Villupuram

News October 18, 2024

விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் ஆஜரான சீமான்

image

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விழுப்புரம் மாதம் விக்கிரவாண்டி உரிமையியல் நீதிமன்றத்தின் முன் இன்று ஆஜரானார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பற்றி அவதூறாக பேசியதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளத. வழக்கை விசாரித்த விக்கிரவாண்டி உரிமையியல் நீதிமன்றம், அடுத்த மாதம் 4ஆம் தேதி மீண்டும் ஆஜராக உத்தரவிட்டது. நீதிபதி சத்யநாராயணன் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

News October 18, 2024

தீயணைப்பு வீரர் பணிக்கு தேர்வான வாலிபர் கார் மோதி பலி

image

செஞ்சி, ஆத்திப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் அசோக்குமார். இவர், தமிழ்நாடு தீயணைப்பு வீரர் பணிக்கு தேர்வாகி இருந்தார். நேற்று, கொழும்பலூர் கிராமத்தைச் சேர்ந்த விநாயகசுந்தரம் என்பவருடன் வேலன்தாங்கல் கூட்டுரோட்டிலிருந்து கடலாடிக் குளம் நோக்கி நடந்து சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, திருவண்ணாமலையிலிருந்து செஞ்சி நோக்கி வந்த கார் மோதி அசோக் சம்பவ இடத்திலேயே பலியானார். விநாயகசுந்தரம் படுகாயமடைந்தார்.

News October 18, 2024

திமுக அரசு தோல்வியடைந்துவிட்டது: ராமதாஸ்

image

விழுப்புரம் மாவட்டம், வானூர் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் நேற்று பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழக அரசு வரும் நிதியாண்டில் கல்விக்கான நிதி ரூ.1 லட்சம் கோடியும், சுகாதாரத் துறைக்கு ரூ.50 ஆயிரம் கோடியும் ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும், சென்னையில் மழைநீர் வடிகால் உள்ளிட்ட வெள்ள தடுப்பு பணிகள் மேற்கொள்வதில் திமுக அரசு தோல்வியடைந்துவிட்டது எனவும் தெரிவித்தார்.

News October 18, 2024

குழந்தை மீது டிவி விழுந்து உயிரிழப்பு

image

திண்டிவனம் அடுத்த கிடங்கல்-1 பகுதியைச் சேர்ந்தவர் உதயகுமார். இவரது குழந்தை தஸ்வின் (2), கடந்த 11ஆம் தேதி வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக குழந்தை மீது டிவி விழுந்தது. பெற்றோர், உடனடியாக ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. இந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது. இதுகுறித்து திண்டிவனம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News October 18, 2024

அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் மழை பெய்யும்

image

விழுப்புரம் மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (காலை 10 மணி வரை) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று காலை கரையை கடந்த நிலையில், நேற்று மழை குறைவாகவே பெய்தது. இந்நிலையில், வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வருவதாகக் கூறப்படுகிறது. எனவே, பொதுமக்கள் எச்சரிக்கையாக இருங்கள்.

News October 18, 2024

பட்டாசு விற்பனைக்கு உரிமம் பெற நாளை கடைசி நாள்

image

தீபாவளி பண்டிகையையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு விற்பனை செய்ய உரிமம் வழங்கப்பட உள்ளது. விருப்பமுள்ளவர்கள் அரசு பொது இ-சேவை மையத்தில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். நேரடி விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது. எனவே, உரிமம் பெற விருப்பமுள்ளவர்கள் நாளைக்குள் (அக்.19) விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார். உடனே ஷேர் பண்ணுங்க

News October 17, 2024

விழுப்புரம் இரவு நேர ரோந்து காவலர்களின் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (17.10.2024) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News October 17, 2024

சட்டமன்ற தேர்தல் பார்வையாளர் அறிமுகக் கூட்டம்

image

செஞ்சி தொகுதி திமுக தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள மாநில இளைஞரணி துணை செயலாளர் அப்துல் மாலிக் மற்றும் தொகுதி நிர்வாகிகள் அறிமுகம் கூட்டம் இன்று (அக்.17) செஞ்சி தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் செஞ்சி எம்.எல்.ஏ மஸ்தான், திமுக மாவட்ட பொருளாளர் சேகர் உட்பட ஒன்றிய நகர பொது குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

News October 17, 2024

“முதலமைச்சர் பிரதமரை சந்தித்த பின் கதையே மாறிவிட்டது”

image

விழுப்புரம் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் 53ஆவது ஆண்டு தொடக்க விழாவில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் அளித்த பேட்டியில், “நேற்று வரை குறை கூறிக் கொண்டு இருந்த ஆளுநர் இன்று வானளவு பாராட்டிக் கொண்டிருக்கிறார். முதலமைச்சர் டெல்லி சென்று பிரதமரை சந்தித்த பின் கதையே மாறிவிட்டது” என்று கூறினார். 

News October 17, 2024

மதுபான கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம்: ராமதாஸ்

image

வானூர் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், “விழுப்புரம் மாவட்டத்தில் கொந்தமூர் மற்றும் நல்லாவூர் கிராமப்பகுதியில் புதிய மதுபானக்கடைகளை திறக்கும் முடிவை தமிழக அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும். முடிவை கைவிடாவிட்டால் நானே என் தலைமையில் அரசு மதுபானக்கடைகளுக்கு பூட்டுபோட்டு போராட்டம் நடத்துவேன்” என்று தெரிவித்தார்.

error: Content is protected !!