Villupuram

News March 30, 2025

ஓடும் ரயிலில் பாலியல் வன்கொடுமை

image

குமரியில் இருந்து டெல்லிக்கு புறப்பட்ட திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னையைச் சேர்ந்த 42 வயதுடைய பெண் ஒருவர், கோவில்பட்டியில் இருந்து தாம்பரத்திற்கு பயணம் செய்தார். நேற்று (மார்.29) அதிகாலையில் அந்த ரயில், உளுந்தூர்பேட்டையை கடந்து விழுப்புரம் நோக்கி வந்துகொண்டிருந்தபோது கண்ணன் (33) என்பவர் பெண்ணிடம் சில்மிஷம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News March 29, 2025

விழுப்புரம் இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (29.03.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News March 29, 2025

திருக்கோவிலூர்: 130 கோடியில் தடுப்பணை புதுப்பிப்பு

image

விழுப்புரம் மாவட்ட எல்லைக்குட்பட்ட திருக்கோவிலூர் தடுப்பணை மறுசீரமைப்புக்கு தமிழக அரசு 130 கோடி ஒதுக்கி உள்ளது. அதனை அடுத்து இன்று மார்ச் 29 தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் மறுசீரமைப்பு செய்யப்படவுள்ள தடுப்பணையை பார்வையிட்டனர். உடன் துறை சார்ந்த அதிகாரிகள் வட்டாட்சியர் குமரவேலன் உட்பட பலர் இருந்தனர்.

News March 29, 2025

விழுப்புரத்தில் சனி தோஷம் நீக்கும் தலம்

image

விழுப்புரம், மொரட்டாண்டி கிராமத்தில் 27 அடி உயர பஞ்சலோக விக்ரகமாய் கையில் வில், அம்பும் மற்ற இரு கைகளில் அபய, வரத முத்திரையோடு சனிபகவான் அருள் பாலிக்கிறார் . சனிபகவானுக்கு எதிரே 54 அடி உயர விநாயகர், 12 ராசிகளை தன்னுடலில் நிறுவப்பட்டுள்ளார். இந்த அமைப்பு சனிபகவானின் உக்கிரத்தைத் தணிக்கும் வகையில் உள்ளதால் இவரை வழிபட்டால் சனி தோஷம் அகலும், சனிப் பார்வை நீங்கும் என்பது நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க

News March 29, 2025

‘பெல்’ நிறுவனத்தில் வேலை; ரூ.84,000 சம்பளம்

image

மத்திய அரசின் பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல் நிறுவனத்தின்(BHEL)பெங்களூர் பிரிவில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணியிடங்கள்- 33, வயது வரம்பு: அதிகபட்சம் 32. கல்வி தகுதி: எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ரூமெண்டேசன் ஆகிய பிரிவுகளில் பொறியியல் பட்டப்படிப்பு. திட்ட இன்ஜினியர் பதவிக்கு ரூ.84,000 சம்பளம். இந்த லிங்கை கிளிக் செய்து பதிவு செய்யலாம்

News March 29, 2025

 ஆடு திருடிய வாலிபருக்கு தர்ம அடி

image

விழுப்புரம் மாவட்டம் கிளியனுார் அடுத்த நல்லாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யனார்(50). இவர், ஆடுகள் வளர்த்து வருகிறார். நேற்று வீட்டின் எதிரில் கட்டி வைத்த ஆடுகளை, பைக்கில் வந்த வாலிபர் ஒருவர் திருடி செல்ல முயன்றார். பார்த்த அப்பகுதி மக்கள் திரண்டு அந்த வாலிபரை பிடித்து தர்ம அடி கொடுத்து கிளியனுார் போலீசில் ஒப்படைத்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்தனர்.

News March 29, 2025

ஓடையில் மூழ்கி பெண் பலி

image

விழுப்புரம் பொய்யப்பாக்கம் சோ்ந்தவர் வீரம்மாள் (57). நேற்று பொய்யப்பாக்கம் ஓடைக்குச் சென்றபோது, கால் தவறி உள்ளே விழுந்தாா். நீரில் மூழ்கிய அவா் சம்பவ இடத்திலேயே உரிழந்தார். தகவலறிந்த விழுப்புரம் தாலுகா போலீஸாா் வீரம்மாளின் சடலத்தைக் மீட்டு, உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 28, 2025

விழுப்புரம் இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (28.03.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News March 28, 2025

பள்ளி படிப்பும், கணினி திறனும் இருந்தால் வேலை

image

மத்திய சாலை ஆய்வு நிறுவனத்தில் ஜூனியர் அசிஸ்டன்ட், ஜூனியர் ஸ்டெனோகிராபர் ஆகிய 209 பணியிடங்கள் நிரப்படவுள்ளன. ஜூனியர் அசிஸ்டன்ட் பணிக்கு ரூ.19,900 – 63,200, ஜூனியர் ஸ்டெனோகிராபர் பணிக்கு ரூ.25,500 – 81,100 வரை சம்பளம் வாங்கப்பட உள்ளன. பள்ளிப்படிப்பு முடித்திருக்க வேண்டும். கணினி திறன் இருக்க வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் வரும் ஏப்ரல் 21ஆம் தேதிக்குள் <>இந்த லிங்கை <<>>க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.

News March 28, 2025

கடன் தொல்லையால் திமுக கிளைச் செயலாளர் தற்கொலை

image

திண்டிவனம் அடுத்த காட்டுச்சிவிரியை சேர்ந்தவர் கமலக்கண்ணன் தி.மு.க., கிளைச் செயலாளர். இவர் சமீபத்தில் அவரது மகளுக்கு திருமணம் செய்து கொடுக்க அதிக அளவில் கடன் வாங்கியுள்ளார். கடன் கொடுத்தவர்கள் திரும்ப கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளனர். இதனால் மனமுடைந்த அவர் நேற்று மாலை வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெள்ளிமேடுபேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!