India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அப்புறம் அறிஞர் அண்ணா அரசினர் கலைக் கல்லூரியில் 1994 -1997 மற்றும் 1995 -1998 ஆண்டு பொறியியல் மற்றும் வரலாற்று துறை முன்னாள் மாணவர்கள் 25 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி அழகிய சந்திப்பு விழா நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் சிவக்குமார், முன்னாள் பொருளியல் துறை தலைவர் ராமநாதன் மற்றும் முன்னாள் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (20.10.2024) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
விழுப்புரத்தில் இன்று இரவு 7 மணி வரை இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட தமிழக கடலோர பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிழவுவதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 3 தினங்களுக்கு ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தின் நேற்றைய மழையளவு விபரம் வெளியிடப்பட்டுள்ளது. விழுப்புரம் 6.9 மில்லி மீட்டர், திண்டிவனம் 5 மில்லி மீட்டர், மரக்காணம் 5 மில்லி மீட்டர், செஞ்சி 4 மில்லி மீட்டர், வல்லம் 2 மில்லி மீட்டர், அவலூர்பேட்டை 0.0 மில்லி மீட்டர், வானூர் 2 மில்லி மீட்டர், திருவெண்ணைநல்லூர் 2 மில்லி மீட்டர், சூரப்பட்டு 2 மில்லி மீட்டர். சராசரியாக 2.90 மில்லி மீட்டர் பதிவாகியுள்ளது. ஷேர் பண்ணுங்க
வரும் 27ஆம் தேதி நடைபெறவுள்ள த.வெ.க. மாநாட்டிற்கு கர்ப்பிணிகள், பள்ளிச் சிறுவர் சிறுமியர், குழந்தைகள், நீண்ட காலமாக உடல் நலமின்றி இருப்பவர்கள், முதியோர் உள்ளிட்டோர் வர வேண்டாம் என அக்கட்சியின் தலைவர் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார். நீண்ட தூரப் பயணம் அவர்களுக்கு உடல் ரீதியாக சிரமத்தை ஏற்படுத்தக் கூடும், அதனால் அவர்களின் குடும்ப உறுப்பினர் என்ற உரிமையில் இதைச் சொல்கிறேன் என விஜய் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கம் விழுப்புரம் சார்பாக, தமிழ்நாட்டில் கள் விற்பதற்கான தடையை நீக்க வேண்டும் என முதல்வருக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டிருந்தது. இதற்கு அரசு பதில் கடிதம் அனுப்பி உள்ளது. அதில், “தமிழகத்தில் கள் விற்க & இறக்க தடை இருப்பதால் இதனை ஏற்க முடியாது” எனக் குறிப்பிட்டிருந்தது. இதையடுத்து, தடை செய்வதற்கான அறிவியல் காரணங்களை அரசு கூற வேண்டும் என பனையேறிகள் கேட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் கல்லூரி நகரைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். இவர், சிறிய தொகை முதலீடு செய்தால் அதிக வட்டி பெறலாம் எனக்கூறி மேல்மலையனூர் கோட்டப்பூண்டியைச் சேர்ந்த எழிலரசனிடம் ரூ.4.20 லட்சம் என பலரிடம் இருந்து சுமார் ரூ.72 லட்சம் பெற்றுக் கொண்டு ஏமாற்றியுள்ளார். இதுகுறித்து இளநரசன் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து தமிழ்ச்செல்வனை கைது செய்தனர்.
ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்ளும் மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு ரூ.1 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என விழுப்புரம் கலெக்டர் தெரிவித்துள்ளாா். பகுதி அல்லது முழு நேர ஆராய்ச்சிப் படிப்பு படிப்பவா்களுக்கு மட்டுமே வழங்கப்படும். வருமான உச்சவரம்பு எதுவும் இல்லை. அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பயிலுபவராக இருக்க வேண்டும். சான்றிதழ்களை சம்பந்தப்பட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம் சமா்ப்பிக்க வேண்டும்.
விக்கிரவாண்டியில், த.வெ.க. முதல் மாநாடு வருகின்ற 27ஆம் தேதி நடைபெற உள்ளது. மாநாட்டுக்கு 5 உள்ளே வரும் வழிகள், 15 வெளியேறும் வழிகள், 4 பார்க்கிங் இடங்கள், பார்க்கிங் முதல் மாநாடு வரை 500+ சிசிடிவி கேமராக்கள், பகுதி வாரியாக பிரித்து அனைத்து பகுதிகளிலும் குடிநீர் வசதி வைக்கப்பட்டுள்ளது. பொருட்கள், ஆட்கள் காணாமல் போனால் கண்டுபிடிக்க கண்டுபிடிப்பு பகுதி போன்ற பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.
மேல்மலையனூர் வட்டம், பெருவளூர் அருள்மிகு கோடீஸ்வரர் சுவாமி திருக்கோவிலில் கட்டப்பட்டு வரும் கட்டிடத்தை சுற்றி முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். உடன் அறநிலையத்துறை ஆணையர், மேல்மலையனூர் ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் இருந்தனர்.
Sorry, no posts matched your criteria.