India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து பறக்கும் படையினர் வாகன சோதனை மேற்கொள்ளும் பகுதிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலராகிய மாவட்ட ஆட்சித்தலைவர் சி.பழனி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து, விழுப்புரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய குடியரசு கட்சி, சமாஜ் பார்ட்டி மற்றும் தலித் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கொலைக்கு காரணமானவர்களை உடனடியாக பிடிக்க வேண்டுமெனவும், சிபிஐ விசாரிக்க வேண்டுமெனவும் கோஷங்கள் எழுப்பினர். பின்னர், தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விக்கிரவாண்டி இடைத்தோ்தலையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாள்களுக்கு மதுக்கடைகள் மூடப்படும் என்று மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது. விக்கிரவாண்டி இடைத்தோ்தல் வரும் 10ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதன் காரணமாக 8ஆம் தேதி காலை 10 மணி முதல் 10ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரையிலும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 13ஆம் தேதியும் மாவட்டத்திலுள்ள அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகள், தனியாா் மதுபானக் கடைகள் மூடப்படும்.
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எண்ணாயிரம் ஊராட்சியில், பாமக வேட்பாளர் சி.அன்புமணியை ஆதரித்து பாமக தலைவர் அன்புமணி நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. இந்த தேர்தலில் பாமக வென்றால் தான் சமூக நீதியானது நிலைநாட்டப்படும், வன்னியர்களுக்கான உரிமை மீட்கப்படும். அதனால், பாமக வேட்பாளரை வெற்றி பெற செய்யுங்கள்” எனத் தெரிவித்தார்.
விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவுக்கு ஆதரவாக விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட நேமூர், ஒரத்தூர், தொரவி ஆகிய கிராமங்களில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார். அப்போது தமிழகத்தில் நடைபெறும் அனைத்து தேர்தலிலும் திமுக கூட்டணி வெல்லும் என்று குறிப்பிட்டு பேசினார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வரும் ஜூலை 10ஆம் தேதி நடைபெற உள்ளது. இடைத்தேர்தலை முன்னிட்டு, விழுப்புரம் மாவட்டம் முழுவதும் ஜூலை 8,9,10 மற்றும் 13ஆம் தேதிகளில் அரசு டாஸ்மாக் மதுபான கடைகள், மதுபான கூடங்கள் மற்றும் தனியார் மதுபான கூடங்களை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வரும் ஜூலை 10ஆம் தேதி நடைபெற உள்ளது. இடைத்தேர்தலை முன்னிட்டு, விழுப்புரம் மாவட்டம் முழுவதும் ஜூலை 8,9,10 மற்றும் 13ஆம் தேதிகளில் அரசு டாஸ்மாக் மதுபான கடைகள், மதுபான கூடங்கள் மற்றும் தனியார் மதுபான கூடங்களை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரத்தில் தமிழக மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக துஷ்பிரயோகம் நடைபெற்று வருகிறது. தேர்தல் ஆணையம் இதை கண்டும் காணாமல் இருக்கிறது. தமிழ்நாடு அமைச்சர்களின் ஒட்டுமொத்த செயல்பாடுகளும் விக்கிரவாண்டிக்கு மாற்றி இருப்பதாகவே தெரிகிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை கவலைக்கிடமாக உள்ளதாக குற்றம்சாட்டினார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தபால் வாக்குப்பதிவு சற்றுமுன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. அரசு அதிகாரிகள், காவல்துறையினர் உள்ளிட்டோர் வாக்கு செலுத்திவருகின்றனர். வாக்குப்பதிவு குறித்து கலெக்டரும், மாவட்ட தலைமைத் தேர்தல் அதிகாரியுமான பழனி உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
விக்கிரவண்டி இடைத்தேர்தலில், அதிமுகவினர் வாக்கை வீணடிக்காமல் பாமாவுக்கு வாக்களிக்க வேண்டுமென பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். திண்டிவனம் அருகே உள்ள தைலதாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக வேட்பாளர் தோல்வி அடைந்து விடுவார் என்று தெரிந்ததும், திமுக அரசு அடக்குமுறையை கையாண்டு வருவதாகவும், அதிமுகவும் பாமகவுக்கு பொது எதிரி திமுக தான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.