India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

விழுப்புரம் மாவட்ட பெண்களே.., நீங்கள் சொந்தமாக தொழில் தொடங்க, விரிவுப்படுத்த ஆசையா..? மத்திய அரசின் ’மகிளா உத்யம் நிதி யோஜனா’ திட்டம் மூலம் ரூ.10 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. மிகக் குறைவான வட்டி விகிதத்தில் பிணையமின்றி இந்தத் தொகை வழங்கப்படும். 10 ஆண்டுகள் வரை கடனை திருப்பி செலுத்தலாம். உடனே அருகில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியை அணுகவும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

டிஜிட்டல் யுகத்தில், UPI பரிவர்த்தனை பிரபலமாக உள்ளது. தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!

விழுப்புரம் – திருக்கோவிலூர் சாலையில் உள்ள இந்திரா நகர் பகுதியில். பிரதான சாலையை கடக்க முயன்ற புள்ளிமான் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த மான் சம்பவ இடத்திலேயே இறந்தது. இத்தகவல் அறித்த வனத்துறையினர் மானின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். விழுப்புரத்தில் அடிக்கடி சாலை விபத்துகளில் மான்கள் உயிரிழப்பது தொடர்கிறது.

கேஸ் மானியம் ₹300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர, எல்பிஜி இணைப்பை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். உங்கள் கேஸ் வழங்குநரின் (Indane, HP, Bharat) இணையதளத்திற்குச் சென்று, ‘Link Aadhaar’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நுகர்வோர் எண், மொபைல் எண், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்யலாம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே மானியத்தைப் பெறலாம். இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்

விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த திருவக்கரை பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன் மகன் நந்தகோபால். இவர் திருவக்கரை பகுதியில் பட்டாசு தயாரிக்கப்படும் வெடிபொருட்களை பயன்படுத்தி வெடிகுண்டு தயார் செய்து பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் வெடித்து அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வந்தார். அதைத்தொடர்ந்து வானூர் போலீசார் நந்தகோபாலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்திய ரயில்வேயில் Senior Publicity Inspector, லேப் அசிஸ்டன்ட், Law Assistant, translator உள்ளிட்ட 15 பதவிகளுக்கு மொத்தம் 312 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் லேப் அசிஸ்டன்ட் பணிக்கு 12ஆம் வகுப்பும், மற்ற பிரிவுகளுக்கு சம்மந்தப்பட்ட துறைகளில் டிகிரியும் முடித்திருக்க வேண்டும். சம்பளம்: Rs.44,900. விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி-29. இந்த <

விழுப்புரம்: சென்னையை சேர்ந்த அதிதிகுப்தா (22) தனது நண்பர்கள் 4 பேருடன் புத்தாண்டை கொண்டாட புதுச்சேரி சென்றுள்ளார். திண்டிவனம் அருகே கிளியனூர் அருகே சென்றபோது, ஒரு பைக் குறுக்கே வந்ததால், மோதாமல் இருக்க காரை திருப்பினார் டிரைவர். இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் பயங்கர விபத்துக்குள்ளானது. இதில் அனைவரும் படுகாயமடைந்த நிலையில், அதிதி உயிரிழந்தார். இது குறித்த வழக்கில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விழுப்புரம்: சென்னையை சேர்ந்த அதிதிகுப்தா (22) தனது நண்பர்கள் 4 பேருடன் புத்தாண்டை கொண்டாட புதுச்சேரி சென்றுள்ளார். திண்டிவனம் அருகே கிளியனூர் அருகே சென்றபோது, ஒரு பைக் குறுக்கே வந்ததால், மோதாமல் இருக்க காரை திருப்பினார் டிரைவர். இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் பயங்கர விபத்துக்குள்ளானது. இதில் அனைவரும் படுகாயமடைந்த நிலையில், அதிதி உயிரிழந்தார். இது குறித்த வழக்கில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திண்டிவனம் பகுதியைச் சேர்ந்த துளசிங்கம், நேற்று தனது மகன் நவீன்ஸ்ரீ-யை (11) மொபெட்டில் அமர வைத்துக் கொண்டு, நடுவனந்தலில் இருந்து – ஆகூா் பகுதிக்குச் சென்று கொண்டிருந்தாா். அப்போது, எதிா் திசையில் வந்த லாரி வழிவிடுவதற்காக துளசிங்கம் மொபெட் மீது மோதியதில் சிறுவன் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து, வெள்ளிமேடுபேட்டை போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

வந்தவாசியைச் சேர்ந்த முருகன் மகள் ஸ்ரீ ஹர்ஷா (5), திண்டிவனம் அருகேயுள்ள தனது அத்தை வீட்டிற்கு தாயுடன் வந்திருந்தார். அப்போது, விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது 10 அடி ஆழம் உள்ள தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தார். உடன் குடும்பத்தினர் சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.