Villupuram

News October 28, 2025

விழுப்புரம் ஆட்சியரின் அறிவிப்பு!

image

விழுப்புரம் மாவட்டம், விவசாயிகள் அக்டோபர் மாத குறைதீர்க்கும் நாள் கூட்டம் எதிர்வரும் 31.10.2025 அன்று காலை 11.00 மணியளவில் ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் விவசாயிகள் சங்கப் பிரதிநிகளும், விவசாயிகளும் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு ஆட்சியரால் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

News October 28, 2025

விவசாயிகள் அக்டோபர் மாத குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

விழுப்புரம் மாவட்டம், விவசாயிகள் அக்டோபர் மாத குறைதீர்க்கும் நாள் கூட்டம் எதிர்வரும் 31.10.2025 அன்று காலை 11.00 மணியளவில் ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் விவசாயிகள் சங்கப் பிரதிநிகளும், விவசாயிகளும் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News October 27, 2025

விழுப்புரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று(அக்.27) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News October 27, 2025

கள்ளக்குறிச்சி: ரூ.30,000 சம்பளத்துடன் அரசு வேலை!

image

இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் காலியாக உள்ள 348 எக்ஸிகியூட்டிவ் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி முடித்திருந்தால் போதும். ஆரம்பக்கட்ட சம்பளமாக ரூ.30,000 வழங்கப்படும். வயது வரம்பு: 20 முதல் 35-க்குள் இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் அக்.29-ம் தேதிக்குள் <>இந்த லிங்கின் <<>> மூலம் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News October 27, 2025

விழுப்புரம்: G-Pay-யில் பணம் போனால் கவலை வேண்டாம்!

image

விழுப்புரம்: இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

News October 27, 2025

விழுப்புரம் : ஆட்சியரகத்தில் தீ குளிக்க முயற்சி!

image

விழுப்புரம் அருகேயுள்ள டட் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மைக்கேல் டிசோஸ். இவர் தாங்கள் குடியிருக்கும் இடத்தை இறந்த நபருக்கு தவறுதலாக அதிகாரிகள் பட்டா மாற்றம் செய்து விட்டதாகவும், இது குறித்து 10 ஆண்டுகளாக மனு கொடுத்து எந்த நடவடிக்கையும் இல்லாததால் இன்று(அக்.27) விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீ குளிக்க முயற்சி செய்தார். அங்கு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர்.

News October 27, 2025

விழுப்புரத்தில் பெய்த மழை அளவு!

image

வடகிழக்கு பருவமழை தொடங்கியதை தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதுபடி, விழுப்புரம்: 1மி.மீ, முண்டியம்பாக்கம்: 1 மி.மீ, நேமூர்: 1 மி.மீ, மரக்காணம்: 1 மி.மீ, செஞ்சி: 14 மிமீ, திண்டிவனம்: 4 மி.மீ, வல்லம் 12 மி,மீ எனப் பதிவானது.

News October 27, 2025

விழுப்புரம்: உங்க மொபைலில் இந்த Apps இருக்கா..?

image

1)TN alert: :உங்கள் பகுதியில் மழை, பருவமாற்றம், பேரிடர் கால உதவிகளுக்கான செயலி.
2)நம்ம சாலை: உங்கள் பகுதி சாலைகள் குறித்த புகார் அளிப்பதற்கான செயலி.
3)தமிழ் நிலம்:பட்டா சம்மந்தமான அனைத்து சேவைகளுக்குமான செயலி.
4)e-பெட்டகம்:உங்கள் தொலைந்துபோன சான்றிதழ்களை மீட்கும் செயலி.
5)காவல் உதவி: அவசர காவல்துறை புகார், உதவிக்கான செயலி.

இவை போன்ற முக்கியமான செயலிகளை பதிவிறக்க <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க!

News October 27, 2025

விழுப்புரம்: ரேஷன் உறுப்பினர் சேர்க்கை; PHONE போதும்!

image

ரேஷன் கார்டில் உங்க புது உறுப்பினர்களை சேர்க்கனுமா? இதற்கு இங்கும் அலைய வேண்டியதில்லை. உங்க போன் போதும். 1.<>இங்கு<<>> க்ளிக் பண்ணி பயணர் உள்நுழைவில்’ ரேஷனில் இணைக்கபட்ட மொபைல் எண் பதிவு செய்யுங்க. 2. அட்டை பிறழ்வுகள் தேர்ந்தெடுங்க 3. உறுப்பினர் சேர்க்கை தேர்வு செய்து உறுப்பினர்களின் விவரங்கள் பதிவு செய்து விண்ணப்பியுங்க.. 7 நாட்களில் உறுப்பினர் சேர்க்கை பணி முடிந்துவிடும். (SHARE IT)

News October 27, 2025

வி.புரம்: குடும்பப் பிரச்னையால் தீக்குளித்த பெண்!

image

விழுப்புரம்: திருவெண்ணெய்நல்லூர் அருகே சேமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சீனு. இவருடைய மனைவி ராஜேஸ்வரி(42). இவர்கள் இருவருக்கும் இடையே நடந்த குடும்பத் தகராறில் கடந்த 1ஆம் தேதி ராஜேஸ்வரி தீக்குளித்தார். பின்னர் சிகிச்சை பெற்று வந்த அவர், பலனின்றி நேற்று முன் தினம் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!