India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரம் மாவட்டத்தில் அம்பேத்கர், கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு பேச்சுப்போட்டி விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஜூலை 30, 31 ஆகிய நாட்களில் காலை 10 மணிக்கு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி நடைபெற உள்ளது. இதில் மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ.5,000 , இரண்டாம் பரிசாக ரூ.3,000, மூன்றாம் பரிசாக ரூ.2,000 வழங்கப்படும் என ஆட்சியர் பழனி அறிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் அதிமுக சார்பில் தொடர்ந்து மூன்றாவது முறையாக கடுமையான மின் கட்டண உயர்வு மற்றும் அத்தியாவசிய விலைவாசி உயர்வை காரணமாக திமுக அரசை கண்டித்து நாளை காலை 9 மணி அளவில் புதிய பேருந்து நிலையம் நகராட்சி மைதானம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் முன்னாள் அமைச்சர் விழுப்புரம் மாவட்ட செயலாளருமான சிவி சண்முகம் தலைமையில் நடைபெற உள்ளது என அதிமுக சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் பழனி அவர்களின் நேர்முக உதவியாளராக யோக ஜோதி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து கலெக்டர் பழனியிடம் வாழ்த்து பெற்றார். தொடர்ந்து அவர் நேர்முக உதவியாளர் பணியினை மேற்கொண்டார். இதற்கு முன்னர் பணியாற்றியவர்கள் பணியில் இருந்து விடைபெற்ற பின்னரே ஜோதி பொறுப்பேற்றுக்கொண்டார்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் சி.ஐ.டி.யு அமைப்பின் சார்பில் கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் டேங்க் ஆபரேட்டர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்களை பணி நிரந்தரம் செய்யவும், காலமுறை ஊதியம் வழங்கிடவும் தமிழக அரசை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட சிறப்பு தலைவர் ஜீவா தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் ஆரணி நாடாளுமன்றத் தொகுதி நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம், பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி, பாமக வடக்கு மாவட்ட செயலாளர் சி.சிவக்குமார், மற்றும் பாமக முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை மற்றும் மின்சார கட்டண உயர்வு ஆகியவற்றை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தொடர்ந்து கொலைகள் நிறைந்து வரும் தமிழகத்தை கண்டிக்கும் விதமாகவும், மின்சார கட்டணம் அதிகரித்து வருவதால் மக்கள் பாதிக்கப்படுவதை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து, நீர் நிலைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் ஜூன் 1ஆம் தேதி முதல் இன்று வரை அதிகபட்சமாக 16 செ.மீ மழை பெய்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேல்மலையனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்த மாணவி ரிஷிகா தமிழ்-98, ஆங்கிலம்-98 கணிதம்-98 அறிவியல்-97 சமூக அறிவியல்-100 மொத்தம் 491 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடமும் மாவட்ட அளவில் மூன்றாவது இடமும் பிடித்தார், இவருக்கு மேல்மலையனூர் ஊராட்சி மன்றம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் மாணவியை பாராட்டினார்
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் இல்லத்தில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், வன்னியர்களுக்கு வேலைவாய்ப்பில் 10.5% இட ஒதுக்கீடு கோரி முதலமைச்சரிடம் வலியுறுத்தினோம். ஆனால் அரசு செவி சாய்க்கவில்லை. இதனால் விரைவில் பாமக சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அவர் தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த வழக்கில், சமூக வலைதளத்தில் அவதூறாக பதிவு செய்ததாக பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி சூர்யா, விழுப்புரம் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரானர். தவறான தகவலை எக்ஸ் தளத்தில் பதிவு செய்ததாக சிபிசிஐடி போலீசார் அவருக்கு சம்மன் அனுப்பி இருந்த நிலையில் இன்று விழுப்புரம் சிபிசிஐடி அலுவலகத்தில் கூடுதல் எஸ்.பி முன்னிலையில் பாஜக நிர்வாகி எஸ்.ஜி. சூர்யா ஆஜரானார்.
Sorry, no posts matched your criteria.