செய்தனர்.
Sorry, no posts matched your criteria.