India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக வேட்பாளர் சி.அன்புமணி டெபாசிட் பெற்றுள்ளார். இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 14 சுற்றுகள் நிறைவடைந்த நிலையில், திமுக வேட்பாளர் 50,000+ வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். தற்போதுவரை பதிவான வாக்குகளில் 6இல் 1 பங்கு வாக்குகளை பாமக வேட்பாளர் பெற்றதால், அவர் டெபாசிட் பெற்றார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்றும் காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 14ஆவது சுற்று நிலவரப்படி திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா – 88,977, பாமக வேட்பாளர் அன்புமணி – 38,975, நாதக வேட்பாளர் அபிநயா – 7,257 வாக்குகள் பெற்றுள்ளனர். இதனால், திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 50,002 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள், பனையபுரம் அரசு பள்ளியில் எண்ணப்பட்டு வருகிறது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையின் 12ஆவது சுற்று நிலவரப்படி: திமுக – 83,431, பாமக – 36,241, நாதக – 6,814 வாக்குகள் பெற்றுள்ளனர். இதனால், திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 47,190 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
விக்கிரவாண்டி வாக்கு எண்ணும் மையத்தில் பாமகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். இடைத்தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் பணம், பொருள் கொடுக்காமல் அதிக வாக்குகள் பெற்றிருப்பதாக கூறி மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர். திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை விட பாமக வேட்பாளர் அன்புணி 30,000 வாக்குகள் பின்னிலையில் உள்ள நிலையிலும் பாமகவினரின் இந்த கொண்டாட்டம் கவனம் ஈர்க்கிறது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள், இன்று பனையபுரம் அரசுப் பள்ளியில் எண்ணப்பட்டு வருகிறது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த வாக்கு எண்ணிக்கையில், திமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. 12ஆவது சுற்று நிலவரப்படி திமுக – 76,693, பாமக – 33,053, நாதக – 6,442 வாக்குகள் பெற்றுள்ளனர். இதில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 43,640 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி, இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தற்போது 11ஆவது சுற்று நிலவரப்படி, திமுக வேட்பாளர் – 69,856, பாமக வேட்பாளர் – 30,421, நாதக வேட்பாளர் – 5265 வாக்குகள் பெற்றுள்ளனர். இதில், திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 39,435 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நடந்து முடிந்த 9 சுற்றுகளிலும் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். இந்நிலையில், தற்போது 10ஆவது சுற்றும் நிறைவடைந்துவிட்டது. முடிவுகள்: திமுக – 63,205, பாமக – 27,845, நாம் தமிழர் கட்சி – 5,265 வாக்குகள் பெற்றுள்ளனர். 33,000 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் உள்ளார்.
விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 5ஆம் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவுகள் தற்போது வெளியாகியிருக்கிறது. அதன்படி, திமுக – 31,151, பாமக – 11,483, நாம் தமிழர் கட்சி – 2,275 வாக்குகள் பெற்றுள்ளனர். 4 சுற்றுக்களைத் தொடர்ந்து, 5ஆம் சுற்று முடிவிலும் திமுக கை ஓங்கியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி, இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், 10 மணிநிலவரப்படி திமுக வேட்பாளர் – 18,620, பாமக வேட்பாளர் – 8,776, நாதக வேட்பாளர் – 1,117 வாக்குகள் பெற்றுள்ளனர். இந்நிலையில், திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 9,844 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
தபால் வாக்குகள் எண்ணும் இடத்தில் வாக்கு முகவர்களுடன் பாமகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தபால் வாக்கு சீட்டில் கூடுதல் மை இருந்ததால், சில வாக்குகள் செல்லாது என அதிகாரிகள் அறிவித்தனர். இதனால், வாக்கு எண்ணிக்கை அதிகாரிகளுடன் பாமகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
Sorry, no posts matched your criteria.