India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திண்டிவனம் அருகே உள்ள மேல்மாவிலங்கை ஊராட்சி கல்பாக்கம் கிராமத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இன்று கிராம மக்கள் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில், தங்களது மயானத்திற்கு அருகில் புதிதாக கட்டியுள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டியினை அகற்றக்கூடாது என்றும் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அவர்களை தமிழக அரசு கைவிட்டு விடாது என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார். தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் இலவச கல்வி, ஆசிரியர்கள் பாதுகாப்பு மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள தனியார் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
விக்கிரவாண்டி அடுத்த ராதாபுரம் அருகே நேற்று விழுப்புரம்-புதுச்சேரி சாலையில் சென்று கொண்டிருந்த காரின் டயர் திடீரென வெடித்தது. இதனால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் சென்று கொண்டிருந்த மூன்று பைக்குகள் மீது அடுத்தடுத்து மோதியது. இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். 3 பேர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிந்து தப்பியோடிய கார் ஓட்டுநரை தேடி வருகின்றனர்.
இந்திய கடலோர பாதுகாப்பு படையில் சேர விருப்பமுள்ள விழுப்புரம் கடலூர் மாவட்ட மீனவ சமுதாய சேர்ந்த இளைஞர்கள், கடலூர் கடலோர பாதுகாப்பு குழும ஆய்வாளர் அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்று விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி பிளஸ் டூ தேர்வில் 50% மேல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். தகுதியுடைய நபர்களுக்கு 3 மாத இலவச பயிற்சி வழங்கப்படும் என கடலோர பாதுகாப்பு குழும போலீசாரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் கல்பட்டு நோக்கி சென்ற அரசு பேருந்தும், வேனும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 15 பேர் காயமடைந்தனர். காயம் அடைந்தவர்களை மக்கள் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாடு மின்சார வாரியம் மக்களுக்கு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, மின்சார வாரியத்தில் ஏதேனும் புகார்கள் இருந்தால், வாட்ஸ்-அப் எண்களில் தெரிவிக்கலாம். இதற்கான மண்டல வாரியாக எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்களின் புகார்களுக்கு வாட்ஸ் ஆப் எண்: 94458 55768. எனவே மக்கள் தங்களது புகார்களை மேற்கண்ட எண்ணில் வாட்ஸ்-அப் வழியாக தெரிவித்து பயன்பெறலாம்.
வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக வரும் நவ.13ஆம் தேதி முதல் விழுப்புரம் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், விழுப்புரம் மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட ரயில்வே பாலத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் விரைவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி விழுப்புரம்-திருச்சி மேமு விரைவு ரயில் நவ-12 முதல் 21- வரை பொன்மலை வரை மட்டும் இயக்கப்படும். மறுமார்க்கமாக ரயிலானது பொன்மலையிலிருந்து புறப்பட்டு விழுப்புரம் வந்தடையும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
விழுப்புரம் நகராட்சி உட்பட்ட தனியார் திருமண மண்டபத்தில், விழுப்புரம் நகராட்சி 18ஆவது வார்டு திமுக நிர்வாகி அரவிந்த் இல்ல திருமண வரவேற்பு விழாவில் விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக மாவட்ட பொறுப்பாளர், பொன்.கௌதமசிகாமணி இன்று (நவம்பர் 9) கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். உடன் மாவட்ட பொருளாளர் ஜனகராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் இருந்தனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (09.11.2024) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
Sorry, no posts matched your criteria.