India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த கனமழையால், அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி வருகிறது. இந்நிலையில், ஓங்கூர் ஆற்றில் நீர் பெருக்கெடுத்து, மரக்காணம் அடுத்துள்ள கந்தாடு பகுதியில் உள்ள காணி மேடு – மண்டகப்பட்டு இடையே உள்ள தரைப்பாலம் நீரில் மூழ்கியது. இதனால் 300க்கும் மேற்பட்ட மக்கள் தங்களது ஊரில் இருந்து வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு விவரம் வெளியிடப்பட்டுள்ளது. விழுப்புரம் 0.0 மில்லி மீட்டர், வானூர் 3 மில்லி மீட்டர், மரக்காணம் 35 மில்லி மீட்டர், செஞ்சி 24 மில்லி மீட்டர், செம்மேடு 2.80 மில்லி மீட்டர், வல்லம் 6 மில்லி மீட்டர், அவலூர்பேட்டை 82 மில்லி மீட்டர், திருவெண்ணைநல்லூர் 0.0 மில்லி மீட்டர், வளத்தி 6 மில்லி மீட்டர். சராசரியாக 7.28 மில்லி மீட்டர் பதிவாகியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூரில், அதிமுக ஒன்றிய செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், “அண்ணா தொடங்கிய திமுக இப்போது இல்லை. ஆனால், பவள விழா கொண்டாட்டம். 2026 தேர்தலில் எனக்கு சீட்டு தருவார்களோ, மாட்டார்களோ என அமைச்சர் பொன்முடி பேசும் அளவிற்கு திமுகவின் நிலவரம் கலவரமாக உள்ளது” என பேசியுள்ளார்.
விக்கிரவாண்டியில் நடந்த நாதக கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். பின், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “கவர்னரை மாற்ற சொன்ன திமுக, இப்போது பாராட்டுகிறது. தற்போது தமிழகத்தில் பாஜக கூட்டணி ஆட்சி தான். பாஜகவுக்கு நாங்கள் தான் ‘B’ டீம் என திமுக கூறுகிறது. ஆம், திமுக ‘A’ டீமாக உள்ளபோது, நாங்கள் ‘B’ டீம் தான்” என்றார்.
விக்கிரவாண்டி-விழுப்புரம் இடையேயான ரயில் தண்டவாளத்தில், பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருக்கிறது. இதனால், இன்று காலை 11:45 மணிக்கு புறப்படவுள்ள மேல்மருவத்தூர்-விழுப்புரம் பயணிகள் ரயில் (06725) விக்கிரவாண்டியுடன் நிறுத்தப்பட உள்ளது. மறுமர்க்கமாக, விழுப்புரம் – மேல்மருவத்தூர் பயணிகள் ரயில் (06726) மீண்டும் விக்கிரவாண்டில் இருந்து புறப்பட்டு செல்லும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க
கனமழை காரணமாக, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளுக்கு ஏற்கெனவே சனிக்கிழமை வாரஇறுதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், தனியார் பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வருவதால், இந்த விடுமுறையானது அளிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க
திண்டிவனம் ஓமந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கோகிலன் (28). அவரது மனைவி ராஜேஸ்வரி, தனது 4 மாத குழந்தையுடன் மரக்காணம் செட்டிகுப்பத்தில் உள்ள தாய் வீட்டில் தங்கியிருந்தார். நேற்று அதிகாலை தூங்கிக் கொண்டிருந்த குழந்தை, அசைவின்றி கிடந்ததால் மரக்காணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மரக்காணம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (18.10.2024) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் இன்று 31 மாவட்டத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்தால் உடனே தெரிவிக்கவும்.
வரும் 2026ஆம் ஆண்டு நடைபெறும் தமிழக சட்டசபை தேர்தலில், எனக்கு கூட சீட் கிடைக்காமல் போகலாம் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரத்தில் இன்று நடந்த திமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், வாக்குச் சாவடி முகவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். வரும் சட்டசபை தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் யார் வேண்டுமானாலும் நிறுத்தப்படலாம் எனத் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.