Villupuram

News September 8, 2025

விழுப்புரத்தில் பதவி உயர்வு தரும் அரசலீஸ்வரர் கோயில்

image

விழுப்புரம் ஒழிந்தியாம்பட்டு பகுதியில் உள்ளது அரசலீஸ்வரர் கோயில். இந்த கோயிலில் மூலவர் சுயம்பு லிங்கமாக காட்சி தருகிறார். பதவி இழந்தவர்கள், பதவி உயர்வு வேண்டுபவர்கள் இங்குள்ள அரசமர இலையால் மூலவருக்கு அபிஷேகம் செய்தால் பதவி உயர்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை. ப்ரோமோஷனுகாக காத்திருக்கும் உங்கள் நண்பருக்கு ஷேர் பண்ணுங்க

News September 8, 2025

விழுப்புரம்: ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு

image

விழுப்புரம் மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க

News September 8, 2025

வந்தே பாரத் ரயிலில் பெட்டிகள் அதிகரிப்பு: பயணிகள் மகிழ்ச்சி

image

விழுப்புரம் வழியாக இயக்கப்படும் சென்னை-திருநெல்வேலி வந்தே பாரத் ரயிலில், பெட்டிகளின் எண்ணிக்கை 16-லிருந்து 20-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இனிமேல் அதிக பயணிகள் இந்த ரயிலில் பயணிக்க முடியும். இந்த வழித்தடத்தில் அதிக பயணிகள் பயணம் செய்வதால், இந்த மாற்றம் ரயில் பயணிகளிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News September 8, 2025

மாற்றுத்திறனாளிக்கு ஆட்சியர் செயற்கை கால் வழங்கல்

image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இன்று (செப்.8) நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான், ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூ.75,000 மதிப்பிலான செயற்கைக் காலை வழங்கினார். உடன், அரசு அதிகாரிகள், துறை சார்ந்த அதிகாரிகள் உள்ளிட்டோர் பலர் இருந்தனர்.

News September 8, 2025

கால்நடை பராமரிப்பு திறன் பயிற்சி: ஆட்சியர் அழைப்பு

image

விழுப்புரம் மாவட்டம் கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் திறமை மேம்பாட்டு கழகம் இணைந்து நடத்தும் கால்நடை பராமரிப்பு திறன் மேம்பாட்டு பயிற்சி, விழுப்புரம் துணை இயக்குநர் அலுவலகத்தில் செப்.11ம் தேதி முதல் நடைபெறவுள்ளது. 20 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில் விருப்பமுள்ளவர்கள் பங்கேற்று பயன்பெறுமாறு ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

News September 8, 2025

ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (செப். 8) மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். உடன் அரசு அதிகாரிகள், துறை சார்ந்த அதிகாரிகள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

News September 8, 2025

துறைமுகம் வேண்டி: அனுமந்தை கிராமத்தினர் உண்ணாவிரதம்

image

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டம், அனுமந்தை மீனவ கிராமத்தில் மீன்பிடி துறைமுகம் அமைத்து தரக்கோரி மீனவர்கள் இன்று காலை 9 மணி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு துறைமுகம் அமைப்பது குறித்து நவம்பர் 28, 2022 அன்று 19 கிராம மக்கள் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

News September 8, 2025

விழுப்புரம்: ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு

image

விழுப்புரம் மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இதைப்பெற ▶️குடும்ப அட்டை ▶️வருமானச் சான்று ▶️ குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டை நகல் உள்ளிட்ட சான்றுகளுடம் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் அல்லது ‘<>உங்களுடன் ஸ்டாலின்<<>>’ முகாமில் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு 1800 425 3993 அழைக்கவும். SHARE பண்ணுங்க

News September 8, 2025

விழுப்புரம்: ஈஸியா பட்டா பெறுவது எப்படி ?

image

விழுப்புரம் மக்களே புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியுமா? ஆம், eservices.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் ‘Apply Patta transfer’ என்று ஆப்ஷன் மூலமாக வீட்டிலிருந்த படியே புதிய பட்டாவிற்கு விண்ணப்பிக்கலம். (SHARE பண்ணுங்க)

News September 8, 2025

விழுப்புரம் மாவட்டத்தின் மழையளவு

image

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. செஞ்சியில் 41 மி.மீ. மழையும், வல்லத்தில் 34 மி.மீ. மழையும் பெய்தது. முண்டியம்பாக்கத்தில் 23 மி.மீ., நேமூர், அனந்தபுரத்தில் தலா 20 மி.மீ. மழை பதிவானது. கோலியனூரில் 17 மி.மீ. மழையும், வளவனூரில் 16 மி.மீ. மழையும், கெடாரில் 14 மி.மீ. மழையும், திண்டிவனத்தில் 12 மி.மீ. மழையும் பதிவானது. வானூரில் 9 மி.மீ.,விழுப்புரத்தில் 10 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

error: Content is protected !!