India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரம் மக்களே புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியுமா? ஆம், eservices.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் ‘Apply Patta transfer’ என்று ஆப்ஷன் மூலமாக வீட்டிலிருந்த படியே புதிய பட்டாவிற்கு விண்ணப்பிக்கலம். (SHARE பண்ணுங்க)
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. செஞ்சியில் 41 மி.மீ. மழையும், வல்லத்தில் 34 மி.மீ. மழையும் பெய்தது. முண்டியம்பாக்கத்தில் 23 மி.மீ., நேமூர், அனந்தபுரத்தில் தலா 20 மி.மீ. மழை பதிவானது. கோலியனூரில் 17 மி.மீ. மழையும், வளவனூரில் 16 மி.மீ. மழையும், கெடாரில் 14 மி.மீ. மழையும், திண்டிவனத்தில் 12 மி.மீ. மழையும் பதிவானது. வானூரில் 9 மி.மீ.,விழுப்புரத்தில் 10 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அதிகம் அறியப்படாத கோயில்களில், வரலாறு மற்றும் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அற்புதமான இடம் ஆலக்கிரமாம் எமதண்டீஸ்வரர் கோயில். இக்கோயில் கால சர்ப்ப தோஷம் மற்றும் பிற தோஷங்களை நீக்கும் தலமாக நம்பப்படுகிறது. இங்கு மூலவரான எமதண்டீஸ்வரர், சதுர வடிவ ஆவுடையார் மீது அருள்பாலிக்கிறார், இது ஒரு அரிதான அமைப்பு. தமிழகத்தின் மூத்த விநாயகர் சன்னதியும் இங்குள்ளது. SHARE பண்ணுங்க!
விழுப்புரம் மாவட்டத்தில் செப்டம்பர் 9 ஆம் தேதி ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி,
1. TPR மஹால், திருச்சிற்றம்பலம்
2. அரசு மேல்நிலைப்பள்ளி வளாகம், நகனூர்
3. அரசு மேல்நிலைப் பள்ளி வளாகம், ஓங்கூர்
4. அரசு மேல்நிலைப் பள்ளி வளாகம், கண்டமாணடி
5. ERM மித்ரா திருமண மண்டபம், பாக்கம்
6. VRM திருமண மண்டபம், கொளத்தூர்
ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளது.
▶️விழுப்புரம் மக்களே, தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள 1,794 கள உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது ▶️இதற்கு ITI படித்திருந்தால் போதுமானது ▶️சம்பளமாக ரூ.18,800 முதல் 59,900 வரை வழங்கப்படும் ▶️இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
SBI அல்லது வேறு ஏதேனும் வங்கி கணக்கின் செயலி போல் WhatsApp-ல் வரும் apk File களை Click செய்து உங்களுடைய வங்கி கணக்கு விவரங்களை உள்ளீடு செய்யாதீர்கள். மீறி செய்தால் உங்கள் வங்கி கணக்கில் உள்ள பணத்தை இழப்பீர்கள். இது போன்று ஏமாற்றப்பட்டால் 1930 என்ற இலவச எண்ணை அழைக்கவும். www.cybercrime.gov.in என்ற வலைதள முகவரியில் புகாரளிக்கவும். ஏமாறாமல் இருக்க மற்றவர்களுக்கு ஷேர் செய்து தெரியப்படுத்துங்கள்.
விக்கிரவாண்டி, பனையபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி(65). இவர், கடந்த ஆக.25ம் தேதி முதல் காணவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில், விக்கிரவாண்டி போலீஸார் வழக்குப் பதிந்து மாயமான சுப்பிரமணியைத் தேடி வந்தனர். இந்த நிலையில், அதே பகுதியில் உள்ள தனியார் கரும்பு வயலில் சுப்பிரமணி இறந்து அழுகிய நிலையில் கிடந்தது நேற்று(செப்.07) தெரியவந்தது. இதுகுறித்து விக்கிரவாண்டி போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (செப்.07) இரவு 10:00 மணி முதல் நாளை காலை 6:00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவல் அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம் அல்லது 100 அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மக்களே.. இந்த செப். மாதத்தில் மட்டும் நீங்கள் விண்ணப்பிக்க வேண்டிய டாப் வேலை வாய்ப்புகள்:
▶️சீறுடை பணியாளர் தேர்வு (https://tnusrb.cr.2025.ucanapply.com/login)
▶️ஊராட்சி துறை வேலை(https://tnrd.tn.gov.in/project/recruitment/Application_form_union_Display.php)
▶️EB துறை வேலை(https://tnpsc.gov.in/)
▶️LIC வேலை(https://licindia.in/)
▶️கிராம வங்கியில் வேலை(https://www.ibps.in/) ஷேர் பண்ணுங்க
விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் தோட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில், இன்று (செப். 7) சமூக ஊடகப் பேரவை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாமக எம்எல்ஏ அருள், கௌரவத் தலைவர் மணி மற்றும் ஊடகப் பேரவை நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதில் வரவிருக்கும் தேர்தலுக்கான பணிகள் மற்றும் புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பது குறித்து விரிவாக ஆலோசனை செய்யப்பட்டது.
Sorry, no posts matched your criteria.