India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று இடி மற்றும் மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட அளவிலான குழந்தைகள் நல மற்றும் பாதுகாப்பு குழுக்கூட்டம், குழந்தைகளுக்காக பணிபுரியும் சார்பு துறையினருக்கான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் மற்றும் குழந்தை நல குழுவின் கூராய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சி.பழனி தலைமையில் இன்று நடைபெற்றது. உடன் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் பார்கவி உள்ளார்.
விக்கிரவாண்டி: பொன்னங்குப்பம், வேம்பி, வேளியந்தல், நரசிங்கனூர், கொட்டியாம்பூண்டி, தும்பூர், குண்டலபுலியூர், கஸ்பாகரணை, உலகலாம்பூண்டி, நந்திவாடி ஆகிய கிராமங்கள் பயன்பெறும் வகையில் நாளை மக்களுடன் முதல்வர் திட்டம் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேம்பி சமுதாயக் கூடத்தில் நடைபெற உள்ளது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் கலந்து கொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் சி.பழனி தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் அருகே கிணறு வெட்டும் பணியின்போது 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவெண்ணெய்நல்லூர் அருகே அருங்குறிக்கையில், 100 ஆடி ஆழ கிணற்றை அழப்படுத்தும் பணியின்போது கயிறு அறுந்து விழுந்ததில் தணிகாசலம்(48), ஹரி கிருஷ்ணன்(40), முருகன்(38) ஆகியோர் கை, கால் முறிந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் கள்ளச்சாராயம், போதைப் பொருள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் தடுப்பது தொடர்பான வாராந்திர கலால் ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சி.பழனி தலைமையில் இன்று நடைபெற்றது. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாச், உதவி ஆணையர் (கலால்) முருகேசன் உட்பட பலர் உள்ளனர்.
திருவெண்ணெய்நல்லூர் வட்டம், அரசூர், சித்தனாங்கூர், ஆலங்குப்பம், இருவேல்பட்டு, கந்தலவாடி, கருவேப்பிலைபாளையம் ஆகிய கிராமங்கள் பயன்பெறும் வகையில் நாளை மக்களுடன் முதல்வர் திட்டம் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை அரசூரில் உள்ள ஏ.எஸ்.கீர்த்தி திருமண மஹாலில் நடைபெற உள்ளது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சி.பழனி தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் கூறியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஊரகப்பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் ஊரகப்பகுதிகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் ஜூலை 16 அன்று தொடங்கி 13.09.2024 வரை 91 முகாம்கள் நடைபெறவுள்ளதாக தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் குறித்து நியமன அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சி.பழனி, அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் மு.பரமேஸ்வரி, திண்டிவனம் சார் ஆட்சியர் திவ்யான்ஷு நிகம் இருந்தனர்.
விழுப்புரத்தில் சொந்த கட்டிடங்களில் இயங்கும் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுது பார்த்தல், புனரமைத்தல் ஆகிய பணிகளுக்கு அரசு மூலம் நிதி உதவி வழங்கப்படுகிறது. அதன்படி கூடுதலாக வாசிக்கும் ஸ்டாண்ட், மைக் செட் மற்றும் ஒலிபெருக்கி ஆகிய உபகரணங்கள் தேவாலயத்திற்கு அனுமதி வழங்கப்படுகிறது. மேலும் கட்ட வரைபடத்தோடு விண்ணப்பிக்கலாம் என விழுப்புரம் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம், மாம்பழப்பட்டு ரோட்டில் தனியார் டிஜிட்டல் பிரிண்டிங் கடை திறப்பு விழாவில் உயர் கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி கலந்து கொண்டு இன்று (ஜூலை 28) காலை திறந்து வைத்தார். விழாவில் விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் டாக்டர். பொன். கெளதமசிகாமணி மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.