India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள சின்ன செவலை கிராமத்தில் அமைந்துள்ள காளிகாம்பாள் கோயில் வரலாற்றுச் சிறப்புமிக்கதாகும். இக்கோயிலை புகழ்பெற்ற தமிழ் கவிஞர் கம்பர் வழிபட்டதாக கூறப்படுகிறது. செவ்வாய், வெள்ளி, ஞாயிறு தினங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. பக்தர்கள் 9 நாட்கள் அகல் விளக்கு ஏற்றி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என நம்பிக்கை உள்ளது.
தமிழ்நாட்டில் ரேஷன் கார்டு வைத்துள்ள அனைவரும் தங்களுடைய கைரேகையை கட்டாயம் ரேசன் கடைகளில் உள்ள இயந்திரத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதற்காக விழுப்புரம் மாவட்டத்தில் மார்ச் 31-ஆம் தேதி வரை காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது. அதற்குள் குடும்ப அட்டை வைத்துள்ள அனைவரும் தங்களின் கைரேகையை பதிவு செய்ய வேண்டும். ஷேர் பண்ணுங்க
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே கடந்த 19ம் தேதி அன்று இளைஞர் ஜெயசீலன் கொலை செய்யப்பட்ட வழக்கில், மரக்காணம் அடுத்த கந்தாடு, மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கரன்குமாரும், சுந்தரராமன் நேற்று(மார்ச் 24) கைது செய்யப்பட்டனர். மாவட்ட எஸ்.பி. ப.சரவணன் பரிந்துரையின் அடிப்படையில், ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் குண்டா் சட்டத்தில் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திண்டிவனம் அருகே ஆம்னி பேருந்து சென்றுகொண்டிருந்தது. அப்போது, சாலையின் குறுக்கே நாய் சென்றதால் ஆம்னி பேருந்து ஓட்டுநர் பிரேக் பிடித்தார். இதனால் பேருந்தின் மீது பின்னால் வந்த கார் மோதியதுடன், காரின் பின்னால் மற்றொரு ஆம்னி பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில், காரில் இருந்த 5 பேர் காயம் அடைந்தனர்.
விழுப்புரத்தில் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர் மாவட்ட அளவிலான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். நகராட்சி திடலில் நடந்த போராட்டத்திற்கு, தமிழ் ஆசிரியர் கழகம் ஆறுமுகம் தலைமை தாங்கினார். முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் மாநில பொதுச் செயலாளர் சுந்தரமூர்த்தி, வணிகவரி பணியாளர் சங்க பொதுச்செயலாளர் டேனியல் ஜெயசிங், வருவாய்த்துறை அலுவலர் சங்க பொதுசெயலாளர் சங்கரலிங்கம், சிறப்புரையாற்றினர்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், திருக்குணம் மதுரா கொசப்பாளையம் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை என்பவரின் 10 வயது மகள் காயத்ரி ஆடு மேய்டு கொண்டு இருந்த போது பாறையை வெடிவைத்து தகர்த்தபோது சிதறிய கருங்கல் தலையில் விழந்ததில் உயிரிழந்த சிறுமியின் பெற்றோருக்கு ஆறுதல் மற்றும் மூன்று லட்சம் நிதியுதவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வட்டம் குத்தம் பூண்டி கிராமத்தில் செந்தில் குமார் என்ற விவசாயி இதுவரையிலும் தோட்டக்கால் பயிர் மட்டும் செய்து வந்தார். செந்தில் குமார் புது முயற்சியாக ஹைப்ரெட் வகையான மூன்று வருடங்களில் காய் காய்க்கும் புளியங்கன்றுகளை விவசாயம் செய்து நல்ல லாபம் பெறுவதாக கூறுகின்றார். இதுவரையிலும் இந்த பகுதியில் இந்த விவசாயம் யாரும் செய்ததில்லை என குறிப்பிடத்தக்கது.
விழுப்புரம் மாவட்டம் ஆற்காடு கிராமத்தை சேர்ந்தவர் வித்யாஸ்ரீ, 2 கைகள் அற்ற மாற்றுத் திறனாளி. கடந்த 2023ம் ஆண்டு தமிழக அரசு மாற்றுத் திறனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கியது. அது தொடர்பாக பட்டா மற்றும் வரைபடங்களை வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த 6 மாதங்களாக அலைந்தும், இன்னும் வழங்கப்படவில்லை. இது தொடர்பாக இன்று(மார்ச்.24) விழுப்பரம் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.
விழுப்புரம் டைடல் பார்க் நிறுவனத்தில், தொழில்நுட்ப உதவியாளர், நிர்வாக உதவியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாதம் ரூ.30,000 முதல் ரூ.1,87,000 வரை சம்பளம் வழங்கப்படும். இந்தப் பணியிடங்களுக்கு பி.இ / பி.டெக் முடித்தவர்கள் ஏப்.,2ஆம் தேதி வரை <
மத்திய அரசின் கீழ் செயல்படும் ஹூக்ளி கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் (எச்.சி.எஸ்.எல்.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பயர்மேன், ரிஜ்ஜர், புராஜக்ட் ஆபிசர் உள்ளிட்ட 24 இடங்கள் உள்ளன. 18-45 வயதிற்குட்பட்டும், 10ஆம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் இன்றைக்குள் (மார்ச். 24) <
Sorry, no posts matched your criteria.